Saturday, November 16, 2013

பிஸ்ஸா 2 வில்லா - Mystical Thriller



வரைமுறைகளை கடக்கும் இன்னொரு திகில் பரிமாணம். சூனியங்களின் எதிர்மறை விளக்கம் தான் வில்லா. திகிலை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது பிஸ்ஸா என்ற தலைப்பின் தலைப்பாய் போனதால்.

யாரிந்த தீபன்?
நாளைய இயக்குனர் இறுதி போட்டியாளர்களில் ஒருவர். அந்த தகுதி தான் இப்பொழுது தமிழ் திரையுலகை மிகவும் குறைவான பட்ஜெட்டில் அதிகம் வசூலிக்கிறது. தீபனின் அமுதா குறும்படம் ஒன்று போதும் திகிலுக்கு மறுபெயர் மனதில் எழும் அச்சம் தான் என்பது புரியும்.

வில்லாவில் என்ன இருக்கிறது?
நம் முன்னோர்கள் வரையறுத்த வாஸ்துவின் விளக்கம் தான் வில்லா. நாமே நமக்குன்னு ஏற்படுத்தி கொள்ளும் தினம் செய்யும் சில பழக்கங்கள் ஏன்? சும்மா இப்படி பண்ணா நல்லது நடக்கும் நினைக்கிறது அது தான் நாம் ஏற்படுத்தி கொள்ளும் பாசிடிவ் சக்தி. இங்க அதை தான் 1மணிநேரம் 42நிமிஷம் நெகடிவ் சக்தியை எப்படி பாசிடிவ் ஆக காட்ட முடியுமோ அப்படி திரைபடுத்தி இருக்கிறார் தீபன். படம் ஆரம்பித்து வில்லாவை காட்டும் வரை மக்கள் சோம்பல் முறிக்க நேரம் கொடுத்து விட்டு, படம்  ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும் போது தான் சில நேரம் மூச்சு விட தவறியதை உணர முடிகிறது ஏனென்றால் திகிலால் அல்ல அதில் இருக்கும் மர்மங்கள் நாம் ஓட்டி பார்க்கும் போது. 

வில்லாவும் மென்மையான இசையும் மிரட்டல் ஒலிகளும்:
காணும் ஞானம் பாடல் பயத்திற்கும் ஞாபகத்திற்க்கும் பயன் படுத்த பட்டிருக்கு. இப்பவும் headset இல் கேக்கும் போது ஏதோ ஒன்று நினைக்க தோனுகிறது அதுவே காட்சியாய் வரும் போது திகிலுக்கு புது அர்த்தத்தை தருகிறது. ஒலி அலை அதிர்வை உணர வைத்த காட்சி இப்பொழுதும் கேட்கிறது. அப்படி இசையும் ஒலியும் விளையாடியவாறு கொடுத்த சந்தோஷ்க்கும் சங்கருக்கும் நன்றியும் பாராட்டும்.

வில்லாவும் கலையும் ஒளிப்பதிவும்:
ஒரு பழங்கால வில்லா அதில் பல ஓவியங்கள் மற்றும் கலையாற்றல் மிக்க பொருட்கள் உண்மையில் கலை இயக்குனர் மாயன்  அதிக மெனக்கெட்டு இருக்க வேண்டும். அதனை நம் கண்களுக்கு விருந்தாக்கிய ஒளிப்பதிவாளரும்(தீபக்) சளைத்தவர் அல்ல. 

நடிகர்கள் வில்லாவினில்:
அசோக் எழுத்தாளருக்கான விறைப்பும் முறைப்பும்.சஞ்சிதா இளமையும் எதிர்பார்ப்பும். மற்றும் சில நடிகர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். புதுமுகமாய் தெரிவதால் தான் படத்திற்கு இவர்களால் பலம் கூடுகிறது.

டைரக்டர் டச்:
நாசர்: you cannot change anything and everything!
டைரக்டர்: ஆமா உண்மை தான்! ஆனா திகில் படத்துக்கான வரைமுறைகளை மாத்த முடியும்.

இந்த படம் வேற மாறி பிஸ்ஸா முதல் பகுதி திகில் படம் இது மாயை(mystical thriller) ஆனா அத பத்தி ரொம்ப நேரம் யோசிக்க வைக்கும்.

மூன்றாம் பாகமும் எடுக்கப்படலாம்!

என்றும் அன்புடன்,
ரசல்

Saturday, November 9, 2013

பாண்டியநாடு - பொழுதுபோக்கு விமர்சனம்




சுசீந்தரன் மீண்டும் ஒரு "நான் மகான் அல்ல"  பாணியில் மதுரையை தழுவி எடுக்க பட்ட குடும்பம் + அதிரடி படம். commercial படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் உதாரணம். நம் தமிழ்நாட்டில் கலை ரசிகர்களை விட timepass க்காக மட்டும் படம் பார்பவர்கள் அதிகம் ஏனென்றால் உழைப்பாளர்கள் தான் நாம் பெரும்பாலும். சோம்பலை முறிக்க படம் பார்க்கும் போது படங்கள் கலையை நோக்கி போகும் போது மேலும் சோம்பல் தரும் சூழ்நிலை, படத்தின் காரணமாய் இல்லை படம் பார்பவரின் மனநிலையால்.

இங்கே அப்பா,அம்மா,அண்ணன்,அண்ணி,குழந்தைகள் என  குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான தினமும் பார்க்கும் காட்சிகள். ஒரு வில்லன் எப்படி அவனே உருவாகிறான் ஆக்ரோஷமாய் ஆட்டி படைக்கும் கதாபாத்திரம். ஒரு காதல் அதுவும் கண்டதும் காதல் அதை வளர்க்க கதாநாயகனின் முயற்சிகள். நாலு பாட்டு கேக்கரமாரி.நட்புடன் சில நண்பர்கள். வில்லனை பழிவாங்க போராடும் பயந்தாங்கோலி கதாநாயகனும் வயதான தந்தையும். இவை எல்லாவற்றையும் திரைகதையாய் உருவாக்கி சீட்டின் நுனியில் அடுத்து என்ன என யோசிப்பதற்க்குள் சுவாரசியம் வைத்த விதம் தான் இந்த படத்தை வெற்றியாக்கி உள்ளது.

விஷாலுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு வெற்றி இதில் தொடையை தட்டவில்லை,வரேண்டா,போறேண்டா, மதுரைகாரண்டா  போன்ற வசனங்கள் இல்லாமல் ஒரு நடுத்தர வாலிபன் சமுதாயத்தில் எதற்கும் சண்டை போடாமல் கண்களில் பயத்தை வில்லனை காணும் போதும் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் கதாபாத்திரம். பாரதிராஜா அயுதயெழுத்தில் நடித்திருந்த பொழுதும் பாதிநேரம் குரல் கேக்காமல் போனது ஆனால் இங்கே அந்த குறையை போக்கிவிட்டார். அடடா அவர் எத்தனை பேருக்கு நடிக்க கற்றுகொடுதிருப்பார் அவரிடம் இப்படி ஒரு கதாபாத்திரம் பல நாள் பேசப்படலாம். இமான் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் சுவாரசியம் கூட்டுகிறது.

நான் படம் பார்க்கும் போது மக்கள் எந்த அளவுக்கு ரசித்திருந்தால் விஷால் நண்பனை கொன்றவனை அடிக்கும் முதல் அடிக்கு கைதட்டி கூச்சளிட்டிருப்பார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. கடைசியாக பாரதிராஜா விஷாலின் கரங்களை பற்றிக்கொண்டு பேசாமல் உணர்வுபூர்வமாய் நடிக்கும் நடிப்பு அது சுசீந்திரன் கைகளை பற்றிக்கொண்டு இந்த தலைமுறை உங்களை போன்ற இயக்குனர்கள் கையில் தான் உள்ளது என்பதை போல் இருந்தது.

ரொம்ப நாள் பிறகு நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி.

என்றும் அன்புடன்,
ரசல் 

Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



தோரணை:
காட்டில் வாழும் மிருகங்கள் கரடி,ஓநாய்,ஆடு,புலி இவை எல்லாமும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் கதை. ஆனால் ஏன் காட்டின் ராஜா சிங்கம் வரவில்லை என்ற கேள்விக்கு? தெரிந்த விடை இசையின் ராஜா சிங்கமாய் தன் கர்ஜிக்கும் இசையில் மொத்த படத்தின் ஓட்டமும் நிறைவு பெறுகிறது. இளையராஜா இசையின் ராஜா என்பதை இன்றும் பூர்த்தி செய்கிறார்,அதை மிஷ்கின் இங்கே பின்னணி இசையென குறிபிடாமல் முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என படத்தின் பெயருக்கு முன் போட்டவிதமே படத்திற்கு தோரணை கட்டி அழகு சேர்தலாயிற்று.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இசை கோர்வையும்:
படத்தில் மொத்தம் மூன்று அல்ல நான்கு பதிவுகள் பகலில் வந்திருக்கலாம் மற்று முழு படமும் இரவில் அரங்கேறுகிறது ஆக மின்மினி பூச்சிகளின் சத்தம் ஆங்கங்கே புற்களும் மரங்களும் அதிகம் நிறைந்த இடத்தில் வந்து போவது எவ்வளவு கூர்மையாய் படத்தொகுப்பும் இசை ஒலியும் ஒன்றி போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

மின்மினி பூச்சியை விட அழகானது ஓசையே இல்லாமல் சில இடங்கள் வந்து போவது. அதனினும் அழகானது கண்ணீர்,வேதனை,தேடல்,ஆச்சர்யம்,வலி,பதட்டம் இவை போல் பல சூழ்நிலைகளை படத்தொகுப்பும் இசையும் ஒவ்வொருவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கிறது.

இந்த படம் மூலம் ஒளிப்பதிவாளர் பாலாஜி வீ  ரங்கா புத்தம்புது வண்ணம் திரைப்படத்திற்கு ஊட்டுகிறார்.

கதாபாத்திரமும் கதையும்:
மிஷ்கின் படத்திற்கே உரிய வெற்றி வியுகங்கள் ஆங்கங்கே தெளித்துவிட்டு. படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்திருக்கின்றனர். அதில் சிலர் சில நிமிடமே வந்தாலும் பேசவைகின்றனர். அப்படி பட்டர்வர்கள் சிலரை குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது ஆனால் கதையும் முழுதாய் விளக்க முடியாது. அவைகளுள் பல..

காவல்துறை கதாபத்திரங்கள் 
நல்ல போலீஸ்,கெட்ட போலீஸ்,பச்சோந்தி போலீஸ் மற்றும் உயிரைகொடுக்கும் போலீஸ்.

மக்கள் கதாபாத்திரங்கள்
பைத்தியக்காரன்,HOD மருத்துவர்,கண் தெரியா அம்மா அப்பா மகள் குடும்பம்,திருநங்கை,கண் தெரியாதவர்களின் பாடல் குழு,வாட்ச்மேன்,ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பணத்திற்காக விசுவாசத்திற்காக உயிர் பறிக்கும் கொலைகாரர்கள்.

முக்கிய கதாபாத்திரங்கள்
மிஷ்கின் ஓநாயாய் ஸ்ரீ ஆட்டுகுட்டியாய் 

இப்படி மேலே குறிபிட்டவர்கள் அனைவரும் இரு இரவில் பங்கேற்கும் கதை துளி நேரம் தொய்வில்லாமல் நகர்கிறது. 

சண்டைக்காட்சியும் மிஷ்கினும்:
ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அவ்வளவு நேர்த்தி. மிஷ்கின் உண்மையிலே சண்டைபோடுவதை போல் சிலிர்க்க வைக்கிறார் குறிப்பாக கிளைமாக்ஸ்ல். அதிகம் வன்முறை இருந்தாலும் அவையாவும் திணிக்க பட்டவை அல்ல கதையின் ஓட்டத்திற்கு தேவைபடுபவை. 

நானும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:
திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் கூட்டமல் வெளியிட்ட போதே எனக்குள் இருக்கும் ரசிகன் திரை அரங்கம் தேட ஆரம்பித்து விட்டான். கிடைத்தது எங்கே என்று ஆனால் நல்ல திரைப்படங்கள் பெரிய திரைஅரங்கில் வெளியிட யோசிக்கும் போது பெங்களூரில் என் குடியிருப்பு அருகாமையில் BGRADE படங்களை திரையிடும் திரைஅரங்கில் வெளியானது.ஒரு பக்கம் மனம் வருந்தினாலும் படத்தை பார்த்து முடித்தவுடன் அந்த திரைஅரங்கின் ஊழியரிடம் நன்றி கூறி வந்தேன். இங்கே கலைதாகம் தீர ஆட்டுகுட்டியாய் என்னோடு வந்த நட்பு ஆடுகளையும் இந்த ஓநாய்க்கு(மிஷ்கின்) இரையாக்கி வந்தேன் மகிழ்ச்சியுடன்.

கண்டிப்பாக கூறுவேன் இது 100 வருட சினிமாவிற்கு இந்த படம் மேலும் ஒரு அலங்கரிப்பு.


