Monday, January 18, 2010

கல்மரங்கள்(Fossil Wood)

கல்மரங்கள் தேசிய பூங்கா - திருவக்கரை, தமிழ்நாடு




இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.


ஒரு சில உறுத்தல்கள்:
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
உங்கள் பார்வைக்கு கல்மரங்களின் புகைப்படங்கள்:







Monday, January 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கண்மணியே!

திக்கு திசை மாறி காற்றில் பறந்து வந்த வண்ணத்துபூச்சி நீ
உன்னுடய வண்ணங்கள் தான் எத்தனை
வண்ணங்கள் யாவும் உன்னுடைய எண்ணங்கள் தானே
திசை மாறி வந்தாலும் உன் இருப்பிடம் நோக்கி தானே வந்தாய்!

நானும் ஒரு வண்ணத்துபூச்சி தான் நிறம் ஒன்று தான்
எண்ணங்கள் வேறு காற்றோடும் திசையில் எதிர் நோக்கி பயணங்கள்
கிடைக்கும் மரங்களில் இளைப்பாறி என் குறிக்கோளை நோக்கி
என் குறிகோளும் நீ இருக்கும் இடத்தை தேடி தான்!

திக்கு முக்காடி போனேன் உன் இடம் அடைந்த பின்
உன் குரல் மட்டும் அறிந்து உன்னை காணாமல்
நீ தான் என் தேடல் என்றும் உணராமல்
மரக்கிளையில் இருக்கும் வேறு வன்னதுபூச்சியை கண்டு!

உன் என்னனங்கள் உன் குரலில் பிரதிபலித்திட
உன் வண்ணங்கள் யாதென்று உணர்ந்தேன்
என் எண்ணங்களோடு உன் குரல் வண்ணங்களில் இணைந்தேன்
தேடல் நீஎன்றும் உணர்ந்தேன்!

சிறகடிக்கும் உன்னோடு ஒரு நாள் சந்திப்பு
மனம் துடிக்கும் அதை இன்றும் நினைத்து.........

வினா கேட்கும் உன் குரலை கேட்டு
கண்டேன் கனவுகள் உன் குழலை தொட்டு!

குரலும் இனிமையானது என் கவிதையும் அழகானது
நீயே பொருளான போது!
உன் பிறந்த நாளை கொண்டாட நானில்லை உன்னோடு இன்று
ஆனால் என் எண்ணங்கள் உன் கருத்தோடு
உயிர் பொருளாய் நான் இல்லை உன்னருகில் ஆனால் உணர்பொருளாய் உன்னுள்ளே!!

உயிர் கொடு இந்த கவிதைக்கு
நீ முத்தமிட்டால் உணர்ச்சிபெரும்!
அரவணைத்தால் உயிர்பெறும் கண்மணியே!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!