Wednesday, November 24, 2010

சில்லுனு இருக்குதுப்பா

விடியல் வரும் முன்னே எழுந்த நான்...
சுற்றும் முற்றும் கண்களை விரல் விட்டு ஆட்டி விழிக்க முற்படுகிறேன்...
சோம்பல் என்னை முரிக்கவே நான் மீண்டும் உறக்கம் வந்து உறங்கிவிட்டேன்..

சற்று நேரம் கழித்து என்னை எழ சொல்லி காதருகே ஒரு குயில் கூவியது....
குயிலை முறைத்து கொண்டேன் அமைதியானது ஒன்பது நிமிடம் கழித்து..
குயில் மீண்டும் கூவியது.. என் மணிகூண்டு குயில்...
இந்த முறை ஓங்கி அறைதேன் அவ்ளோ தான் சுற்றும் அமைதி..

களைந்து விட்ட தூக்கம் அறிந்து குறுந்தகவல் புரட்டினால் இன்னும் ஐம்பது நிமிடம் தான் அதற்குள் பணிக்கு கிளம்ப வேண்டும்....
குனி நிமிரு குதி இவைதான் நான் அறிந்த உடற்பயிற்சி முன்னும் பின்னும் முரண் செய்து...

ஒருவேளையாக குழாய் திருகி தண்ணீரை தொட்டால் சில்லுனு இருக்குதுப்பா..
தண்ணிய சுட வச்சி பல் வெலக்கி குளிச்சு வெளிய வந்தா இருபது நிமிஷம் போச்சா...

தரையில் அமர்ந்து இஸ்திரி செஞ்சா தரையும் சில்லுனு இருக்குதுப்பா..
ஒரு வழியா டிரைவர் போன் பண்ணி அடுத்த பிக்குப் நீங்க தான் சொன்ன உடனே வெளிய போனா...

முடியல ரொம்ப சில்லுனு இருக்குதுப்பா....
ஆனா அந்த நேரம் காலை நேரம் வந்தாங்களே பாருங்க எங்க மக்கள் ... ejipura military parade பாக்கவே ரொம்ப சிலிர்க்க வச்சிடுச்சு..

அவங்க சுட தண்ணீர்ல குளிக்கல alarm வச்சி எழுந்திரிக்கல நாம IT மக்கள் என்ன பண்ணிட்டோம்.. பெருமையா சொல்லிக்க?????

தூக்கம் வந்துச்சி ஆபீஸ் டைம்ல் எழுதி புட்டேன்... எனக்கே என்ன நெனச்சா இப்போ சில்லுனு இருக்குதுப்பா...

Monday, November 8, 2010

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

உணர்வலைகள் தேடிவரும் உன் கைபேசி அலைவரிசை இல்லாத இடத்திலும்!!
கனவலைகள் உன் தூக்கத்திலே மனவலிகள் உன் துக்கத்தில்
நொடியலைகள் நிமிடத்திலே என் துடிபலைகள் உன் அழுகையிலே
விடியலை தேடி வரும் இரவலைகள் கடத்தி போகும் நம்முடைய துணிவிலே!

எழுதலைகள் இக்கவிதையிலே உருவகம் உன் நினைப்பிலே!

தீபஒளி வாழ்த்துக்கள்

கண்ணெல்லாம் பூத்திடுச்சு முன்பதிவு செய்த பேருந்திற்காக!

தீபஒளி கண்கவர் வான வேடிக்கை தொடர் இடி சரவெடிக்கு ஓடி ஒலியும்
சிறார்க்கு மத்தாப்பு இருந்தால் பொல்லாப்பு விலகிவிடும்!

காத்திருந்து வந்த பண்டிகையை சேர்த்து வைத்த சந்தோஷத்தை பகிரதானே இனிப்புகள்!

புது உடை வளம் வர நெடுநடை கடையை சுற்றி
எண்ணம் பிடித்த உடை எடுத்து பிம்பம் சரி பார்த்தே தேர்வு செய்து
உலா வரும் நண்பர்களே!

விழாகோலம் கொள்ளும் நேரம் தொலைக்காட்சி பாராமல்
பகிர்ந்திடு இந்த உணர்வை உன் நா சுவையோடு!