என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, August 31, 2013

கவிதை நடையில் "தங்கமீன்கள்"



கவிதை நடையில்  "தங்கமீன்கள்"


மகிழ்ச்சி:

இரண்டாம் தாயாய் செல்லம்மாவை தோளில் சுமந்த 
கல்யாணியின் கபடமில்லா தெளிவுரையை 
வெள்ளித்திரையில் கண்டேன்!

பாத்திரபடைப்பு:

கல்யாணி என அழைக்கபடும் தந்தைக்கும் 
வடிவு என்ற தாயுக்கும் சிறு வயது காதலில் 
பிறந்த செல்லம்மா கதாநாயகியாய் 
கதையில் வரும் உறவுகள் 
கதாநாயகர்களாய்!

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள  பாசத்தை மட்டும் கூறவில்லை
ஒரு ஆண்மகனின் 
தந்தை,தாய்,மாணவி,அண்ணன் மற்றும் நண்பன் 
என்ற உறவுகளோடு தன்னையே வருத்திக்கொள்ளும் 
வாழ்வாதாரத்தின் போராட்டம்!

செல்லம்மாவும் கல்யாணியும்:

கிளிபிள்ளையின் கேள்விகளுக்கு 
அன்பாய் அரவணைத்து கூறினால் 
அப்பிள்ளையும் அறிவாளிதான்!

எது என்ன விலை என்று தெரியும் போது 
அக்குழந்தைகள் தந்தை சுமை அறிந்து 
கேட்பதில்லை!

ஆனால் அது தெரியும் வரை முடிந்தவரை 
முடியாது என்ற வார்த்தையை கூற 
வருத்தப்படும் கல்யாணி!

தந்தை கூறினால் அது உண்மையாக தான் இருக்கும் 
அவர்போல் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் ஒருவர் வந்தால் 
அவர் கூறுவதையும் கேட்டுக்கொள்ளும் செல்லம்மா!

அதுவரை ஒரு கேள்விக்கு பல பதில்கள் உண்டென
கூறுவதில் கெட்டிக்காரி அவள்!
அதில் அர்த்தம் புரிந்தவன் கைதட்டுகிறான்!

இசையும் ஒளிப்பதிவும்:

ஒளி சேர்க்கையில் ஒலி விளையாடியது 
கரடு முரடான பாதையின் காட்சியில் பசுமை 
இசை சேர்ந்தபின் அதன் செழுமையில் 
கண்களும் செவிகளும் அதன் காட்சிக்குள்ளயே 
சஞ்சரிக்கும்!

பிரிவும் கண்ணீரும் ஏற்படுத்தும் வலியை 
இசை தாங்கி செல்கிறது கூடவே மனமும் 
இறுகியது!

எழுத்தும் இயக்கமும்:

தமிழ் கல்வியும் அதன் நிலைமையும் தான் கற்றது தமிழ்! 
தனியார் பள்ளியும் அதனால் தனியாய் போன தந்தையும் தான் 
தங்கமீன்கள்!

பணமும் மனமும் ஒன்று சேரும் போது  வாழ்வியலில் 
சந்தோஷத்தை இழக்கும் என 
கவிதை நடையில் தன் கதை நெறியில் 
விளக்கபாடம் எடுத்ததற்கு 
கண்களில் நீர் ததும்ப 
நன்றிகள்!

இதற்குமேல் இந்த உறவை பற்றி  பதிவு செய்யப்பட்டால் 
பணம் கொடுத்து படம் பார்க்கும் உங்களை நான் வழிநடத்தி 
சென்றது போல் ஆகிவிடும்!


பலகோடி பாராட்டுகள் கேக்கட்டும் இந்த 
உண்மை படைப்பாளியின் உன்னத படைப்பிற்காக!

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, August 20, 2013

ஆதலால் காதல் செய்வீர்!

ஆதலால் காதல் செய்வீர்!



ராஜபாட்டை தந்த தோல்வி,அதன் பின்னர் மக்களிடம் கூறிய மன்னிப்பு,ஒரு உண்மை படைப்பாளியின் சமுகத்தின் மீதுள்ள  கோவம், இவை யாவும்  படத்தை பார்த்தவர்களை கன்னத்தில் அறைந்த முயற்சி தான் ஆதலால் காதல் செய்வீர்.

காதலை வரையறை இல்லாமல் பார்த்துவிட்ட நமக்கு இந்த படம் ஒரு முழுமுதல் தைரியமான படைப்பு. இந்த கால இலங்காதலை எந்த ஒரு சமாதானமும் இல்லாமல் திரையில் சிறு கவர்ச்சியான காட்சியமைப்பு கூட இல்லாமல் காதலின் காமத்தை திரையாக்கிய விதம் தான் படத்தின் முதல் வெற்றி.

சுசிந்தரன் தன்னை எப்படி பட்ட படைப்பாளி என்று இது வரை வந்த படங்களை காட்டிலும் இந்த படத்தின் உழைப்பு தான் மேலோங்கி இருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் முதலில் இந்த கால இளைஞர்கள், அவர்களுக்கு மிக நீண்ட படங்கள் கொடுக்க தேவையில்லை ஒன்றரை மணி நேரம் போதும் என்று முன் பாதி முக்கால் பின் பாதி முக்கால் மணி நேரம் தான் படம். ஆனால் பகிரப்பட்ட ஒன்று அந்த இளைஞர்களை பற்றி தான். கூடவே அவர்களின் முதிராத காதலை அவர்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்து கொள்வர் அதன் மூலம் விளையும் பின்விளைவு இவை யாவும் அடுத்து அடுத்து காட்சிகளாய் அடுக்கி கடைசியில் கண்களையும் உங்கள் மனதையும் இறுக்கி எழ முடியாமல் திரைஅரங்கை விட்டு வெளியே போகும் வழி தெரிந்தும் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடி செல்வீர்.

ஐந்து நிமிட பாடல் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். அந்த பாடல் ஏற்படுத்தும் பரிதாபம் எழுத தேவை இல்லை உணர்ந்தாலே போதும். கடைசியாய் இந்த படத்திற்கு  ஏன் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற பெயர் என்பதை சுசிந்தரன் தான் கூற வேண்டும் ஏனென்றால் எனக்கு தோன்றியது  "காதல் செய்வீர்? ஆதலால்..."  

என்றும் அன்புடன்,
ரசல்

Saturday, July 20, 2013

மரியான் - சாவே இல்லாதவன்!

பரத் பாலா:

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளை பயன்படுத்த தேவையில்லை எளிமையான கதையை கூட கதாபாத்திரங்கள் வென்று விடுவர் என்று மரியான் படம் மூலம் பரத்பாலா விவரிக்கிறார். அப்படியென்ன விதிகளை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதெல்லாம் படத்திற்கு பெயர் போடுவதற்க்கே முப்போது நொடி கிராபிக் காட்சிகள் தேவை படுகிறது இங்கே ஒரே காட்சியில் தங்க நிறத்தில் மரியான் என்று பெயர் போடப்படுகிறது. படத்திற்கு ஏன் இந்த பெயர் அதை எடுத்த எடுப்பிலே மரியான் குறிப்பிடுகிறார்.

மரியான் - சாவே இல்லாதவன்!

இப்படி கதையின் ஆரம்பம் என்று மட்டும் இல்லாமல் எதற்குமே எதார்த்தத்தை மிஞ்சாத வகையில் படம் நகர்கிறது. கொம்பன் சுறா பாடல் சினிமாதனத்தை காட்டினாலும் மற்ற இடங்களில் இது வெறும் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாக தான் நான் பார்க்கிறேன். உதாரணம் சிறுத்தையை முன்னோட்டத்தில் பார்த்துவிட்டு சண்டை காட்சியை எதிர் பார்த்து வந்தால் அது நம் முந்தைய படங்களினால் பழக்கப்பட்டது தான் காரணம். சிறுத்தை கம்பீரமாய் காட்சியளிக்க இங்கே அது கானல் நீரை போன்று கதாநாயகனுக்கு பயத்தை தருகிறது. தன் விளம்பர படங்கள் மற்றும் ஆல்பங்கள் கொடுத்த தைரியத்தில் நானும் கதை சொல்வேன் என்று நிருபித்திருக்கிறார். அடுத்த முயற்சிகள் அனைவரையும் கவரும் என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

தனுஷ்:

ஹிந்தியில் இப்போது தான் அனைவரும் அனாசிய நடிப்பு என்று பாராட்டுகள் குவிந்தது. நான் சவால் இடுகிறேன் தனுஷின் உண்மையான நடிப்பு திறமை எதுவென்று இந்த படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் பாதியில் சுருக்கிய முகம் கடு கடு வென முரட்டு தோல் போர்த்தி கடலில் வேட்டையாடும் மரியான் பிற்பாதியில் காதலுக்காக உயிருக்காக கடலுக்காக உயிர் போய் உயிர் கொடுத்திருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்ட வாழ்த்துரைகள் தேவையில்லை மெய்சிலிர்க்கும் அக்கணங்களே போதும். 

படத்தின் முதல் பாதியில் நண்பனை இழந்து காதலியை அடித்து விட்டு மீண்டும் காதலியிடம் நான் வேற யார்கிட்ட காட்டுவேன் என்று முரட்டு கோபத்தையும் பொய் கோபத்தையும் காட்டும் தனுஷ் சபாஷ் என்று நினைக்கையில். இரண்டாம் பாதியில் நண்பனுக்கு காற்றில் வெறும் தரையில் தலை வாழை இலை போட்டு, மீன், மிளகு சோறு பரிமாறி, கள் குடித்து, பீடி பிடிக்கும் இடத்தில் வார்த்தைகள் இல்லை சில நொடிகள் திகைத்தே நின்றேன். இவ்வருடம் இவ்வளவு நடிப்பில் இது வரை படம் வரவில்லை இன்னும் வராத பட்சத்தில் தனுஷின் வீட்டில் இன்னும் ஒரு தேசிய விருது நிச்சையம்.

பார்வதி:

பூவில் பார்த்த பார்வதி இவள் இல்லை. இவள் பனிமலர் வாடிய பூக்களை கண்ட போதெல்லாம் வாடினேன் இங்கே இந்த பனிமலரின் காதல் காதலனுக்காக உணர்வாய் உறைந்து கிடக்கும் நடிப்புதான் அடுத்த பலம். வெறும் கண்ணீர் விட்டு கதறல் இல்லை நடிப்பில் உச்சரிப்பில் கண்களில் உள்ளது நடிப்பு.

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த விடைபெறும் காட்சி இங்கே ஒரு தொலைபேசி அழைப்பில் இன்னும் பலவருடங்கள் நினைவில் இருக்கும். பனி... மணி.. எல்லாம் முடிஞ்சு போச்சு... தனுஷின் கலங்கடிக்கும் நடிப்புக்கு நிகராய் பார்வதியின் நடிப்பு. சற்று கலங்கிய கண்களில் தான் அதன் பின் வந்த காட்சிகளை பார்த்தேன். இதில் லாஜிக் அத்துமீறல்கள் தென்பட்டாலும் உயிர் போகும் முன் காதலியிடம் பேச நினைக்கும் ஆண்கள் எத்தனை அதில் ஆபத்தில் இருக்கும் காதலன் கண்டிப்பாய் அழைப்பான் என காதலிகள் எத்தனை? இந்த கோணத்தில் பார்க்கும் போது அந்த காட்சி என்னை மிகவும் ஈர்த்தது.


இசைப்புயல் மற்றும் ஒளிபதிவாளர் மார்க் கோநிக்ஸ்:

பாடல்களில் "இன்னும் கொஞ்ச நேரம்" "நேற்று அவள் இருந்தால்" "எங்க போன ராசா" இரவில் காதருகே மெல்லிய இசையில் கேட்டு பழகிய எனக்கு ஒளிபதிவாளர் எடுத்திருக்கும் பல காட்சிகள் அசைபோட்டதாய் தெரிந்தாலும், காரணம் அவரில்லையே அவருக்கு பாடல் காட்சிகள் எடுப்பது புதிது என்பதால். வெள்ளைகாரனை பாடல் காட்சி எடுக்க வைத்தது நம் தவறு. ஆனால் ஒளிபதிவாளர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சியை படம் முழுக்க காட்சி படுத்திய விதம்தான் தனுஷ் பார்வதி நடிப்பை பாராட்ட தூண்டியது. அதற்கும் முக்கிய காரணம் இசைப்புயலின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. 

படம் முழுக்க லைவ் ஆடியோ ரெகார்டிங் செய்ததால் சுற்றி அடிக்கும் கடலின் அலையும் கேட்கிறது சூறாவளி காற்றின் வீரியமும் தெரிகிறது. மொத்தத்தில் இசையும் ஒளிப்பதிவும் ஒருகிணைந்த படமென்றே நினைக்கிறேன்.


