Sunday, December 16, 2012

நீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த ஞாபகம்!

நீதானே என் பொன்வசந்தம் -  முதல் முறை பார்த்த ஞாபகம்!



An Ilayaraja Musical
இளையராஜாவுக்கு காதல் கதைகள் என்றால் இளமை ஊஞ்சல் ஆட வைக்கும். பாடல்களில் இருந்த முதுமை இசை படத்தில் இல்லை. அவ்வபோது மௌனமே இசையாய் கொடுத்ததில் மட்டுமே ராஜா சார்.மற்ற இடத்தில guitar கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார். எங்கே அவரின் வயலின் இசை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. படத்தின் கோர்வையில் வரும் பாடல்கள் இதம், இடையில் பேசும் வசனங்கள் இங்கீதம். 

A Gautam Vasudev Menon Film
மின்னலேவும் விண்ணை தாண்டி வருவாயவும் ஏற்படுத்திய தூக்கம் இழந்த பொழுதுகள் இல்லை. காதலும் நெருடலும் சொல்லிருந்தாலும், அதை மூன்று பருவமாய் பிரிதிருந்தாலும், அதை படமாக இரண்டரை மணிநேரம் தேவையில்லை. பாடல்களிலும் கதை சொல்லும்போது தேவை இல்லாத சில பல பேசிக்கொள்ளும் காட்சிகள், கேள்விகளுக்கு விடை அளித்தாலும் நீதானே என் பொன்வசந்தம் வெறும் வசந்தம் மட்டும் தான். கண்டிப்பாக அடுத்த படத்தில் நீக்க பட வேண்டிய வார்த்தைகள்
1. காலி 
2. செம்ம feeling
3. அவ்ளோ அழகு 

இன்னைக்கும் கவுதம் அளவுக்கு காதலின் ஆழத்தை கூறியவர்கள் இல்லை மணிரத்தினத்தின் அலைபாயுதே மட்டும் விதிவிலக்கு. காதல் என்றும் ஆரம்பிக்கும் போதும், வெற்றி அடையும் போதும், சந்தோசம் மட்டும் தான் தெரியும்! அதை வெற்றியடைய போராடிய இரண்டு இதயங்களின் போராட்டங்கள் வலிச்சா மட்டும் தான் தெரியும். விண்ணை தாண்டி வருவாயா ஒரு ஆணின் மனதின் ரணத்தை காட்டியது, நீதானே என் பொன்வசந்தம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை பகுதியாய் காட்டியதிற்கு பாராட்டுகள். ஆனால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை அதனால் சிலர்க்கு பிடித்து பலருக்கு பிடிக்காமலும் போகலாம். This could be your love story tag போட்டுட்டு கூடவே இதையும் போட்டிருக்கலாம் and not everyone's story.

Jeeva & Samantha in
ஜீவா சரியான பொருத்தம் இல்லை ரொம்வவும் matured அஹ இருக்குற இமேஜ். வார்த்தைகளின் உணர்ச்சியில் பேசக்கூடிய வசனங்கள் உணர்ச்சியே இல்லமல் பேசப்படுவது ரசிகர்களை கத்தி இல்லாமல் கொள்வதற்கு சமம். இதுக்கு மேல ஜீவா நடிப்பை பத்தி பேச ஒன்னும் இல்ல.

சமந்தா நித்யாவாய் வாழ்ந்திருக்கிறார். ஸ்கூல் டிரஸ் ஆகட்டும், 20 வயசு பெண்ணாகட்டும் , 24 வயசு பெண்ணாகட்டும்! அவ்ளோ இயல்பும் இளமையும். எதற்காக அழுகிறோம் என்பதை அனுபவித்து நடித்தால்! அந்த காட்சி பிரமாதமாய் வரும் அப்படிதான் பல இடத்தில நடித்திருக்கிறார். ஜெசியை விட நித்தியா நேர்மையானவள்! அழகானவள்! ஆழமானவள்!. கவுதம் இந்த படத்தை சமந்தாவிர்க்காக எடுத்திருக்கிறார். காதலில் பெண்களின் வலிகளை நேர்த்தியாய் நடித்திருக்கிறார். Dependent person என்று ஜீவா சொல்லும் இடத்தில,சமந்தா ஏன் dependent என்று விளக்கிய விதம் நிறைய பேருக்கு புரியவில்லை.ஆனால் போறத்துக்கு முன்னாடி என்ன கட்டிபிடிச்சி இருந்தா? நான் கோவபட்டிருக்க மாட்டேன்! கண்டிப்பா அவன் கூட தான் இருந்திருப்பேன்! என்ற இடத்தில சமந்தாவின் காதலை புரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் சமந்தாவிருக்கு. I love samantha என்று சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை.

Santhanam comedies
சந்தானம்! சந்தானம்! தான் ஒரு வரி காமெடியன் அப்படின்னே கூப்பிடலாம். படத்தில சமந்தாவிர்க்கு பிறகு, சந்தானத்தோட காமெடி ஒரே ஆறுதல்.Chill out Chill out.

MS Prabhu & Om Prakash Cinematography And Antony Editing:
சொதப்பல் பா! இன்னும் கூட அழகை அழகாய் காட்ட முடியும் ஆனால் வெறும் காட்சியை ரொம்ப நேரம் காட்ட முடியாது. ஒரு சபாஷ் இருக்கு இண்டர்வல் முன்னாடி பத்து நிமிஷம் சீன் ஒரே Shot, ஒரு பறக்கும் காத்தாடியில் இருந்து பார்க்கும் அளவிற்கு எடுத்திருந்தாலும் நாயகனும் நாயகியின் expressions ய் எடுக்க மறந்து விட்டார்கள். எடிடிங்க்க்கு வேலை இல்லாத படம்.

வழங்கும் 
"நீ தானே என் பொன்வசந்தம்"
முதல் முறை பார்த்த ஞாபகம்....
மழை வரும் மாலை நேரம் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம்.

சிலர் மட்டுமே இது மாதிரி பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் வலிகளை புரிந்தவர்களுக்கான படம் நல்லா இருக்கு, இன்னும் நல்ல குணங்களுடன் இருக்கும் பெண்களை விரும்புவர்களுக்கு சுமார்.காதலே தெரியாதவர்களுக்கு மொக்க. Strictly for Dependent Girls who loves thier man deeply....


என்றும் காதலுடன்,
ரசல்

No comments:

Post a Comment