Monday, May 18, 2015

புறம்போக்கு எனும் பொதுவுடைமை - என் பார்வையில்



ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகு சில தெரிய வேண்டியவற்றை ஓரளவேனும் புரிந்த பின்எழுத ஆரம்பிக்கிறேன். திருவள்ளுவர் பொதுவுடைமை(communism) பற்றி எழுதி இருப்பாராஎன்று ஒரு கேள்வி எழுந்தது அதற்க்கான தேடுதலில் கிடைத்த குறள்

அதிகாரம்: கொல்லாமை குறள்:322
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"

Macaulay வகுத்த IPC(Indian Penal code) மூலம் இந்திய அரசாங்கம் குற்றவாளிகளுக்குதண்டனைகள் இன்றும் கொடுத்து வருகிறது. அப்படி குற்றவாளிகளுக்கு கண்டிப்புடன் தண்டனைகள் வழங்க வேண்டுமென நினைத்த Macaulay தான் காவல் துறை அதிகாரியாகவரும் ஷ்யாம்'ன் பெயர். இதனால் கதாபாத்திரத்தின் செயல்கள் கண்டிப்பாகவும் கடமை உணர்வுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஷ்யாமின் நடிப்பு திறமை இந்த கதாபாத்திரத்தின் மூலம் மெருகேறி உள்ளது.

பாலு என்கிற கதாபாத்திரத்தில் ஆர்யா. மக்களுக்காக ஆயுதம் ஏந்திய போராளி. இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் குப்பைகளை அனுமதிக்க கூடாது என்ற பிரச்சரரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க இந்திய ரானுவத்திர்க்கே மனித வெடிகுண்டாய் மாறிய போராளியின் கதாபத்திரம் இந்த பாலு. சமிபத்தில் படித்த ஒரு சில செய்திகள் தான் ஞாபகம் வந்தன அயல்நாட்டு குப்பைகளை கொண்டு வந்து அழித்திட இந்தியா என்ன குப்பை தொட்டியா? ஆனால் மக்களுக்காக போராடுபவன் போராளி அவன் அழிந்தால் தான் மக்களுக்கே நிம்மதி என தூக்கு தண்டனை விதிக்க பட்ட குற்றவாளி இந்தபாலு. ஆர்யாவின் நடிப்பு திறமையில் சந்தேகமே இல்லை அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

எமலிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கொலை செய்பவன் கொலையாளி அப்படியென்றால் தூக்கு தண்டனையை நிரவேற்றுபவன் கொலையாளி தானே. இப்படிஒரு கதாபாத்திரம் இது வரை திரைப்படங்களில் காட்டப்படாதவை. அதுவும் ஒருகுற்றவாளி முகத்தை மூடும் போது என்னை யாருமே நம்பவில்லை நீயாவது நம்பு நான் நிரபராதி என்று கூரியவனையே தூக்கிலிடும் துயரம் சொல்லமுடியாதது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு எவராலும் நிறைவாய் தந்திருக்கமுடியாது. உண்மையில் ஷ்யாமையும் ஆர்யாவையும் விட ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.

எஸ் பி ஜனநாதன் communism பற்றி இதற்க்கு முன் ஈ மற்றும் பேராண்மையில் நன்றாகவேகூறி இருப்பார். அதே பாணியில் இந்த படமும் இருக்கிறது ஆனால் சிறு தடையாக முதல்மூன்று பாடல்கள் நெருடலாய் போனது. பின் பாதியில் முழுமையாய் பார்ப்பவர் மனதில்அழுத்தம் திருத்தமாக தனியுடமை விட பொதுவுடைமை பற்றி கருத்துகளை பதிவிறக்கம்செய்கிறார். சிறைசாலையில் நகரும் கதையில் முன்புவந்த படங்களை போல் அல்லாமல் ஒவ்வொரு காட்சிகளும் அளந்து எடுக்கபட்டுள்ளன. அதிலும் ஒரு இடத்தில் தவறு செய்தான் என்று தான் தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கிறோம், அங்கும் துன்புறுத்தல் நடந்தால் அது தவறு என்று ஆர்யா ஜெனிவா ஒப்பந்தத்தை சுட்டி காட்ட அதற்க்கு ஷ்யாம் துன்புறுத்த கூடாது என்று தான் இருக்கிறது ஆனால் தண்டனை கொடுக்கலாம் என்று இருட்டறையில் சாப்பாடு இல்லாமல் அடைக்க உத்தரவிடும் இடம் யோசிக்க வைக்கிறது. ஏனென்றால் அந்த கைதி எட்டாவது முறையாக தப்பிக்க முயற்சி செய்ததால் கசையடி கொடுத்து கொண்டிருந்த போது நடந்த உரையாடல் அது. இப்படியாக படம் நெடுக சிறை அரசியல் மற்றும் தவறுகளின் சுட்டிக்காட்டுதல்கள். கார்த்திகா நாயர் போராளியாக நடித்திருந்தாலும் இந்த படத்திற்கு ஏற்றவாறு உள்ள கதாபாத்திரமாக தெரியவில்லை. பெண் போராளி இன்னும் கூட அர்த்தமுள்ளவராக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.