சில நெருடல்கள்:
முன் கூறியது போல் இயக்குனருக்கு முதல் முயற்சியாய் இருந்தாலும் சூடான் தீவிரவாதிகள் பணத்திற்காக மட்டும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று ஒரே காட்சியில் கூறும் போதே உங்கள் கம்பெனி எங்கள் ஊர் எண்ணையை தான் எடுக்கிறது என்பது போன்ற வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். ரெண்டு பாதியிலும் கதாபத்திர புரிதலுக்கு நேரம் ஒதுக்கியதால் இரண்டரை மணி நேர படம் மிகவும் நீளமாய் தெரிகிறது.

வாழ்த்துக்கள்:
பண்பட்ட நடிகராய் மாறி இருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவின் "நாளைய மரியான்"

என்றும் அன்புடன்,
ரசல்

Thursday, July 18, 2013

கவிஞர் வாலிக்கு அஞ்சலி


கவிஞனின் காதல் வரிகளில்
காதல் வளர்க்கும் இளைய சமூகம்?
உன் எழுத்தினால் காதலிக்கவும்!
வெற்றிபெற்றால் கொண்டாடவும்!
இழந்தால் வலிக்கவும்!

இன்று!
இசையோடு வந்த உன் வரிகள் இல்லாமல்
திக்கு திசையின்றி மௌனமாய்
உன் காலடியில்!
கண்ணீர் அஞ்சலியில்!

என்றும் உன் வரிகளை அசைபோடும்
ரசல்

Saturday, June 22, 2013

கோபகுமாரின் "அகவிழி"

கோபகுமாரின் அகவிழியில் தோற்று போன என் கனவுகள்.கனவுகள் காணும் ஒவ்வொரு கனவும் ஒன்றோடு ஒன்று ஒன்றிபோவதில்லை என்ற என் நிலைபாடு இந்த குறும்படத்தோடு முடிந்து போகட்டும். காட்சிகள் ஒன்றாகலாம் ஆனால் நம் கனவுக்கு நாம் தான் என்றுமே கதாநாயகன். அப்படி மூவரின் கனவுகளுடன் ஒரு குறும்படம் இது புரிவதற்க்கு கண்டிப்பாக சில நேரம் ஆகலாம்.

இன்செப்ஷன் பார்த்துவிட்டு கனவுகளில் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கி கனவு கண்டிருக்கிறேன். அதில் என் கேள்விகளுடன் விளையாடி இருக்கிறேன். அகவிழி பார்த்து விட்டு இப்போது மீண்டும் கனவில் வாழ மற்றுமொரு வாய்ப்பு. ஒரு முறை அல்ல பல முறை பார்த்து விட்டேன் இன்னும் கூட ஒவ்வொரு முறையும் ஒரு பதில்கள் எனக்குள் என் அகவிழியில்.

முதலில் இந்த குறும்படத்தை pay per view ல் தந்தமைக்கு நன்றி. அதிலும் அறுபது ரூபாய்க்கு ஐந்து நாள் என் ஆராய்ச்சிக்கு கொடுத்தமைக்கு பல கோடி நன்றிகள். இப்படியான புது முயற்சிகள் வளரும் பல குறும்பட இயக்குனர்களுக்கு உதவியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கோபகுமார் அபிலாஷ் திரைக்கதை தான் படத்தின் பெரும் பலம். படம் முடிந்து விட்டதா என்ற கேள்வியுடன் தொடங்கும் end credits இசை அபாரம். ஒளிப்பதிவை பற்றி கண்டிப்பாக கூறவேண்டும் அவ்வளவு நேர்த்தியான frameகள். என் இன்டர்நெட் மெதுவாய் ஸ்ட்ரீம் ஆனதில் சில காட்சிகள் அப்படியே நின்றதில் கதாநாயகியின் காதல் விழிகள் தெரிந்ததில் இருந்தே தெரிகிறது கோபகுமார் படத்தில் நடிக்கவில்லை வாழ்கிறார்கள் என்று.

எப்படியோ இந்த வாரம் இன்னும் பல கனவுகள் சந்திக்க நேரிடும். அது வரை இரு விழிகளுக்கு ஓய்வு கொடுபோம்.

வாழ்த்துக்களுடன்,
ரசல்

To View the film
Go to

a) You pay once and its valid for 5 days of online view
b) You won't be able to download the film
c) Streaming of the video will entirely depend on your net connection (bandwidth)
d) Video is available within India & for world-wide audience (so can be shared with friends anywhere :)

Wednesday, June 19, 2013

தொழிற்சாலை

ஒரு கொத்தடிமைகளின் தொழிற்சாலை
முக்கால்வாசி தொழிலாளர்கள் சிகப்பு உடையில் 
மீதம் உள்ளவர்கள் வெள்ளை,பச்சை,மஞ்சள் என பகுதிவாரியாக 
வேலைக்கேற்ப உடை!



தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியும் 
அனைத்து நாள் அனைத்து நேரங்களிலும் 
இயங்கி கொண்டே இருக்க வேண்டும் 
சிலர் தூங்கும் நேரம் பலர் முழித்திருப்பர்!

தொழிற்சாலையின் ஒரு பகுதி காற்று சுத்திகரிப்பு நிலையம் 
வெள்ளை உடை அணிந்த அடிமைகள் மாசுபடர்ந்த காற்றில் இருந்து 
தூய்மையான உபயோகமுள்ள காற்றை மட்டும் 
பிரித்தெடுத்து மாசு காற்றை வெளியேற்ற வேண்டும்!

இன்னொரு பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு 
சிகப்பு நிற அடிமைகள் வருகின்ற சரக்கில் இருந்து 
பிரித்தெடுத்து ஒவ்வொரு ஊட்டச்சத்தையும் கணக்கெடுத்து 
அதன் பின் ஏற்றுமதி செய்ய வேண்டும்!

சரக்குகள் ஒவ்வொரு நாளும் பல விதம் வந்தடையும்
ஏன் சில நாள் வராமலே போகலாம் 
வருவெதென்ன போவெதென்ன கணக்கிட்டு 
ஒவ்வொரு நாளும் ஓடிவிடும்!

தினம் உயரும் வியாபாரம் அதற்கேற்றார் போல் 
விஸ்தரிக்க படும் தொழிற்சாலை இது
பல அடிமைகள் மாண்டு போய் 
அதே இடத்தில் சமாதிகள் ஆன கதைகள் ஏராளம்!

நிர்வாகத்தின் பொறுப்பின்மை அள்ள அள்ள குறையாமல் 
கிடைத்த வருவாய்கள் போதாமல் 
நாளுக்கு நாள் குன்றி போக 
ஒரு நாள் சரக்குகளின் வரவு நின்று போனது!

சளைக்காத தொழிலாளர்கள் மீதம் உள்ளதை 
உட்கொண்டு மேலும் பல நாள் நிர்வாகத்தை 
நம்பிக்கையுடன் செயல் பட வைத்தாலும் 
அடிமைகளின் உயிர் பறிபோய் கொண்டேயிருந்தது!

இந்நிலையில் காற்று தொழிற்ச்சாலையில் 
புதிதாய் வந்த ஒரு கிருமி தாக்கி 
ஒட்டுமொத்த அடிமைகளையும் உயிர் வாங்க 
நிர்வாகமும் சேர்ந்தே மாண்டு போனது! 

நம் உடலின் பெரும்பகுதியே இந்த தொழிற்ச்சாலை 
கண்ணுக்கு தெரியாத அடிமைகளின் உணர்வுகள் இவை..
சிகப்பு நிற அடிமைகள் நம் ரத்த குழாய்களின் மூலம் ரத்தத்தை ஓட செய்து 
வெள்ளை நிற அடிமைகள் மூச்சுக்காற்றின் மாசு தீர்த்து 
தினம் உன்னை வாழ வைக்கும் மனித நிர்வாகமே!

இயற்கையின் மாசுபாட்டால் ஒரு நாள் உயிர் இழக்கும் நம் சமுகமே!

என்றும் அன்புடன்,
ரசல் 

Thursday, May 30, 2013

குட்டிப்புலி வேட்டை முடிவுகள்




மதுரையை அக்குவேர் ஆணிவேர் என கடைந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் குட்டிப்புலி. அதாவது அடிதடி அருவாள் என பின்னணி. உறவுக்காக ஊருக்காக உயிர் கொடுக்கும் கடவுள்களின் அடித்தளம் அற்புதமாய் ஆரம்பம் பெயர் போடுவதற்க்கு முன்பு. பார்த்து சலித்த பல காட்சிகளின் ஒன்றுகூடலே இந்த திரைப்படம்.

சசிகுமார்க்கு இந்த திரைப்படம் சறுக்கள் தான். மாறுபட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருந்தாலும் கதை சொல்லிய விதத்தில் பெரிய ஏமாற்றம். முதல் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல் காட்சிகள் நன்றாக இருக்கிறதே என்று நினைப்பதற்க்குள் அடுத்து அடுத்து இளையராஜா பாடல்கள் போட்டு இயக்குனர் நிறைய திட்டுக்கு ஆளாகிறார்.

சசிகுமார் டீமின் அதே பார்முலா இடைவேளையில் பதரவைத்து முடிவில் இன்னும் பதரவைப்பது இந்த படத்திலும் தொடர்கிறது. ஒரு வித்தியாசம் படத்தின் ஆரம்பமும் இடைவேளையும் முடிவும் பதறல்கள். இடையில் திரைக்கதை நீண்ட நேரம் வருவதால் தொய்வும் சலிப்புமே மிஞ்சுகிறது.

சரண்யா,சசிகுமார் மற்றும் சிலர்க்கு சபாஷ் என்று சொல்லும் அளவு நடிப்பு போட்டி. லக்ஷ்மி மேனன் மேக் அப் ஜாஸ்தி. காமெடிக்காக வரும் கனா காணும் காலங்கள் நாடகத்தில் வரும் கூட்டணி கிச்சு கிச்சு.

எப்படி தாய்குல தெய்வங்கள் உருவாகினர் என்று கூற ரெண்டரை மணி நேர படத்தை எப்படியும் திரையரங்கில் அல்லது திரைப்பட குழுவினரே இன்னும் சில நாளில் வெட்ட நேரிடும் அப்பொழுது படம் பார்க்க சிறப்பாகவும் அமையலாம். 

என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, May 4, 2013

உழைப்பாளர்கள் தின தமிழ் திரைப்பட வரவு செலவு




என் கணிப்பு தப்பாமல் நான் பார்த்த மூணு நாள் மூணு படத்தோட வரிசையே எது நல்லா இருக்குன்னு தெரிஞ்சிடும்.

சூது கவ்வும் ல ஆரம்பிச்சி 
எதிர் நீச்சல் அடுத்ததா பார்த்து 
கடைசியா மூணு பேர் மூணு காதல் ல முடிஞ்சது.

சூது கவ்வும் - வரவு - இதுக்கு பேர் நல்வரவுன்னு கூட சொல்லலாம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
டைரக்டர் நலன் குறும்படங்கள் பார்த்த மக்களுக்கு எல்லாருக்கும் தெரியும், இது ஒரு காமெடி படமா தான் இருக்கும்னு. ஆனா எப்படி பட்ட காமெடி படம்ன்னு தெரியாதவங்க தயவு செய்து படத்த பார்த்துட்டு தெரிஞ்சிக்குங்க. படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு இரவே உக்கார்ந்தேன்,ஆனா சிரிச்சி சிரிச்சி தொண்டைல கீச் கீச் அப்புறம்  இருமல் மருந்து குடித்ததில் உறக்கம் வந்ததா? இல்லை இந்த குறும்பட இயக்குனரும் வெற்றி பெற்று விட்டார் என்ற சந்தோஷத்தில் உறக்கம் வந்ததா? என்று தெரியவில்லை உறங்கிவிட்டேன்.

திரைப்படங்களின் மசாலா பார்வைக்கு தேவை ஒரு பாவை அதாங்க ஒரு கதாநாயகி.அவங்களுக்கு என்ன வேலை சும்மா வந்து சும்மா போறது.அது தான் இங்க பிளஸ், சும்மா தான் வராங்க சும்மா தான் போறாங்க ஆனா போரடிக்கல. அப்புறம் வில்லனுக்கு என்ன வேலை டாய்............. ஒய்........ வரேண்டா... வெட்டுவண்டா.... அப்படிபட்ட வில்லன் கடைசி வரைக்கும் ஒரு வார்த்த பேசலைங்க, மொதல்ல அவர் வில்லனும் இல்லை போலீஸ் காரரா வர டெரர். அப்புறம் ஹீரோ யாருங்க? சத்தியமா சொல்றேன் இதுல விஜய் சேதுபதியும் நடிச்சிருக்கார் அவ்ளோதான் ஆனா ஹீரோ அவர் இல்லைங்க.  

இப்படி யாருமே இல்லாம ஒரு படம் பண்ண முடியுமா அதுவும் ரெண்டு மணிநேரத்துக்கு. அதுனால டைரக்டர் நலனை நல்வரவாய் திரையுலக கொண்டாட்டம் ஆரம்பிக்கட்டும்.

இங்க சந்தோஷ் நாராயணன் என்னமோ பண்றாப்ல.

