Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



தோரணை:
காட்டில் வாழும் மிருகங்கள் கரடி,ஓநாய்,ஆடு,புலி இவை எல்லாமும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் கதை. ஆனால் ஏன் காட்டின் ராஜா சிங்கம் வரவில்லை என்ற கேள்விக்கு? தெரிந்த விடை இசையின் ராஜா சிங்கமாய் தன் கர்ஜிக்கும் இசையில் மொத்த படத்தின் ஓட்டமும் நிறைவு பெறுகிறது. இளையராஜா இசையின் ராஜா என்பதை இன்றும் பூர்த்தி செய்கிறார்,அதை மிஷ்கின் இங்கே பின்னணி இசையென குறிபிடாமல் முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என படத்தின் பெயருக்கு முன் போட்டவிதமே படத்திற்கு தோரணை கட்டி அழகு சேர்தலாயிற்று.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இசை கோர்வையும்:
படத்தில் மொத்தம் மூன்று அல்ல நான்கு பதிவுகள் பகலில் வந்திருக்கலாம் மற்று முழு படமும் இரவில் அரங்கேறுகிறது ஆக மின்மினி பூச்சிகளின் சத்தம் ஆங்கங்கே புற்களும் மரங்களும் அதிகம் நிறைந்த இடத்தில் வந்து போவது எவ்வளவு கூர்மையாய் படத்தொகுப்பும் இசை ஒலியும் ஒன்றி போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

மின்மினி பூச்சியை விட அழகானது ஓசையே இல்லாமல் சில இடங்கள் வந்து போவது. அதனினும் அழகானது கண்ணீர்,வேதனை,தேடல்,ஆச்சர்யம்,வலி,பதட்டம் இவை போல் பல சூழ்நிலைகளை படத்தொகுப்பும் இசையும் ஒவ்வொருவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கிறது.

இந்த படம் மூலம் ஒளிப்பதிவாளர் பாலாஜி வீ  ரங்கா புத்தம்புது வண்ணம் திரைப்படத்திற்கு ஊட்டுகிறார்.

கதாபாத்திரமும் கதையும்:
மிஷ்கின் படத்திற்கே உரிய வெற்றி வியுகங்கள் ஆங்கங்கே தெளித்துவிட்டு. படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்திருக்கின்றனர். அதில் சிலர் சில நிமிடமே வந்தாலும் பேசவைகின்றனர். அப்படி பட்டர்வர்கள் சிலரை குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது ஆனால் கதையும் முழுதாய் விளக்க முடியாது. அவைகளுள் பல..

காவல்துறை கதாபத்திரங்கள் 
நல்ல போலீஸ்,கெட்ட போலீஸ்,பச்சோந்தி போலீஸ் மற்றும் உயிரைகொடுக்கும் போலீஸ்.

மக்கள் கதாபாத்திரங்கள்
பைத்தியக்காரன்,HOD மருத்துவர்,கண் தெரியா அம்மா அப்பா மகள் குடும்பம்,திருநங்கை,கண் தெரியாதவர்களின் பாடல் குழு,வாட்ச்மேன்,ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பணத்திற்காக விசுவாசத்திற்காக உயிர் பறிக்கும் கொலைகாரர்கள்.

முக்கிய கதாபாத்திரங்கள்
மிஷ்கின் ஓநாயாய் ஸ்ரீ ஆட்டுகுட்டியாய் 

இப்படி மேலே குறிபிட்டவர்கள் அனைவரும் இரு இரவில் பங்கேற்கும் கதை துளி நேரம் தொய்வில்லாமல் நகர்கிறது. 

சண்டைக்காட்சியும் மிஷ்கினும்:
ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அவ்வளவு நேர்த்தி. மிஷ்கின் உண்மையிலே சண்டைபோடுவதை போல் சிலிர்க்க வைக்கிறார் குறிப்பாக கிளைமாக்ஸ்ல். அதிகம் வன்முறை இருந்தாலும் அவையாவும் திணிக்க பட்டவை அல்ல கதையின் ஓட்டத்திற்கு தேவைபடுபவை. 

நானும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:
திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் கூட்டமல் வெளியிட்ட போதே எனக்குள் இருக்கும் ரசிகன் திரை அரங்கம் தேட ஆரம்பித்து விட்டான். கிடைத்தது எங்கே என்று ஆனால் நல்ல திரைப்படங்கள் பெரிய திரைஅரங்கில் வெளியிட யோசிக்கும் போது பெங்களூரில் என் குடியிருப்பு அருகாமையில் BGRADE படங்களை திரையிடும் திரைஅரங்கில் வெளியானது.ஒரு பக்கம் மனம் வருந்தினாலும் படத்தை பார்த்து முடித்தவுடன் அந்த திரைஅரங்கின் ஊழியரிடம் நன்றி கூறி வந்தேன். இங்கே கலைதாகம் தீர ஆட்டுகுட்டியாய் என்னோடு வந்த நட்பு ஆடுகளையும் இந்த ஓநாய்க்கு(மிஷ்கின்) இரையாக்கி வந்தேன் மகிழ்ச்சியுடன்.

கண்டிப்பாக கூறுவேன் இது 100 வருட சினிமாவிற்கு இந்த படம் மேலும் ஒரு அலங்கரிப்பு.


என்றும் அன்புடன்,
ரசல்