தீபஒளி வாழ்த்துக்கள்

Monday, January 18, 2010

கல்மரங்கள்(Fossil Wood)

கல்மரங்கள் தேசிய பூங்கா - திருவக்கரை, தமிழ்நாடு




இங்கு தான் இரண்டு கோடி ஆண்டுகள் முன் திருவக்கரையில் இந்த கல்மரங்கள் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருவக்கரை இது தமிழ்நாட்டின் பகுதியாகும். இங்கு சந்திரசேகரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆலயம் வழிபடும் மக்களே பெரும்பாலும் கல்மரங்கள் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள். இதன் சிறப்பை சில மாதங்கள் முன்னர் National Geography channel தொகுபாலர்களால் மக்களின் பார்வைக்கு நேரம் ஒதுக்க பட்டிருக்கிறது.


ஒரு சில உறுத்தல்கள்:
* பராமரிக்க படவேண்டும் பூங்காவை சுற்றி காடுகள் இருக்கலாம் பூங்காவே காடை காட்சி அளிக்கிறது.
* ஏன் கல்மரங்கள் இங்கே பூங்காவாக மாற்றப்பட்டன, அறிவியல் கூற ஆட்களும் இல்லை வரலாறு கூற அறிவிப்பு பலகைகளும் இல்லை.
* பாதுகாப்பு இந்த அறிய கல்மரங்களுக்கு இல்லை வருபவர்கள் எல்லாம் கல்லை உடைத்து எடுத்து சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அறிவிப்பு பலகை மட்டும் தான் மிஞ்சும்.
உங்கள் பார்வைக்கு கல்மரங்களின் புகைப்படங்கள்:







Monday, January 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கண்மணியே!

திக்கு திசை மாறி காற்றில் பறந்து வந்த வண்ணத்துபூச்சி நீ
உன்னுடய வண்ணங்கள் தான் எத்தனை
வண்ணங்கள் யாவும் உன்னுடைய எண்ணங்கள் தானே
திசை மாறி வந்தாலும் உன் இருப்பிடம் நோக்கி தானே வந்தாய்!

நானும் ஒரு வண்ணத்துபூச்சி தான் நிறம் ஒன்று தான்
எண்ணங்கள் வேறு காற்றோடும் திசையில் எதிர் நோக்கி பயணங்கள்
கிடைக்கும் மரங்களில் இளைப்பாறி என் குறிக்கோளை நோக்கி
என் குறிகோளும் நீ இருக்கும் இடத்தை தேடி தான்!

திக்கு முக்காடி போனேன் உன் இடம் அடைந்த பின்
உன் குரல் மட்டும் அறிந்து உன்னை காணாமல்
நீ தான் என் தேடல் என்றும் உணராமல்
மரக்கிளையில் இருக்கும் வேறு வன்னதுபூச்சியை கண்டு!

உன் என்னனங்கள் உன் குரலில் பிரதிபலித்திட
உன் வண்ணங்கள் யாதென்று உணர்ந்தேன்
என் எண்ணங்களோடு உன் குரல் வண்ணங்களில் இணைந்தேன்
தேடல் நீஎன்றும் உணர்ந்தேன்!

சிறகடிக்கும் உன்னோடு ஒரு நாள் சந்திப்பு
மனம் துடிக்கும் அதை இன்றும் நினைத்து.........

வினா கேட்கும் உன் குரலை கேட்டு
கண்டேன் கனவுகள் உன் குழலை தொட்டு!

குரலும் இனிமையானது என் கவிதையும் அழகானது
நீயே பொருளான போது!
உன் பிறந்த நாளை கொண்டாட நானில்லை உன்னோடு இன்று
ஆனால் என் எண்ணங்கள் உன் கருத்தோடு
உயிர் பொருளாய் நான் இல்லை உன்னருகில் ஆனால் உணர்பொருளாய் உன்னுள்ளே!!

உயிர் கொடு இந்த கவிதைக்கு
நீ முத்தமிட்டால் உணர்ச்சிபெரும்!
அரவணைத்தால் உயிர்பெறும் கண்மணியே!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!