எக்கு தப்பா 
தகரு டப்பா 
உருட்டி எடுப்பா 
எல்லாம் சேர்தடிப்பா 
டமுக்கடிக்கும் டியாலோ

மேலே கூறியவையும் அவரின் இசை அறிவிற்கும் சம்பந்தம் இல்லை ஆனால் இவை மகிழ்ச்சியில் எழுதிய வார்த்தைகள் அவ்வளவே. படம் முழுக்க உயிரோட்டம் பெறுவதும் பாடல்கள் என தெரியாமல் காட்சியை ரசிக்க வைக்கவும் உதவும் இவரின் இசை மிகவும் பாரட்ட பட வேண்டியவை. 

பத்திக்களின் மிகுதியால் சூது கவ்வும் திரைப்படத்திற்கு உழைத்த ஒளிபதிவாளர்,வசனகர்த்தா,எடிட்டர்,ஆர்ட் டைரக்டர் மற்றும் எல்லாரையும் வாழ்த்துகிறேன்.


எதிர்நீச்சல் - வரவு - கொஞ்சமா
-----------------------------------------------------
எதிர் பார்ப்புகள் எகிற வைத்த  திரைப்படம். தனுஷ் செலவு பண்ணி சிவகார்த்திகேயனுக்கு பேனர் அடிச்ச படம் இது. ஒரு படத்துல ரெண்டு கதை ஒன்னு ஹீரோக்கு வேற ஒன்னு சமுதாயத்துக்கு. ஒன்னு களாய்க்க இன்னொன்னு கழுவி ஊத்த(சமுதாயத்த மட்டும்). ரெண்டும் முடிச்சி போட்ட இடம் சுவாரசியம் இல்லாததால சலிப்பு தட்ட ஆரம்பிக்குது ரெண்டாம் பகுதியில. ஒலிம்பிக் தங்க மெடல் வாங்க தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும் அரசியல் பண்ணி உலக அரங்கில் ஏன் அவமான படுகிறோம் என்பதை சின்னதா பத்த வச்சிருக்கார் டைரக்டர் அதுக்கு ஒரு சபாஷ் ,ஆனா மொத்தத்தையும் சுமக்கற அளவுக்கு சிவகார்த்திகேயன் இன்னும் மக்களுக்கு பழக்கப்படல. அதுனால வலுவா நெனைச்ச ஸ்க்ரீன்ப்ளே அண்டர்ப்ளே பண்ணிடுச்சி.

ஆச்சர்யமா பார்த்தது அனிருத் இசை பாடல்கள் இனிமை கேட்பதற்கு மட்டுமே. படத்தில் பாடல்கள் திரையாக்கிய விதம் ஒன்லி சினிமாத்தனம் மற்றபடி ஒன்னும் இல்லை. மற்றபடி படத்தை ஒருமுறை பார்க்கலாம் சில சிரிப்புடனும் சில கைதட்டலுடன்.


மூணு பேர் மூணு காதல் - செலவு - அதுவும் தெண்ட செலவு  
------------------------------------------------------------------------------------------------------
மூணு பேர் - விமல்,சேரன்,அர்ஜுன் 
மூணு காதல் - மலையும் மலை சார்ந்த இடத்தில ஒன்னு, கடலும் கடல் சார்ந்த இடத்தில ஒன்னு,நிலமும் நிலம் சார்ந்த இடத்துல ஒன்னு.

கவிதையா இருக்க வேண்டிய இடத்தில் காதல் அடடா செம லைன். ஒன்னுத்துக்கும் ஒன்னுத்துக்கும் சம்பந்தம் இல்லை. கடசில ஒன்னுமே இல்லை. மூணு கதையில் சேரனின் கதை மட்டும் ஆறுதல் அதிலும் சேரன் நடிக்காமல் நம்ம  பானு(தாமிரபரணி நாயகி) உடம்பு மெலிதாகி படத்தில் கதாபாத்திரமாய் தெரிகிறார். மற்ற யாரும் சோபிக்க வில்லை. 

யுவனின் பாடல்கள் ரெண்டு அருமை மற்றவை ஜஸ்ட் லைக் தட் ஒண்ணுமில்லை. ஒளிபதிவாளர் போஜன் தினேஷ் சிறப்பாய் செய்திருந்தும் அதை ஒழுங்காய் இல்லாத கதை அமைப்பால் தெரியாமல் போய் விடுவார்.



என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, April 27, 2013

மாயச்சிறகு குறும்பட பாதிப்புகள்


ஒரு படம் எப்பொழுது பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதில் உள்ள கருத்துக்கள் மற்றும் இயக்குனரின் சிந்தனைகளை தாண்டி அதில் நடித்து வாழ்ந்த கதாபாத்திரங்கள் நமக்கு உரைக்கும் பொழுது.

மாயச்சிறகு எளிமையாய் விந்து தானத்தை பற்றி அறிமுக வசனங்களிலே முகத்தில் அறைந்து அடுத்த 28 நிமிடம் நம்மை உக்காரவைக்கிறது பொறுமையாய் சென்றாலும். 

ஒரே குறும் படத்தில் விந்து தானம், single mother, single father, feminism, இப்படி பல விஷயங்களை கூறும் உண்மையான கதாபாத்திரங்கள். கடவுள்களுக்கு எல்லாம் அப்பா அம்மா யார் என்று தெரியாது அதுக்காக அவர்களை bas***d என்று கூறுகிறோமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

நெருடல்கள் பல இருந்தாலும் உண்மைகளை உரைக்க ரொம்பவும் தைரியமாக இந்த படம் மற்ற குறும்படங்களின் வரைமுறைகளை தாண்டி நிற்கிறது என்பது தான் ஆணித்தரமான உண்மை.

இந்த படம் ஓடிகொண்டிருக்கையில் நண்பர் சுந்தர் சுகிசிவம் கூறியதை பகிர்ந்தார். அதாவது கல்யாணம் ஆகி ரொம்பநாளாய் குழந்தை இல்லாதவர்களிடம் "என்னங்க குழந்தை இல்லையா?" என்று கேட்போரிடம் இல்லை என்று நமட்டு காரணம் கூறுவதை விட "இனிமேல் தான்" என்று கூறுவது உன்னதமானது என்றார். அடடா இது நல்லா இருக்கே என்று தோன்றியது.

படத்தின் இறுதி நாமாக நல்லது எதுவோ அதை எடுத்து கொள்ள வேண்டும். அழகாய் ரசித்தால் பெண்ணின் முடிவுகளுக்கு எல்லாம் ஒரே காரணம் அவள் தந்தை வளர்த்த வளர்ப்பு முறையே தவிர வேறேதும் இல்லை என்பதை உணர்த்த தான் இறுதி காட்சியும். இதை இங்கே நியாய படுத்த விரும்பவில்லை ஆனால் ரசித்தால் பகிர்வது என் பழக்கம்.

பார்த்தேன் ரசித்தேன் இந்த வாரம் இந்த குறும்படம் "மாயச்சிறகு". 


என்றும் அன்புடன்,
ரசல்

Tuesday, April 9, 2013

கங்க்னம் ஸ்டைல்

எங்கள் வீட்டிலும் ஒரு psy உள்ளார்
அவர் ஒன்றரை வயதே ஆன நடன குழந்தை
ஓட்டம் பிடிக்கும் அவர் கால்கள் நின்றதில்லை
அவன் தாய் தந்தை தாத்தா பாட்டி சித்தப்பா யாவரும்
அவனை சுற்றியும் சோர்ந்தது இல்லை.

வார்த்தைகளின் கலவையில் மழலை பேச்சு
ஜொல்லென ஒழுகும் எச்சில் அமிர்தம்
கல கல சிரிப்பு பூரிப்பு என அலங்கரிப்பு
ததக்கான் புதாகான் நடையில்

எங்கள் வீட்டு psy இன் நடனம் இப்போது youtube இல்.

Friday, March 15, 2013

பாலா "வின்" பரதேசி


அலங்கரிப்புகள்:
தொண்டைக்குழியில் சிக்கிகொண்ட வார்த்தைகளை என் நுனிவிரலில் தட்டும்போதே கண்களில் ஈரம் கசிய தொடங்குகிறது,நான் அவ்வளவு உணர்ச்சி வசப்படகூடியவன் அல்ல, சும்மா யாரும் யாரையும் கொண்டாடுவதில்லை இது இவர் தான் இவரோடயது என தனக்கென அடையாளம் பதிந்து. இன்று மனவியல் ரீதியானவன் என்று சிலரால் இகழ பட்டு, என் படைப்புகள் வேறு என்ற பெருமையுடன் மக்களால் கொண்டாட பட எடுக்க பட்ட படமே "பரதேசி"

அழுகை காட்சிகள் அதிகம் அதனால் படமே ஒரு சோக படம் என்று பேசுவோர் மத்தியில் தன்னை நம்பி வருபவர்க்கு நெகிழவும் உணரவும் பாதிப்பும ஏற்படுத்த முடியும் என்று இரண்டே மணி நேரத்தில் ஒரு நாவலை படமாக்கிய விதம் அந்த புத்தகத்திற்கும்,அவருக்கும்,தமிழ் படங்களுக்கு தனி பெருமை தேடி தரும். திரைப்படம் பொழுது போக்குக்கு தான் என்று வருபவர்களுக்கு முதல் பாதியை ஒதுக்கி பின் பாதியில் இது தான் திரைப்படம் என்று உணர்த்துவதிலும் பாலா, பாலா தான். 

பாலாவும் நடிகர் நடிகைகளும்:
அதர்வா,வேதிகா,தன்ஷிகா,உதய கார்த்திக் மற்றும் கணக்கிட முடியாதவர்கள் நடிப்பால் கிராமத்து மக்களாகவே கொத்தடிமைகளாகவே தோற்றம் அளிக்கின்றனர். இவர்தான் ஹீரோ இவரை சுற்றி தான் படம் என்றில்லாமல் கதைகளம் சுற்றியே திரியும் நடிகர் நடிகைகள் ஏராளம். வேதனையுடனே வாழ்நாள் கடக்கும் முகபாவங்கள் எத்தனை அதில் அவரவர் உழைப்பு எத்தனை. வெள்ளையனுக்கு வேலைபார்க்கும் ஒவ்வொருவனும் கொத்தடிமையே என்று தேயிலை பறிப்பதை போல் கிள்ளி இருக்கும் விதம் இயக்குனரின் அபார திறமைக்கு சான்று.

பாலாவும் வைரமுத்துவும்:
படைப்புகள் தன் ஆளுமை என்றால் படத்தின் ஒரு பகுதி பலம் பாடல் வரிகள். கவிபேரரசு வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசம் போல இங்கே தேயிலை காடு இதிகாசம் எழுதி இருக்கிறார். 

கிராமியம் பேசும் காதல் வரிகள்:(அவுத்த பையா பாடல்)
வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா 
காச்சுபோன கையால உன் காஞ்ச மூஞ்சி தேய்க்கவா!

பஞ்சம் பொழைக்கும் பரதேசியின் வரிகள்:(ஒ செங்காடே பாடல் - பாடல் மொத்தமும் வலிகளே)
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே 
வயிறோடு வாழ்வது தானே பெருந் துன்பமே!

தேநீரில செந்நீர் வரிகள்:
செந்தேநீரில் செம்பாதி கண்ணீர் தானா!
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே 
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே!

இதற்கும் மேல் ஒரு பெண்ணின் வலியை ஒரே வரியில் "இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே". இப்படி கவிபேரரசு எழுத காரணமும் பாலாவே தான், ஏன் என்றால் படமாக்க பின் தான் வரிகளை எழுதிஉள்ளார். 

பாலாவும் GV பிரகாஷும்:
படத்தின் உயிரோட்டத்தை முதல் காட்சியில் புல்லாங்குழல் வாசிக்க விட்டதில் இருந்து வைமுத்துவின் பாடல் வரிகளை வலிகளாய் இசை அமைத்ததில் படத்தின் இன்னொரு உச்சம். தேவையான இடங்களில் இசையை நிரப்பி தன்னால் தழதழுக்கும் இசையும் கொடுக்க முடியும் என்றும் நிருபித்து இருக்கிறார். ஓசையில்லா இடங்களை சுற்றுசூழல் இசை அமைத்திருக்கிறது. பாலாவால் மட்டுமே இசைஉலகத்தில் தகரமாய் இருப்பவரை இசை அமைப்பாளனாய் இன்னொரு அடி எடுத்து வைக்க தூண்டும் படத்தை கொடுக்க முடியும்.

பாலாவும் செழியனும்:
ஒளிப்பதிவாளர் செழியன் புழதிக்காடு புலம் பெயர்தலில் இருந்து தேயிலை பச்சை காட்டை சுள்ளிகளும் கற்குவியளுமாய் படம் நெடுக பாலாவின் கற்பனையை நம் முன்னே நிழல் ஆட பாட வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதை சொல்லும் விதம் கேமரா வளைவுகள் நேர்த்தியின் எடுத்துக்காட்டு. சில காட்சிகள் சிம்னி விளக்குகள் கொண்டே படம் ஆக்க பட்டுள்ளது. அடடா கவிதை இசை ஒளிபதிவு எல்லாம் கலக்கும் போது மெய்மறக்க தவறவில்லை.

