Monday, December 17, 2012

ரொட்டி!! (ஒரு திகில் கதை)


ரொட்டி!! (ஒரு திகில் கதை)
இதை நான் ஒரு திகிலுடன் தான் எழுதுகிறேன்.
இரு சிறுவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்! அதில் ஒருவன் மட்டுமே அந்த சம்பவத்தை விவரிக்க! இன்னொருவன் உற்று கேட்டு கொண்டிருந்தான். அதாவது முந்தைய நாள்.....................................................................................

தன் தந்தையுடன் அருகில் இருக்கும் ரொட்டி கடைக்கு சென்றிருந்தான்.அங்கு வித விதமான ரொட்டிகளின் வடிவங்களை பார்த்த அவனுக்கு ஒரு ரொட்டி தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்திருக்கிறது.அதை வாங்குமாறு தந்தையிடமும், கடைக்காரனிடம் எடுத்து தருமாறு கேட்டான். அப்போது அந்த கடைகாருக்கு வேர்த்திருக்கிறது சற்றும் பதறிய வார்த்தைகளோடு உளற ஆரம்பித்திருக்கிறான். தன் தந்தை தன்னை அங்கு இருக்கும் உட்காரும் இடத்தில அமர்ந்திருக்குமாறு சொல்லி இருக்கிறார்...........................

தன் தந்தையும் அந்த கடைகாரரும் கடைக்கு வெளியில் சென்று பேசி இருக்கிறார்கள். அதை பார்த்தால் அது ஒரு ஏதோ  குலைநடுங்கும் சம்பவம் போல பேசிகொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து உள்ளே வந்த அவன் தந்தை, அவனை வேக வேகமாய் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். தன்னிடமும் அவன் தாயிடமும் இனி அந்த கடைக்கு போக வேண்டாம் என்றார். அவனுக்குள் இருந்த அச்சம் களைந்து அவன் தந்தையிடம் ஏன் என்று வினவி இருக்கிறான். அதற்க்கு அவன் தந்தையும் சற்று குழம்பிய வார்த்தைகளோடு...................

அங்கு பேய் இருக்கிறது நீ பார்த்த அந்த ரொட்டி, அந்த வடிவில் இல்லை போலும் செய்யும் போது . ஆனால் அது தினமும் ஒவ்வொரு இடத்தில கடித்து வைக்க பட்டது போல் காட்சி அளிக்கிறது. அதனால் தான் அந்த கடைக்காரர் தனியே என்னை வெளியே கொண்டு சென்று விளக்கினார். நாம் இனிமே அந்த கடைக்கு போக கூடாது  சரியா என்று கூறி இருக்கிறார்..............................

அடுத்த நாள் ஸ்கூல் பஸ் போகும் வழியில் கடையை எட்டி பார்த்திருக்கிறான் அங்கு கடை மூட பட்டிருக்கிறது. வெளியே மந்திரித்து கட்டிய எலுமிச்சை பச்சை மிளகாய் தெரிந்தது என்று அந்த சிறுவன் கூறி முடித்தான். அந்த இன்னொரு சிறுவன் உண்மையாவா டா!! டேய் பயமா இருக்கு டா..............

PIZZA(A thrilling Food without need of seasoning(Brand Actors) and appetizers(Brand Producers & Distributors))
மேலே கூறியவையும்  இந்த pizza படத்திற்கும் ஒரே ஒரு சம்மந்தம் உண்டு அது திகில்!! திகில்!! திகில்!!  திகில்லை தவிர்த்து வேர் எதுவும் இல்லை.  இதில் முக்கிய பாராட்டுக்கள் cameraman  தோளில் தன்னுடைய கனவுகளை திரைக்கதை எனும்  திறனால் ஒரு இரண்டு மணி நேர திகிலை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் இரண்டாம் நாயகன் இசை,திகில்லிர்க்கு தேவையான அத்தனை நுண்ணிய பயமுர்த்தும் இசை அது.முதல் முறையாக காட்சிகளையும் வசனத்தையும் தெரிவிக்காமல் எழுத வேண்டிய விமர்சனம் இது. அப்படி எழுதி விட்டால் அதுவே படத்திற்கு spoils-pot ஆகி விடும். அதனால் இந்த படத்தில் தெரிவிக்க மறந்த ஒரு  கருத்தை மட்டும் எழுதுகிறேன் "தயவு செய்து இந்த படத்தின் முடிவை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்"

Climax of ரொட்டி(ஒரு திகில் கதை)
மனைவி : ஏங்க பையன் கிட்ட சொன்னீங்க? அவனுக்கு என்ன புரியும்.
கணவன்: நான் அவனிடம் உண்மையை கூறவில்லை. அங்கு பேய் இருப்பதாய் அவனை மிரட்டி இருக்கிறேன். அதனால் அவனாக அங்கு செல்ல மாட்டான். அதனால் தான் எலி கடித்த அந்த ரொட்டியை வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. நாளை அந்த கடை சீல் வைக்க பட்டிருக்கும் சுகாதார துறையால்.
மனைவி: நல்ல வேலை என்கிட்ட  நீங்க சொல்லல அந்த கதையை!!! இல்லாவிட்டால் இந்த ஏரியாவே அந்த கடைக்கு போகும் போது பயந்திருக்கும். நான் ஒரு ஓட்ட வாய் பாருங்க.....

No comments:

Post a Comment