கலங்கிய நெஞ்சத்துடன் திரைஅரங்கை விட்டு வெளியே வந்த எனக்கு இந்த திரைப்படமும் பேசப்படவேண்டும் என்பது என் கருத்து.

பொதுவுடைமை பற்றி மேலே கூறிய குரலின் அர்த்தத்தையே வைத்து இந்ததிரைபடத்தின் பார்வையை முடிக்கிறேன்.

உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமேஇல்லை.

என்றும் அன்புடன்,
ப.இரசல்

ஓகே கண்மணி - என் பார்வையில்

ஒரு முறை என்னுடைய whatsapp status "காதலை காதலால் தவிர காதலாய் கூற முடியாது" என்பது தான். அதை எப்படி கூறுவது காதல் இனிமையானது என்பதை தவிர. ஆதாம் ஏவாள் காதலை தொடங்கி வைத்தனர் எனபது மட்டும் தான் உண்மை. அட யாருக்கு தான் இல்லை காதல்... இப்படி அடுக்கி கொண்டே போய் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் காதலை திரையில் கண்டால் பொங்குவது மகிழ்ச்சியா கண்ணீரா. ஆம் இரண்டும் கலந்தது தான் அது. அப்படி பட்ட காதலின் மற்றுமோர் பரிமாணத்தை கண்டேன் ஓ காதல் கண்மணி படத்தில்.



மணிரத்தினம்... இன்றுவரை சொல்லாத காதலை.. சொல்லத்தான்.. உருவாக்கத்தின் எல்லையாய் இருந்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு கவிதையோடு கூறி இருக்கிறார். ஓகே கண்மணி என்று கூறும் ஓவ்வொரு நொடியும்.. நமக்கு நாமே கூறி கொள்ளும் ஓகே கண்மணி..ஒன்னும் இல்லை எல்லாம் நலமே என்பது தான். அடடா செதுக்கல்கள் எல்லா இடத்திலும் எல்லா காட்சியின் ஓட்டத்திலும். காதல் கரை உடைந்து ஓடுகிறது. இன்றைய கால கட்டத்தில் மேலை நாடுகளின் தழுவலை கொண்டு இந்தியாவில் எதிரொலிக்கும் கலாசார மாறுபாடு தான் இந்த ஓகே கண்மணி.

அதை கூட எந்த ஒரு சமரசம் இல்லாமல் வார்த்தைப் பேழையோடு ஜாலம் செய்திருக்கிறார் மணிரத்தினம். குடும்பத்தோடு பார்க்கும் படம் அன்று என்று கூறும் அனைவருக்கும் கூறி கொள்ளும் ஒரே பதில் முதலில் திரை அரங்கிருக்கு வாரும் பின் பேசி கொள்வோம். இன்றைய சமுதாயம் மௌனராகம்,இதயத்தை திருடாதே,அலைபாயுதே அன்று, அது ஓகே கண்மணி என்று புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

ஏ ஆர் ரஹ்மான் இசை கவர்ந்தது முதலில். ஆனால் படத்தை கண்டபின் அது பீ சீ ஸ்ரீராம்,ஏ ஆர் ரஹ்மான்,மணிரத்தினம் கூட்டணியின் எல்லை இல்லா உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் என்பதை உணர்ந்தேன். 

நடிகர் நடிகையர் என்று வரை பிரிக்க முடியாமல் ஒவ்வொருவரும்  தங்கள் நடிப்பு திறமையால் உயிர் ஊட்டி உள்ளனர் இந்த படத்திருக்கு.

ஓகே கண்மணி திரைப்படம் ஒரு காலப்பெட்டகம் எப்போது காதலை பூரித்து கொள்ள நினைக்கிறீர்களோ அன்று மீண்டும் உங்கள் கானொளியில்.

என்றும் காதலுடன்,
ப.இரசல்