பாலாவும் நாஞ்சில் நாடனும்:
இந்த திரைப்படம் இலக்கியம் பேசியதற்கு இன்னொரு காரணம் நாஞ்சில் நாடன். மக்களை வசியப்படுத்தும் பேச்சில் கங்காணி கொத்தடிமையாய் மாற்றும் வரிகள் கிண்டலும் உண்மையுமாய். மந்திரியார் காமெடி நினைத்தால் கூட சிரிப்பு வருது. கிளைமாக்ஸ் இல் பேசும் வரிகள் ஒவ்வொன்றும் வலியின் உச்சகட்டம். பாலாவின் படைப்புகளில் சிறந்ததாக இப்படம் மாறி போக எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் ஒரு காரணம்.

பாலாவும் மற்றவர்களும்:
படத்தொகுப்பு கிஷோர் நாவலை பக்கம் பிரட்டியது போல் ஒவ்வொரு காட்சியாய் விஸ்தரிக்க பட்டுள்ளது. கலை இயக்குனரின் உழைப்பு 1939க்கே கொண்டு செல்கிறது. உடை வடிப்பாளர் எத்தனை நேர்த்தி. மற்றும் பலரை திரைக்கு பின்னால் ஒவ்வொரு வீட்டிற்க்கும் ஆகும் செங்கலை போல் பயன்படுத்தி இருக்கிறார் பாலா.

பாலாவும் நானும்:
நெஞ்சுக்குள்ளே புழுங்கி வடியும் சோகங்களை பிரதிபலிப்பாய் ஒரு திரைப்படம் இதை பார்த்து கண்ணீர் சிந்தாவிடில் நான் என்ன திரைப்படம் பார்த்தேன் என்ற கேள்வி. உண்மை அது தான் கண்களில் நீர் தேங்குகிறது, மனம் இது திரைப்படம் தான் என்று உணர மறுக்கிறது. பாலா மீது தான் எத்தனை பேருக்கு கோபம் அட போங்கையா இந்த படம் பார்த்துட்டு சொல்லுங்க. இது உண்மை கதையின் தழுவல் பாலாவின் கைவண்ணத்தில். கேலியாய் பேசும் சுற்றி இருப்பவர்களுக்கு பாலா கொடுக்கும் பதிலடி "சில வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என நினைத்தாயோ".

சிறு கண்ணீருடன் உங்கள் அன்புடன்,
ரசல் 

Thursday, March 7, 2013

ரத்த தான முகாம்!


ரத்த தான முகாம்!

அடிபட்டு வெளிப்படும் என் குருதி 
மற்றவர் பயன்படவே குழாயில் ஊசியிட்டு 
இன்று பதபடுத்த படுகிறது ரத்தம் சேமிப்பானில்!

நானென்னடா நான்கு முறை தான் 
வந்தவர் எல்லாம் பத்து பதினைந்து 
இருபதென்று கணக்கிட்டு கொண்டனர்!

குருதி பார்த்து மயங்கியவர் எல்லாம் 
கண்கள் மூடி வலியை எள்ளி 
நரம்பினில் வழியிட்டனர் தம்குருதிக்கு!

மூடிய கண்கள் திறந்தவர் தம் 
நண்பர்களை கண்டு புன்னைகையோடு 
மீண்டும் கண் மூடி ஆழ!

ஒலிப்பான் ஒலித்து நிரம்பியது என்றது 
வலியில்லை மீண்டும் ஊசி எடுக்கையில் 
ஒட்டு போட்டு அடைத்த ஓட்டை போல் 
கையிலே பிளாஸ்திரி!

வளைத்தே வலித்து கரங்கள் இறுகி
மனம் போன திசை தெரியாமல் 
அமைதிமட்டும் கண்களில் கையில் பழச்சாறுடன்!

என்றும் அன்புடன்,
ரசல் 

Wednesday, March 6, 2013

காதல் வர்த்தகம்


காதல் சில்லறை வர்த்தகமா இல்லை
கடல் கடந்து நடக்கும் வியாபாரமா
இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை
அங்கே திருமணங்கள் வியாபாரம் ஆக்கப்படும்போது
மனதினை கொன்று புதைக்கும் போது
வியாபாரம் செழிப்பாய் நடக்கிறது
வியாபாரிகள் பல நேரம் ஜாதியை பேரம் பேசுகிறார்கள்,
விலை போனவர்கள் தேதியை கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள்
ஒரு பொருள் விலை தெரியாமல் வீதியிலே
மறுபொருள் எதற்காக விலை போனோம் என்று தெரியாமல்!

Monday, February 25, 2013

அமீரின் ஆதி பகவன்

உசுபேத்தல்கள்:
ஆதி பகவன் என்ன கதை? அமீர் என்ன சொல்ல போறார்? அப்படி ஏன் ரெண்டு வருஷமாச்சி? யுவன் இசையில ஒரு ஹிந்தி பாட்டு ஏன் ஆல்பத்துல வந்திச்சி? இதுக்கு நடுவுல சம்பந்தமே இல்லாம ஹிந்து கடவுளோட பேர எதிர்த்து போட்ட சண்டைல ஏன் அமீரின் ஆதி பகவன்ன்னு மாத்தினாரு? A Mafioso Action Love story எப்படி அமீர் கொடுக்க போறார்?

முதல் பாதி:
படம் நன்றி தெரிவிச்ச அடுத்த நிமிஷமே தெலுகுல படம் ஓடுது A Ameer Film ன்னு போட்டப்புறம். ஒரு வேல தெலுகு பதிப்பை பார்க்க வந்துட்டமான்னு நினைக்கும் போது தமிழ் சப்டைட்டில் போட்டாங்க,அப்பாடா! தமிழ் படம் தான். ஒரு பெரிய ஹீரோக்கு கிடைக்க வேண்டிய மாஸ் அறிமுகம் ஜெயம் ரவிக்கு. கொஞ்சம் அவருக்கு அதிகம்ன்னு தோன்றினாலும் அமீர் படம் என்ற ஒற்றை வார்த்தைக்காக என் மனநிலையை மாற்றி பார்க்க ஆரம்பிதேன்.

கொஞ்சமும் நம்ப முடியாத காரணத்திற்காக பட்டயாவில் வந்து தவறான பாதையில் சென்ற மகனை பிரிந்து வாழும் தாய் மற்றும் தங்கை. இதில் நம்ப முடியாத காரணம் பிழைக்க பட்டையாவிற்க்கு வந்தது தான். ஆனால் அங்கு என்ன பிழைக்க முடியுமோ அதில் ஆதியாய் கோவமும் மிடுக்குமாய் ஜெயம் ரவி. இந்த கதாபாத்திரம் கொஞ்சம் தமிழில் நமக்கு பழக்க பட்டதே. அநியாயம் தட்டி கேட்க போய் கரம் பிடிக்கிறார் நீத்து சந்திரா. இப்படி காட்சிகள் அங்கும் இங்குமாய் சரிவர ஓட்ட படாத நிலையில்,தங்கை காதலன் ஒழுக்கமில்லாதவன் என்று தங்கையை வற்புறுத்தி முடியாத பட்சத்தில் தான் அமீரின் திரைக்கதை சூடுபிடிக்கிறது. சபாஷ் என்று நிமிரவைத்து அடுத்த நொடி. இடையில் நீத்து சந்திராவின் மூலம் காப்பாற்ற பட்டு திருமணம் செய்ய மும்பை வருகிறார்.

இதுவரை அமீரின் படங்கள் முன் பாதி சுமார் என்று சொல்ல பட்டதில்லை. இந்த படம் சுமார்க்கும் ஒரு படி கீழே இறங்கியதற்கு காரணம் காட்சிகளின் அங்கும் இங்கும் அலைகழிப்புகள். இதனால் அமீர்க்கு action படம் ஒத்து வராது என்று தோன்ற பெற்ற நிலையில் தான் கதையின் முக்கிய திருப்பம், மும்பையில் பகவான் ஆம் இன்னுமொரு ஜெயம் ரவி. அதுவும் திருநங்கையாய், கதையில் இப்படி வந்த பின் யோசித்ததில் சரி இதுக்கு முன்னாடி பம்பாயில் அப்படி ஏதோ பண்ணிதான் பட்டயாவிர்க்கு வந்தான் என்ற என் யுகங்கள் சரமாரியாய் வரத்தொடங்கின.ஆனாலும் ஏதோ இருக்கு என்று தோன்றியதும் இடைவேளை.

இரண்டாம் பாதி:
சபாஷ்..... இப்போ தான் படமே. உண்மையில் அமீரின் உழைப்பு தெரிந்தது. கதையை நகர்த்திய விதம் இரண்டாம் பாதியில் கெளப்பிடான்யா என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஜெயம் ரவிக்கு இது போல் படம் அமைந்ததில் உண்மையில் வெற்றி தான். திருநங்கை கதாபாத்திரத்துக்கு தேவையான அணைத்து நெளிவு சுளிவுகள் அடடே "ஹான்". பரபர கிளைமாக்ஸ் முன்னாடி வரும் அகடம் பகடம் ஹிந்தி பாடல் நன்றாய் இருந்தாலும் தேவையே இல்ல அந்த நேரத்துல. அமீரால் action படம் கண்டிப்பா கொடுக்க முடியும் இதை நான் கண்டிப்பாய் சொல்கிறேன். ஆனா பழக்க பட்ட கதை அவ்ளோ தான். கொடுத்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறது. சில லாஜிக் அத்துமீறல்கள் மசாலா படத்திற்கு உரியன, அதை தவிர்த்து வெளியே வரும் போது படம் நன்றாய் இருந்தது இரண்டாம் பாதியினால் இல்லையேல் படமே இல்லை.

சில பதியப்பட வேண்டியவைகள்:
நீத்து சந்திரா - இரண்டாம் பாதியில் ஜெயம் ரவிக்கு அடுத்து உழைப்பை கொட்டியவர். தீயவர் கூட்டணியில் இருக்கும் அனைத்து பெண்களை போல் குடிக்கிறார், ஊதுகிறார் மற்றும் சண்டை போடுகிறார். சண்டை காட்சிக்கு தனி பாராட்டுக்கள் ஏனென்றால் நாமெல்லாம் சாக்கி சான் படத்துல வர கதாநாயகி சண்டை போட்டு தான பாத்திருக்கிறோம் இல்லையேல் முடியை பிடித்து இரண்டு பெண்கள் சண்டை போடுவர்.அப்படியேதும் இல்லாமல் ஆம்பளைக்கு நிகரா சண்டை போடும் இவர் வரவேற்க படவேண்டியவர்.

யுவன் இசை - ஐய்சலம் ஐய்சலம் பாடல் அருமை அதற்க்கு நடனம் ஆடிய ஷாக்ஷி அதனினும் அருமை.நல்லதொரு நடன இயக்கம். மற்ற பாடல்கள் சுமார் இருந்தாலும் பகவான் ராப் நலம். பின்னணி இசை சத்தமாய் இருந்தது ஆனால் மற்ற படங்களை போல் இல்லை.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் அந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகமாய் இருந்ததால். மற்றபடி அமீரின் முந்தைய படங்கள் முடிந்து வரும் போது வரும் அழுத்தம் மட்டுமே வரவில்லை. ஆனால் தன் முந்தைய படைப்புகளுக்கும்(கவனிக்க- படைப்பு) இந்த படத்திற்கும் மாறுபட்ட களத்தை தன்னால் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதால் இதுவும் அவருக்கு வெற்றி தான்.

என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, February 23, 2013

ஹரிதாஸ் - சிறப்பு ஆற்றல் பெற்ற குழந்தை


குமாரவேல் இதற்க்கு முன் எடுத்திருந்த இரண்டு படங்கள் "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "யுவன் யுவதி". தோல்வி ஒருவனை எந்த அளவு பாதித்து இருந்தால் அவன் வெற்றி அடைய இந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தை கொடுக்க முடியும் என்ற உதாரணம் "ஹரிதாஸ்". ஆச்சரியமூட்டும் தகவல்கள் சேகரித்து சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்க பட்ட கற்பனை கதை என்று முன் மொழிந்திருந்தாலும் இரண்டரை மணி நேரம் தொய்வுறவில்லை திரைகதையில்.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஆட்டிசம் என்பது மூளை குறைபாடு இல்லை அது ஒரு அவர்கள் வாழும் உலகம் என்பது? சிலர் பைத்தியகாரர்கள் என்கிறார்கள், ஆம் நாம் அவர்களை புரிந்து கொள்ளமுடியாமல் பைத்தியகாரனாய் மாறுகிறோம் என்பதை ஆணித்தரமாய் உணர்த்தியது இந்த படம். நம் இந்தியாவில் ஆட்டிசம் படைக்க பெற்ற குழந்தைகளை "special child" என்பதும் அவர்களை பள்ளியில் சேர்த்தே ஆகவேண்டும் என்ற விதிமுறையும் எனக்கு தெரியவந்ததும் இந்த படம் தான்.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்,பள்ளி குரூப் போட்டோவில் சிநேகா அந்த சிறுவனை காமெராவை பார்க்க வைக்க கஷ்டப்பட்டு கடைசியில் அவன் காமெராவை பார்க்க மற்றவர் எல்லாம் அந்த சிறுவனை பார்ப்பதாய் அமைந்த காட்சி போதும் குமாரவேலின் திறமைக்கு.

