Monday, March 23, 2015

வாழ்க்கைப் போர்! - கவிதை


எழுத துடிக்கும் கைகளுக்கும் 
வார்த்தைகளை தேடிகொண்டிருக்கும் புத்திக்கும் 
இடையே போர்!

முதல் போர்!
கடந்த காலம் தரும் நினைவுகளை சுமந்து..
சுவுடுகளை மறைக்கும் தவறுகளின் சீர்திருத்தம்!
காதலில்லை உலகிலென 
கண் துருத்தி பார்த்தால்! 
மடை திறந்தார் போல் ஊற்றுகிறது வீதிக்கோர் காதல் 
விளக்கதிற்கோர் காதல், போட்டிக்கொரு காதல் 
உணர்விர்க்கோர் காதல்... அது பச்சை பசேலென தழைத்திருந்தது..
நடக்கும் பாதையில் புத்துணர்வு பிறந்தது
ஆனால் வாடியவை கண்டு வெதும்பியது...

இரண்டாம் போர்!
நிகழ்காலம் தந்து கொண்டிருக்கும் சுவாரசியங்களில் 
கால மாற்றம் தரும் ஆச்சரியங்களின் சீர்திருத்தம்!
சுமையென கருதும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்!
பணி சுமை, உடல் சுமை, தேடல் சுமை 
வாழ்க்கை சுமை, வாழ்வாதாரம் சுமை 
ஆனால் பாசமெனும் சுமை அனைத்தையும் கட்டிக்கொண்டது!
வாழ்க்கையில் தெளிவு இருந்தது இன்றைய நாள் போனதென்று.. 
ஆனால் இழந்தவை கண்டு வெம்பியது..

மூன்றாம் போர்
எதிர்காலம் புரியாமல் எதை நோக்கி என்றும் தெரியாமல்..
கடந்தவை மீண்டும் பெறமுடியாது என்று விளங்கியும்!
சேமிப்பு ஒன்றே வாழ்வாதாரம் எனும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்
பண சேமிப்பு, இடம் சேமிப்பு, மருத்துவ சேமிப்பு 
கல்யாண சேமிப்பு, களிப்பு சேமிப்பு, வீடு சேமிப்பு 
ஆனால் அவை திட்டமிடலின் பரஸ்பரம் 
வருமானம் சேமிக்கலாம்.. வளமாகவும் இருக்கலாம்!
ஆனால் இரண்டாம் போர் கருதி ஏங்கியது!

http://www.chillzee.in/poems-link/207-p-rasal-kavithaigal/4177-vazhkkai-por

இப்படிக்கு,
ப.இரசல் 

No comments:

Post a Comment