Monday, December 17, 2012

மாற்றான்

இரண்டு மூன்று காட்சிகள் முடிந்த பின் மாற்றான் படத்தினை சூரியாவிர்க்காக பார்க்கணும், KV Anand technical treatment க்காக பார்க்கணும், ஒளிபதிவிர்க்காக பார்க்கணும்,இசை தான் சுமாராக இருக்கிறது,இரண்டாம் பாதி இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம், என விமர்சனங்களை கேட்டு உள்ளே போய் அமர்ந்தேன்.
First Half:
முதல் பதினைந்து நிமிடத்திற்குள் என் இரண்டு வரிசைகள் காலியாக இருந்தது,பிறகு ஒரு பெரிய குடும்பம் அந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஒரு குழ்ந்தை சிணுங்கியது உடனே,அங்க பார்.. அங்க பார்... சூர்யா பார்... அந்த குழந்தையும் அமைதி காத்தது. சரி நான் என்ன செய்தேனா? முதல் பாதி என்னை எழுந்திருக்க விடவில்லை.. அத்தனை சுவாரசியம்.. அத்தனை மிகை படுத்தாத சூர்யாவின் நடிப்பு...அத்தனை கோணங்களில் ஒளிப்பதிவு..கதையின் மூலக்கரு.. உண்மையில் சூர்யா தன்னுடைய நான்கு தோள்பட்டையில் படத்தை தாங்கி நிற்கிறார்.
Interval:
ஒருவன்: என்ன மச்சி இப்படி ஆயிடிச்சி.. செம சீன் இல்ல அந்த roller coaster fight... இப்போ என்ன ஆகும் சொல்லு 
இன்னொருவன்: இப்போ கொஞ்சம் கொஞ்சமா எது உண்மைன்னு இந்த சூர்யா கண்டு பிடிப்பாரு.. 
டீ காரர்: டீ வேணுங்கிறவங்க இங்க வாங்க.. டீ சார்... டீ சார்..
(நான்:அவசரப்பட்டு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டனோ.. டீ வாங்கி இருக்கலாம்)
Second Half:
என் இருக்கை நன்றாக தான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து, ஏதோ சரிக்கி கொண்டே போய் கொண்டிருந்தது. நான் எவ்ளோ நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தேனோ?படத்தில் இருந்த அணைத்து சுவாரசியமும் இழந்து... ஒரு வித சலிப்பு தன்மை வந்தது.. சரி ஆனது ஆச்சி கிளைமாக்ஸ் வரை பார்த்திட்டு போகலாம் என்று மேலும் சறுக்கி விளையாடும் விளையாட்டை விளையாடியே படத்தை கவனித்தேன். வாங்கி வந்த கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சி தந்தது நல்ல வேலை டீ வாங்கல? ஒரு பாட்டு வந்திச்சி "கால் முளைத்து" அப்பாஆஆஆஆஆ ரஷ்யன் பாடல்....அட அட அட ஹரிஸ் ஜெயராஜ் சரக்கு தீந்து போச்சு போல..செதுக்கிட்டார், பாடல் முடிவில் சண்டை எதிர் பார்த்தது தான். அடுத்தது பர பர கிளைமாக்ஸ் படம் முடிந்தது. 
மக்கள் செய்தி:
தம்பி சூர்யா நல்லா நடிச்சிருந்திச்சி.. ஆனா போன படம் மாறி பாட்டெல்லாம் அவ்ளோ நல்லா இல்லை. சூர்யா காமெடி பண்ணவே இல்ல. எல்லாமே சூரியான்னு ஆனதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு சூர்யா ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் பெற்று விட்டதால்.இது வரிசையாய் மூன்றாவது படம் என்பது நினைவிருக்கட்டும்.

ரசல்: முடிவா என்ன சொல்ல?
படத்தில் வரும் இரண்டு சூர்யாக்களை வெட்டி எடுக்க தெரிந்த இயக்குனர்,இரண்டாம் பாதியை வெட்டி எடுக்க மறந்து விட்டார். 

No comments:

Post a Comment