நம் தமிழ்ப்படத்தில் வெகு சிலரே இந்த திரைபடதிருக்கு பொருந்துவார் என்ற என் கருத்தும் மாறுபட்டு போனது கிஷோரின் நடிப்பில். ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரியாய் ஆகட்டும் தன் பிள்ளையின் மேல் உள்ள அன்பினால் தன் வேளையில் விடுப்பெடுத்து பள்ளியில் மகனுடன் அமர்ந்து நெகிழ செய்கிறார். அவனின் உலகம் என்ன என்று புரிந்து கொள்ளும் இடத்தில் உண்மையான தந்தை பாசம்.

சிநேகாவை பல காட்சிகள் அழவைத்து திரைகதை நகர்திருந்தலும் முதல் காட்சியில் அவரின் படபடப்பும் நடிப்பும் அட போட வைத்தது. சிறவனை காணாமல் ஏங்கும் காட்சியும், அவனை திருடனாய் பார்த்த மக்களிடம் பேசும் வார்த்தைகளும் மனதில் நிறைவாய் பதிந்தது. 

பரோட்டோ சூரி இந்த படத்திலும் அவர் எந்த கேரக்டர் நடிந்திருந்தாரோ அந்த கேரக்டர் ஆகவே தெரிகிறார். அவரின் கொச்சைஇல்லா நகைச்சுவை பாராட்டப்பட வேண்டியது. 

கதையின் மூலகரு ஆட்டிசம்,எந்த வகையிலும் முன் வந்த "தாரே சமீன் பர்" ஹிந்தி படத்தை ஞாபக படுத்த கூடாது என்ற மெனக்கெடல் தான் கிஷோரின் போலீஸ் கதையும். ஒரு குத்து பாடல் போலீஸ் குடி இருப்பில் வந்தாலும் அதில் போலீஸ் பற்றியே வரும் சின்னஞ்சிறு அலுப்புகளை பகிர்ந்ததில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றியது.

விஜய் ஆண்டனி அடடா இளையராஜா கிட்ட கொடுத்திருந்தா பின்னி இருப்பாரே நினைபதர்க்குள் அருமையான பின்னணி இசையில் ஈர்த்து விட்டார். ராஜா முகம்மது எடிட்டர், ரத்தினவேலு கேமரா, லால்குடி ந இளையராஜா கலை இப்படி நட்சத்திர கூட்டணிக்கு கிடைத்த வெற்றி இந்த ஹரிதாஸ்.

திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது திரையை மீண்டும் திரும்பி பார்த்து விடைபெற முடியாமல் விடைகொடுத்து சென்றேன் நான் திரையில் பார்த்த ஹரிதாஸ்க்கு.

என்றும் அன்புடன்,
ரசல்

Thursday, February 14, 2013

சில நேரம் காதல் தாமதமா வரும்!!!


காலம் பல மனித உடலைப்பற்றி அறிவியலால் விளக்கி இருந்தாலும், நம் உடலின் ஒவ்வொரு அணுக்களையும் பிளந்தெடுப்போம் காதல் வயப்பட்டு. அப்படி வயப்பட்டு போராடி அடைந்த காதலை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அங்கே ஊடல் கூடல்கள் இனித்திட பழகிய நாட்களை நினைவில் கொண்டு சுகமாய் வாழ முற்படுவோம். 

காதல் கதைகள் எத்தனை விதம்? அதில் நாம் ரசித்தது எத்தனை? வாழ்ந்தது எத்தனை? வருஷத்தின் 365 நாளும் ஒவ்வொருவரின் காதல் கதையில் அடுத்த திருபங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம், காதலர் தினம் என்ற ஒன்று அந்த வெள்ளைக்காரன் நமக்கு பகிராமல் சென்றிருந்தால்? இங்கே காதலை அவரவர் சந்தித்த நாளை தான் காதலர் தினமாய் கொண்டாடி இருப்போம்.அப்படி இருந்தும் சில பேருக்கு சில நேரம் காதல் தாமதமா வரும் அதுவும் காதலர் தினத்தில் இங்கே.

(அப்படியே நீங்க நிக்கிற இடத்துல வேகமா ஒரு பஸ் பெரிய ஹாரன் சத்தத்துல கடக்குது - Flash)

கோயம்பேடு ப்ரீபெய்ட் ஆட்டோ வரிசையில் சுபா நெடு நேரம் காத்திருந்து தாம்பரத்திற்கு ரசிது வாங்கினாள். காசாளர் ஏற இறங்க பாத்துட்டு தான் ரசிது கொடுத்தாரு. பின்ன கோயம்பேட்டுல இருந்து தாம்பரத்துக்கு பேருந்து இல்லாத மாறி ஆட்டோக்கு கேட்டா?, எவனோ ஒருத்தன் நல்லா சம்பாதிக்க போறான் அவ்ளோதான். அடுத்த ஆட்டோ ராஜவோடது, ஹ்ம்ம் அம்பது ரூவா சம்பாரிக்க காலைல எட்டு மணிக்கு ஸ்டாண்ட்ல போட்டு இப்போ ஒம்பதர மணி  இப்பவாச்சும் கிராக்கி வந்திச்சே ஒரு சந்தோஷத்தோட பாத்தா ஒரு பொண்ணு வந்து நிக்குது. இதுக்கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா பத்து ரூவா கூட கெடைக்காதுன்னு நினைப்போடவே பார்த்தான்.

சுபா: அண்ணா! தாம்பரம் போகணும்!
ராஜா: (என்னது தாம்பரமா? ரசீதை பார்த்தா 250 ரூவா, அட்ரா சக்க! காலைல இருந்து ஒன்னும் சரியில்லன்னு பார்த்தா.இப்படி வந்து மாட்டிகிச்சே) போலாம் வாம்மா!
சுபா: அண்ணா போற வழில அசோக் நகர்ல ஒருத்தர கூட்டிட்டு போய்டுவோம். உள்ளலாம் போகத்தேவல பஸ் ஸ்டான்ட்லயே தான்.
ராஜா: சரி மா! ஏறுங்க போலாம்.

(இடையில் சுபா ஒருவரிடம் தன் கைபேசியில் யாரிடமோ அசோக் நகர் வந்திடுமாறு சத்தம் போட்டு கூறினாள். கொஞ்சம் இறுக்கமும் அதிகாரமும் குரலில் வெளிப்படவே ஒரு பையன் தான் வர போகிறான் என்பதை யூகிக்க முடிந்தது)

அசோக் நகர் நெருங்கியது.

சுபா: இங்க! இங்கதான் ஒரு ரெண்டு நிமிஷம் அண்ணா!
(கைபேசியில் - நான் வந்துட்டேன்.. எங்க நீ? நீல சட்ட தான போட்டிருக்க? சரி வா சீக்கிரம் நான் ஆட்டோ ல இருக்கேன்.)

(தூரத்தில் நீல சட்ட போட்டுட்டு ஒரு பையன் நடந்து வந்தான்)

ராஜா: ஏம்மா! அவாரன்னு பாரு! 
சுபா:(புருவத்தை உயர்த்திய படி ராஜாவை ஒரு பார்வை பார்த்து விட்டு) இல்ல அவர் இல்ல.

ஐந்து நிமிடம் கழித்து சட்டென்று....

பின் இருந்து ஒரு ஊதாவும் நீளமும் கலந்து கருப்பு கோடு போட்ட சட்டை போட்டவன் வந்து நின்னான். கையில ஒரு பூச்செண்டு. சுபாவிடம் காதலர் தின வாழ்த்துக்கள் என்று காதில் கூவினான். சுபா பூச்செண்டின் ஒவ்வொரு பூக்களையும் ஒரு நொடியில் ஆராய்ந்தாள் அதன் அழகையும் அடுக்கினையும். அவள் தன் மார்போடு அணைத்ததையும் குழந்தை சிரிப்புடன் அந்த பையனை நோக்கியதில் யாருக்கும் காதல் வயப்பட தோன்றும். இருவரும் கைகுலுக்கினர் இல்லை பொது இடம் நாகரிகம் கருதி இரு கைகளால் கட்டி அணைத்து கொண்டனர்.

ராஜா: (ஒரு சில நிமிடங்கள் சிலையாகி பின் சுதாரித்தான்) ஏம்மா போலாமா!
சுபா: தோ! போலாம்னா! சார் சுரேஷ்.. ஏறுங்க லேட்டா வந்துட்டு நிக்காதீங்க.. உள்ள போங்க..

(ஆட்டோ மெதுவாய் தாம்பரத்திற்கு தன் வழித்தடங்கள்களை தாண்டி புறப்பட்டது. ராஜாவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாய் கேட்கும் இந்த வண்டி சத்தத்திலும். இரு புற கண்ணாடிகளை இருவரும் தெரிவது போல் திருத்தி வைத்தான்)

"நீல சட்டை போட சொன்னா இது என்ன கட்டம் போட்ட சட்டை அதுவும் நீலம் அங்ககங்க இருக்கு", செல்லமாய் கடிந்தாள் சுபா.அவனும் லேசு பட்டவன் இல்லை "நீ மட்டும் என்ன நீலமா போட்டிருக்க அங்ககங்க பூ டிசைன், ஒரு கலர்ல இருக்கு இது பத்தாதுன்னு கண்ணாடி வேற சின்ன சின்னதா", அந்த கண்ணாடியில் முகம் பார்க்க கூட முடியாது என்று செய்முறை விளக்கம் வேறு குறும்பாய்.

"காதலர் தினத்துக்கு ஒரு பூங்கொத்து தானா,வேறொன்னும் இல்லையா",சுபாவின் எதிர்பார்ப்பிலும் சின்ன நியாயம் இருக்கத்தானே செய்யும். "சின்ன பூங்கொத்துக்கே அரை மணி நேரம் வரிசைல நின்னேன் தெரியுமா,கால்லாம் ஒரே வலி",என்றான் சுரேஷ். "நீ வேணும்னா கால் நீட்டி வச்சிக்கோ" என்றாள் அக்கறையாய்.

"சரி நான் இன்னைக்கு எப்படி இருக்கேன்",என்றாள் ஆவலாய்."nose தான் கொஞ்சம் oversize, its ok ma plastic surgery பண்ணிடலாம்", கிண்டலாய் களாய் ஆனால் நொடி பொழுதில் தோள்பட்டையில் அடி,அடி,அடி(மூணு தடவ)."ஸ்சு, விளையாட்டுக்கு சொன்னேன் டி , அதுக்குள்ளே அடி பின்னிட்ட, உனக்கென்னடி என் செல்லம் எப்பவுமே அழகுதான்", தோளை தேய்த்து கொண்டே பம்மினான்.

(அவள் உண்மையிலே அழகுதான், கடிந்து கொண்டாலும் கோவமில்லாமல், இடித்து உக்கார்ந்தாலும் விரசம் இல்லாமல் - ஆட்டோ ராஜா)

"சரி வீட்ல என்ன சொல்லிட்டு வந்த", அவன் வினவினான்."எங்க ஆயிரம் கேள்வி வெளிய ப்ரெண்டை பாக்க போரேன்னு சொன்னதுக்கு, அப்புறம் சீக்கிரம் வந்துடு சொல்லி விட்டாங்க, ஆனா அக்கா கண்டு புடிச்சிட்டா",என்றாள் குழப்பத்தோடு.

"உங்க அக்கா எப்பவுமே ஸ்வீட் தான்,பரவால தெரிஞ்சும் அனுப்புராளே, உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்குவோம்", ஆர்வத்துடன் அவன்."எனக்கு ஒன்னும் வேணாம் சேத்து வச்சா எதாவது பெரிசா வாங்கலாம், இன்னிக்கி உன் கூட இருக்கறது விட வேற ஒன்னும் பெருசா தேவல", அவன் கன்னங்களை தடவி கூறினாள்.

(என்ன பொண்ணு இந்த பொண்ணு இந்த கண்ணாடி போட்டு சப்பையா இருக்கற பையன இப்படி உருகி உருகி காதலிக்குது - ஆட்டோ ராஜா)

கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், அவன் செய்வதறியாது அவள் கைகளை நீண்ட நேரம் கண்னமிடயே வைத்து நீண்ட நேரம் யோசித்து பின்  முத்தம் அளித்தான் கைகளுக்கு.

(அடடா!! பகல் காட்சியா இல்ல இருக்கு! - ஆட்டோ ராஜா)

"சரி நேத்து உன்ன அந்த புக் வாங்க சொன்னேனே வாங்கிட்டீயா",வினவினாள். அவனோ தலையை சொரிய."நீ எப்பவுமே உனக்கு வேணும்னா மொதல்ல வாங்கிடுவ,எனக்குன்னா மட்டும் யோசிப்ப,பேசாத போ", கோபமாய் அவள்.

அவனும் சமாதனம் என்று ஏதேதோ கூறினான் அவள் செவிமடுக்க வில்லை. சற்று கோவமாய் கத்தியும் பார்த்தான், பின் அமைதியானான்.

(என்னடா இது! இவ்ளோ நேரம் கொஞ்சிகிட்டாங்க, இப்போ எதுவுமே பேசாம பாத்து நிமிஷமா வராங்க- ஆட்டோ ராஜா)

ராஜா : எம்மா தாம்பரம் வர போது எங்க இறங்கனும்.
சுபா: சொல்றேன்னா எங்கன்னு!! நேரா போங்க!

"சரி சொல்லு, எங்க போலாம்? விடு அத பத்தி பேசவேணாம்", கோவம் போய் பொய் கோவமாய் கேட்டாள். "இல்லமா!, சாரி நான் வேணும்னு பண்ணல மறந்துட்டேன்", கெஞ்சினான்."நான் அத பத்தி பேச வேணாம்னு சொன்னேன் இல்ல, விடு", அவள் உண்மையாய்."ப்ளீஸ், கொஞ்சம் சிரிங்களேன்,மன்னிச்சிடு",அவன் மேலும் கெஞ்சலுடன். சிரிப்புடன், " போடா இன்னிக்கு உன்கிட்ட சண்ட போடா கூடாதுன்னு வந்தேன், நானே அத மறந்து கத்திட்டேன்,எனக்கு கொஞ்சவும் கெஞ்சவும் கத்தவும் நீ தான இருக்க", கண் கலங்கிய சிரிப்புடன் அவள் கூறினாள்.

(கெஞ்சவும்,கொஞ்சவும்,கத்தவும் நீ தான் இருக்க, உறுத்தியது ஆட்டோ ராஜாவிற்கு)

சுபா: அண்ணா! இங்க தான் நிறுத்துங்க.(பாஸ்கின் அண்ட் ராப்பின்ஸ் ஐஸ் கிரீம் கடையை காட்டினாள்)
ராஜா: எது மா இங்கயா! (அட பாவிகளா ஐஸ் கிரீம் சாப்பிட இவ்ளோ தூரம் வரணுமா)

இறங்கியதும் பணத்தை கொடுத்தாள், அதுக்குள்ள அந்த பையனும் பணம் கொடுத்தான், இருவரும் அவரவர் கைகளை தட்டி விட்டு கடைசியில் அந்த பொண்ணு கொடுத்த பணத்தை வாங்கினான் ராஜா. "ஏம்மா திருப்பி வருவீங்களா நான் வேணும்னா வெயிட் பண்றேன்" என்றான் ராஜா. "இல்ல அண்ணா, பரவால ஒரு மணி நேரமாவது ஆகும்", என்றாள். "சரிம்மா! சவாரி வந்தா போறேன்,இல்ல இங்க தான் இருப்பேன்",என்றான் ராஜா. சரி என்ற சமிக்கையோடு கண் சிமிட்டி சென்றாள் சுபா.

கைகரம் பற்றியே தான் இருவரும் உள்ளே சென்றனர். என்னடா காதல் என்ற கேள்விகள் ஆயிரம் எழுந்து,ஏன் நம் மனைவி எப்பவுமே கடுப்பேத்து ரா, என்ற கேள்விகளுடன் காலை நடந்த சண்டையை(இது தான் காலைல இருந்து எதுவும் சரி இல்லன்னு சொன்னது இது தான்) யோசித்து கொண்டிருந்தான். ஆட்டோ சவாரிக்கு எத்தனை பேர் கேட்டாலும் மனம் என்னவோ இந்த காதல் ஜோடியை  விட்டு செல்ல ஏங்கியது.

(ஒரு மணிநேரம் இல்லை ஒன்றரை மணி நேரம் கழித்து)

வெளியே அவர்கள் வந்ததும் ராஜா முகத்தில் சந்தோஷம்(இன்று 500 ருபாய் வருமானம்), அவர்களை கைகளை ஆட்டி வரச்சொன்னான். "ஏன்னா சவாரி கெடைக்கலையா!",என்றால் சுபா. "இல்லமா,ஒன்னும் பெருசா வரல பக்கத்துல ஒரு சவாரி போயிட்டு தான் வந்தேன்,சரி வாம்மா கோயம்பேடு தான",என்று கதை கட்டினான் ராஜா.

(ஒரு சில உரையாடல்களுக்கு பிறகு, ஆட்டோ கோயம்பேடு நோக்கி பயணமானது)

"டேய்! உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்கிட்டயே என் ப்ரெண்டு அழகுன்னு சொல்லுவா", அவள் மீண்டும் சினுங்கல் சண்டை ஆரம்பித்தாள்."போடி! உண்மையா அவ அழகு தான் ஆனா நீ வேற எனக்கு",என்றான் அவன்.

"உனக்கு தெரியுமா, நான் ஏன் ஆட்டோல போலாம்னு சொன்னேன்னு", அவள் வினவினாள்.(ராஜா ஆர்வமானான்)."ஏன் comfortable ஆ போலாம் அதான",என்றான் ஏதோ சரியாய் கண்டு பிடித்தது போல. "போடா லூசு!, பஸ்ல நிறைய பேர் இடிச்சி நின்னுட்டு வருவாங்க,சத்தமா இருக்கும், அதுவும் இல்லாம நீ பக்கத்துல இப்போ இருக்குற சுகம் அங்க வராது, அதான்",என்றாள் காதலுடன்.

(ஓஹ்ஹோ ஆட்டோல வரதுல இவ்ளோ விஷயம் இருக்கா - ஆட்டோ ராஜா)

சிலபல உரையாடல்கள் உன்னதைமாய் வாழ்கையை பற்றி, சில பயத்துடன், சில கொஞ்சலுடன் அசோக் நகர் வந்தடைந்தனர்.

அவன் இறங்கினான் இவள் இளகினாள் ஏங்கினாள்,கண்களில் கண்ணீருடன்.அவன் ஆறுதல் படுத்தி மீண்டும் கைகளால் கைகளை தன நெஞ்சோடு வைத்து விடைகொடுத்தான். அவள் ஏறினாள் ஆட்டோ புறப்பட்டது.

கண்ணாடியில் ராஜா சுபாவை பார்த்தான் இன்னும் அந்த கண் கலங்கிய முகத்தோடு அங்கே இங்கே திருப்பி கை குட்டையை தொடைத்து கொண்டிருந்தாள். கோயம்பேடு வந்தது பணத்தை கொடுத்தாள். அவள் கனத்த இதயத்துடன் நடந்து சென்றாள்.

அங்கே அவள் கண்ணீர் ராஜாவை ஏதோ செய்தது,காலையில் சத்தமிட்ட போது அவன் மனைவி அழுதது கண் முன்னே வந்து நின்றது. புறப்பட்டான் வீட்டிற்க்கு கடையில் இரண்டு முழம் மல்லிகையை வாங்கி கொண்டு. இது எல்லாம் கெஞ்சவும் கொஞ்சவும் கத்தவும் நீ தான் இருக்கே சொன்ன அவளுக்கு மனதில் நன்றி கூறி புறப்பட்டு சென்றான். 

சில நேரம் காதல் தாமதமா வரும்!!!

என்றும் அன்புடன்,
ரசல்

Monday, February 11, 2013

A Book of பொக்கிஷம்

என் மனதினை பிரட்டி போட,நான் எழுதி வந்த நாட்குறிப்புகள் நினைவிற்கு வந்தன. எழுதும் பழக்கம் தற்போது அடிகடி வருவது,முன்னாளில் அது என்றாவது வருவது. யாருடைய பள்ளி பருவமும் அது பாடம் படிப்பதற்கு மட்டும் அல்ல மாறாக வாழ்க்கை பாடம் படிபதற்கும் தான். என்னில் அடங்கா வாழ்கை நெறிகளை கடைந்தெடுத்து கற்றவை! அவைகளுள் சுவாரசியம் குறையாமல் இன்றும் பல நினைவு நாடாக்களை நாம் என்றாவது நினைத்து பார்ப்பதுண்டு. என் முதல் நாட்குறிப்பு ஏடு என் கால பொக்கிஷம்,இன்று அதன் நினைவோடு உங்கள் முன் "A Book of பொக்கிஷம்".

எட்டாம் வகுப்பு பயிலும் போது என் தந்தையின் டைரியே முதல் தூண்டுதல்! நானும் எழுத வேண்டும் என்று மனதில் பதிய செய்தது. ஆனால் நான் எழுதிய டைரி அதற்க்கு முந்தைய ஆண்டு வீட்டில் வந்து உபயோக படுத்தாமல் இருந்த ஒன்று. ஏழாவது ஆண்டு விடுமுறையில் புத்தங்களை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்க பட்ட அந்த டைரி என்னுடைய நாட்குறிப்பானது. என்ன எழுதலாம் எழுதணும் என்றே புலப்படாத ஒன்றும் அறியா வயது? ஆக நான் எழுதியது தினசரி நடந்த சுவாரசியங்கள் மட்டுமே. இங்கு அவைகளுள் இச்சமயம் சுவாரசியமாக தோன்றியதை பதிவு செய்கிறேன்.

முதல் மூன்று மாதங்கள்:

யோசித்து பார்த்ததில் தெளிவாய் தெரிந்த முதல் எழுத்துப்பதிவு? எட்டாம் வகுப்பு ஆரம்பித்த முதல் வாரம், அதிகம் பிரயோகித்தது இந்த நாட்குறிப்பை தான். அதுவும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசரியர் எத்தனை புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற குறிப்புகளே. அது போக வாரம் ஒருமுறை வரும் "Drawing and Crafts" வகுப்பில் வழக்கம் போல் ஆசிரியர் ஆண்களை எதாவது செய்ய சொல்லிவிட்டு பெண்களுக்கு கோர்க்கவும் தைக்கவும் கற்று கொடுப்பார். நான் என்ன செய்ய போகிறேன் அருகில் இருக்கும் நண்பனுடன் கட்டம் போட்டு விளையாடுவது இல்லை புக் கிரிக்கெட் விளையாடுவது அதற்கும் உதவியது இந்த நாட் குறிப்பு தான்.

இப்படி கிறுக்கல்கள் இல்லா நாட்குறிப்பு, ஒரு முறை அண்ணனுக்கு வந்த வாழ்த்து மடலில் இருந்த ஆங்கில வாழ்த்து, புதிதாய் தோன்றியதால் அதை எழுதி வைத்துகொண்டேன். இப்போ யோசிக்கும் போது சிரிப்பு தான் வரும் அதை நினைத்தால், அதன் பின் ஒவ்வொருவரும் அதையே சில வாழ்த்துமடலில் எழுதிய போது.

someone has goldship
someone has silvership
but i have only oneship
that's your friendship

ஹ்ம்ம் இதுவும் என்னடையது என நம்பிய சிலர், அதுபோகட்டும் ஒரு பாடலில் வந்த ஆங்கில வார்த்தையும் நானாய் மாற்றி எழுதியதும் உண்டு.

sharpner is made of plastic
rope is made of elastic 
life is fantastic
make it romantic

மொத்தத்தில் டிஆர் போன்ற கவிதைகள் தான் நான் ஆரம்பத்தில் எழுதியதும் எழுத நினைத்தும்.

இரண்டாம் மூன்று மாதங்கள்:

கிறுக்கிய பக்கங்கள்,வகுப்பு பாடம் எழுதியது மற்றும் imposition எழுதியதை தவிர்த்து இன்னும் சில வரைபடங்களும் இந்த நாட்குறிப்பை அலங்கரித்து கொண்டிருந்தன. அலங்கரிப்பு இல்லை அலங்கோலம் என்றும் கூறலாம். பள்ளி பருவத்திற்கும் ரசனைக்கும் எப்பொழுதும் தொடர்புகள் உண்டு. ரசனை எதை பற்றியது? அது ஒவ்வொருத்தரை பொருத்தது. எனக்கு தமிழ் மேல், எப்படி என்று என்னால் கூற முடியாது நான்காம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறேன். அது தான் என்னோவோ சில நேரங்கள் என்னை தமிழுக்கு ரசிகனாக்கியது. அந்த சமயம் தமிழுலும் நான் சில கவிதைகள் கிறுக்கி இருக்கிறேன். எல்லாம் இப்படி தான் முடிந்திருக்கும் ,அதாவது எதுகை மோனை காதலால்.கவிதை வரிகள் ஞாபகம் இல்லை ஆனால் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி எழுதி இருக்கிறேன். 

நினைத்தேனே 
இணைந்தேனே
இழுத்தாயே 
விழுந்தாயே 

இதனிடயே எங்கள் வகுப்பிற்கு Training Teacher ஆக ஒருவர் வந்தார்,அவர் பெயர் மாலதி. முதலில் அவர் அந்த பாடத்தை எடுக்க வந்ததும் நாங்கள் சந்தோஷப்பட காரணம்,இருக்கற வாத்தியார் தான் நமக்கு என்னக்குமே பிடிக்காதே அது போல தான். இப்படி அவரை பற்றி தான் ஒருமுறை என் நாட்குறிப்பில் எழுதி இருக்கிறேன்.
பாடம் எடுப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளது மற்றவர்கள் புத்தகத்தை பார்த்து எடுப்பார்கள் இவர் ஒரு பேப்பரில் அன்றைய பாடத்தை எழுதி படித்து எங்களுக்கும் புரிவதைபோல் எடுப்பார்.சில வகுப்புகள் எங்களுக்கு படிபதற்கும் பேசுவதற்கும் மட்டும் விட்டு விடுவார். அது போல் ஒருசில சமயம்  எங்களின் திறமைகளை எடுத்து காட்டவும் வைப்பார். இப்படி ஒருமுறை ஒரு நண்பன் நான் கவிதை எழுதியதை போட்டு கொடுத்தான். அதனால் அன்று நான் முன்னமே எழுதிய அல்ல சுட்ட ஆங்கில கவிதையை கூறி கைதட்டல்கள் வாங்கி இருக்கிறேன். இப்படி மாலதி மேடம் பற்றி எழுதிய சிறிய குறிப்புகள் ஆங்கங்கே காணலாம் என் குறிப்பேட்டில்.

மூன்றாம் மூன்று மாதங்கள்:

முழுமையாய் ஆறு மாதம், மாலதி மேடத்தின் Training முடிந்து எங்களை விட்டு பிரியும் தருணம். எங்களுக்கு எடுப்பது போலவே மற்றொரு வகுப்பிலும் அவர் கிளாஸ் எடுக்கிறார் எனபது தெரியும், அவர்களுக்கு எங்கள் வகுப்பிற்கு முன்னதாகவே விடை கொடுத்துவிட்டார். ஆனால் விடைபெறுமுன் அவர்களுக்கு அவர் கூறிய வார்த்தைகள் சிலமணித்துளிகள் நெஞ்சை கணக்கவைக்காமல் விடவில்லை. அதை எங்களிடம் கூறும் முந்தய வகுப்பில் என்னிடம் அவருக்காக கவிதை எழுத சொன்னார். எழுதினேன் பத்து வரிகளில்.....

..............................
..............................
..............................
..............................
..............................
நீங்கள் எங்களை விட்டு பிரிவதாய் சொன்னீர் 
அதற்காக நாங்கள் விடுகிறோம் கண்ணீர்!

மற்றவரிகள் ஞாபகம் இல்லை என்றாலும் கடைசி இரண்டு வரிகள் இன்றும் நினைவில் உள்ளன. படித்து முடித்துடன் வகுப்பில் எல்லோரும் கை தட்டினர்,மாலதி மேடமும் மிகுவும் ரசித்தார். அந்த கவிதை முதல் பிரதி அடித்து திருத்தி எழுதியது நாட்குறிப்பில் தான். அவருக்காக கொஞ்சம் மெனக்கெட்டு அழகாய் எழுதி ஒரு காகிதத்தில் கொடுதேன் என்னுடைய பரிசாய்.

அதன் பின் அவரை பற்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டார். மாலதி மேடம் கல்யாணம் ஆனவர் என்று தெரியும் ஆனால் அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கேட்கும் போது எங்கள் மனம் கலங்கி விட்டது. அதோடு முடியவில்லை அவரின் சோகம்! கணவர் விபத்தில் மூளை சாவு அடைந்தவர் அதனால் அவரின் உறுப்புகளை தானம் செய்துள்ளார்!! என்று கேட்டபோது அவர்மேல் கருணையும்! மரியாதையும்! அதிகரித்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அவர் கூறியதை அடித்து திருத்தி பல முறை எழுதி பார்த்தேன், எதுவுமே கோர்வையாய் வரவில்லை.

கடைசி மூன்று மாதங்கள்:

ஆண்டு விழாவில் என்னையும் இன்னும் சிலரை ஒரு பட்டிமன்றம் நடத்த வைத்தார் எங்கள் ஆசிரயர் ஒருவர். ஒரு பக்க கட்டுரை அதை நாட்குறிப்பில் பதிவு செய்தேன். ஒரு ஐந்து நிமிட பேச்சு தான் அது பல முறை ஏற்ற இறக்கத்துடன் பேசி முடிக்க வேண்டும். இன்றும் அந்த நினைவை மறக்க முடியாது, நான் முஸ்லிம் மதத்திற்கு ஆதரவாக பேசினேன் மற்றவர்கள் இந்து கிறிஸ்டியன் பற்றி பேசினர். முடிவில் தீர்ப்பு மத நல்லிணக்கமே என்று முடியும். மேடை ஏறும் போது தான் ஒருவர் எனக்கு தாடி ஓட்டினார். பார்த்ததில் நிறைய பேருக்கு அடையாளம் தெரியவில்லை.கடைசியில் சில வார்த்தைகளை மறந்து நானாய் சில வார்த்தைகளை கோர்வையாய் கூறி சமாளித்தேன். 

முழு தேர்வுக்கு முழு நேரமும் படிப்பில் செலவிட்டாலும் அவ்வபொழுது கிரிக்கியவற்றை படித்து பார்ப்பேன். ஆண்டு தேர்வு முடிந்தது உடம்பெல்லாம் இன்க் தெளித்து ஓடி ஓடி கடைசியாய் மாலதி மேடம் வீட்டிற்க்கு சென்று தேநீர் சாப்பிட்டு விட்டு வந்தோம்.அதன் பின் முழு ஆண்டு விடுமுறை சந்தோஷமாய் செலவிட்டு கழித்ததில் இந்த பொக்கிஷத்தை முழுதாய் மறந்துவிட்டேன். ஆனால் என் கைகளில் இன்னுமொரு டைரி வந்து சேர்ந்தது அதை தான் ஒன்பதாம் வகுப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினேன்.


முற்றும்:

பொக்கிஷத்தை மறந்தேன் என கருத எனக்கு பல வருடங்கள் ஆகி உள்ளது. அப்பொழுதே அந்த பொக்கிஷம் கடையில் எடைக்கு போட்டாயிற்று. கொஞ்சநாள் சிலர் கையில் பொட்டலமாய் இருந்திருக்கலாம் இல்லை வெறும் குப்பையாய் மாறி இருக்கலாம். 

கையில் இருந்தால்தான் பொக்கிஷமா 
மனதில் நிறைந்தாலும் பொக்கிஷம்தான் 
பக்கம் புரட்டும் போது வரும் ஞாபகம் 
சிறியதாய் புன்சிரிப்பை வெளிக்காட்டும் 
காலம் கடந்த நினைவுகள் 
உயிர் எக்கோடி சென்றாலும் மரவதில்லை 
அதை இத்தருணம் எழுதுவேன் என்றும் நினைக்கவில்லை.

இது என் பள்ளிபருவத்தின் ஒரு பகுதி தான்.. மற்றவை நினைவில் பொக்கிஷமாய்...

என்றும் அன்புடன்,
ரசல் 

Friday, February 8, 2013

விஸ்வரூபம்


நான் சினிமா ரசிகன் எதற்காக மூன்று வாரமாய் படமே பார்க்கவில்லை என்று வினவினால்? முதன் முதலில் நான் தோற்றிருக்கிறேன் தனியே படம் பார்க்க சென்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தினால். எதுவாக இருந்தாலும் விஸ்வரூபம் கண்ட உடன் தான் மற்ற படங்களை பார்ப்பேன் என்ற உறுதி. எத்தனை விமர்சனகள் வெளிய வந்திருந்தாலும் ஒரு வரி கூட படிக்க முடியாமல் திணறி இருக்கிறேன். இதற்காக வலைதளத்தையும் புறக்கணித்து இருக்கிறேன். மற்ற படங்களை போல் விமர்சிக்க கமல் படம் ஒன்றும் தமிழ் படம் இல்லை. இது ஆங்கில படம் நமக்காக தமிழில் வெளிவந்திருக்கிறது. ஆதலால் கமலின் உன்னத படைப்பிற்கு தலை வணங்கி நான் ரசித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

விஸ்வரூபம் ஆச்சரியங்களும் புரிதல்களும்:

திரைப்படம் ஆரம்பத்திலயே கதையின் ஆழம் கருதி எம் படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்று செம் தமிழில் அறிக்கை நெகிழ செய்தது. 

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் `உலகின் எங்கோ மூலையில் ஒரு இயற்கை நிகழ்வு ஏற்படலாம்` எனபது "கயோஸ் தியரி" அது தான் தசாவதாரம். பெயர் போடும் போதே புறாக்களின் சிறகடிப்பில் விஸ்வரூபம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே புறாக்களும் அதன் சத்தங்களும் துளியமாய் அரங்கை அதிரடிக்கிறது.

தமிழ் திரைப்படங்கள் பாதியில் இருந்து பார்த்தால் புரிந்து விடும் என்ற கேளிபேச்சு இந்த படத்தோடு முடியட்டும். கண்டிப்பாய் அரங்கிற்கு அரை மணி நேரம் கடந்து வரும் எவருக்கும் படம் புரிய வாய்ப்பே இல்லை. 

அதே போல் அந்த அரை மணி நேரம் விஸ்வநாத் என்கிற கதக் நடிகனை பார்த்தாலே போதும், நடிப்பு என்றால் என்ன என்று. ஓடுகிறான்,நடக்கிறான்,பேசுகிறான் பெண்ணியத்தோடு என்பவர்க்கு ஒரு கொட்டு அது பரதமாய் வாழ்கிறான் என்று பொருள்.

முதல் சண்டை கண்டிப்பாய் பார்பவர்களுக்கு இது தான் மாஸ் என்று புரியும். எங்கே கண் மூடி திறப்பதற்குள் சண்டை முடிந்ததா என்று ஆச்சரிய பாடுபவர்க்கு படத்தில் பதில்களும் உள்ளது.

எழுத்துரைக்கும் உச்சரிப்புகளை எழுதியதும் கமல், அதில் நையாண்டியும் உண்டு நாசுக்கும் உண்டு. நீங்க நல்லவரா கெட்டவரா கேள்விக்கும் விடை கொடுத்திருக்கிறார்.

கலை இயக்குனர் இளையராஜா பெயர்க்கு ஏற்றார் போல் கமலின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு சானு வர்கீஸ் அமெரிக்காவையும் ஆப்கானையும் அழகும் அழுக்குமாய் புழிதியாய் படம் பிடித்து நிறைவை ஏற்படுத்தி இருக்கிறார்.

எடிட்டிங் மகேஷ் நாராயண் இவர் இல்லை என்றால் கமலின் கதை சொல்லிய விடம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இசை அதிலும் "அணு விதைத்த பூமியிலே" பாடல் இனிமையின் உச்சம் காட்சி படுத்தியதில் பளார். இது மக்களை மக்கள் நேசிக்க வேண்டிய இடம் என ஓடும் இடமெல்லாம் குண்டும் துப்பாக்கி சத்தமுமாய் கமலின் குரல். அன்பே சிவம் வரிசையில் இந்த பாடலும்.

அண்ட்ரியா பூஜா மற்றும் பலர் கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒரு கலைஞன் என்று விஸ்வரூபம் எடுக்கிறான் அங்கே அவனின் படைப்பை முடக்கும் போது. இங்கே அடிப்பட்டாலும் தமிழின மக்கள் பெருமை படவே தன் உதிரம் சுண்டும் வரை போராடி வெள்ளித்திரையில் விஸ்வரூபம் அடையும் கமலுக்கு நன்றி.

இங்கே இன்னும் சிலரை இப்படம் எடுத்தமைக்காக வாழ்த்துக்கிறேன். 

Produced by
Andrew Greve .... consulting producer

Original Music by
Shankar Mahadevan
Loy Mendonsa
Ehsaan Noorani

Cinematography by
Sanu Varghese

Film Editing by
Mahesh Narayan

Production Design by
Boontawee 'Tor' Taweepasas

Art Direction by
Ilayaraja

Costume Design by
Gautami Tadimalla

Production Management
Dan Campbell .... production manager

Second Unit Director or Assistant Director
Azad Alam .... assistant director
Ike .... assistant director
C.S. Karthikeyan .... assistant director
Krishna .... assistant director
Praveen Kumar .... assistant director
Rajesh M. Selva .... assistant director
Jude S. Walko .... assistant director
Lee Whittaker .... second unit director

Art Department
Shelly Newman .... property master

Visual Effects by
Vikas Surajbali Nag .... digital compositor

Stunts
Steven Dutton .... stunt driver
Shelly Newman .... stunt driver
Lee Whittaker .... stunt coordinator

Camera and Electrical Department
Dan Irving .... still photographer
Jonathan Sessions .... grip

Costume and Wardrobe Department
Preethi Kanthan .... assistant costume designer

Transportation Department
Steve Dutton .... picture car coordinator

Other crew
Jose Mas Perez .... location intern
Rajesh M. Selva .... script supervisor
Edward A. Sherman IV .... assistant location manager

உங்கள் அன்புடன்,
ரசல்