Monday, December 31, 2012

புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!


புத்தாண்டே பொலிவ்வாண்டே ரெண்டாயிரத்து பதிமூணாம் ஆண்டே!

முதல் தவறு:
நல்ல வேலை நான் பள்ளியில் படிக்கவில்லை இல்லையென்றால் 
இன்னும் ஒரு மாதம் 2012 என்றே எழுதி,திருத்தி  2013 எழுதவேண்டும்.. 
ஆனால் காசோலை பூர்த்தி செய்யும் போது தவறானால் 
ஒரு காசோலை நஷ்டமெனக்கு....

முதல் சந்தோஷம்:
கோவிலுக்கு போய் திருநீறும் குங்குமமும் எடுத்து வர 
2012 தின நாள்காட்டிக்கு பஞ்சம் இருக்காது..
மத்த நாட்களில் கோவில் தூன்களில்யே கொட்டி விட்டு 
வரவேண்டியதாய் இருக்கும்..

முதல் முயற்சி:
போன வருஷம் செய்ய நெனச்சதை இந்த வருஷம் 
செய்ய நினைப்போம் இல்லாட்டி?? 
அதுக்கும் முன்னாடி வருஷம் செய்ய நெனச்சதயாவது 
செஞ்சு முடிப்போம் எப்புடியும் அது முதல் முயற்சிதான்!!

முதல் எதிர்பார்ப்பு:
போன வருஷம் 8 சதவிகிதம் 
இந்த வருஷம் ஒரு 16 சதவிகிதமா? இல்ல அதே 8? இல்ல 4?
ஹ்ம்ம் எது வருதோ அத வச்சி இந்த கம்பனியில் இருக்கலாமா வேணாமான்னு 
முடிவு பண்ண வேண்டியது தான்...

இப்படி கொஞ்சமும் போன ஆண்டை மறக்க முடியா முதல் விஷயங்கள்!

2012 நினைவிலே 2013 ஆண்டு நம் வாழ்விலே!
எடுத்துவைப்போம் வருவன எதிர்த்து நிற்ப்போம் நம் காலடியை!
சண்டை இல்லா? சச்சரவு இல்லா? 
உணர்வுகள் களங்கமில்லா? 
துயரங்கள் நூலில்லா? 
தூரங்கள் கணக்கில்லா? 
தீண்டாமை வன்கொடுமையில்லா?
பெண் கொடுமை செயல்களில்லா?
நட்பில் துரோகமில்லா?
காதலில் தோல்வியில்லா?

புதியதொரு ஆண்டு மகிழ்ச்சியுடன் மலரட்டும்!!!

வாழ்த்துக்களுடன்,
ரசல் 

Monday, December 17, 2012

மாற்றான்

இரண்டு மூன்று காட்சிகள் முடிந்த பின் மாற்றான் படத்தினை சூரியாவிர்க்காக பார்க்கணும், KV Anand technical treatment க்காக பார்க்கணும், ஒளிபதிவிர்க்காக பார்க்கணும்,இசை தான் சுமாராக இருக்கிறது,இரண்டாம் பாதி இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம், என விமர்சனங்களை கேட்டு உள்ளே போய் அமர்ந்தேன்.
First Half:
முதல் பதினைந்து நிமிடத்திற்குள் என் இரண்டு வரிசைகள் காலியாக இருந்தது,பிறகு ஒரு பெரிய குடும்பம் அந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஒரு குழ்ந்தை சிணுங்கியது உடனே,அங்க பார்.. அங்க பார்... சூர்யா பார்... அந்த குழந்தையும் அமைதி காத்தது. சரி நான் என்ன செய்தேனா? முதல் பாதி என்னை எழுந்திருக்க விடவில்லை.. அத்தனை சுவாரசியம்.. அத்தனை மிகை படுத்தாத சூர்யாவின் நடிப்பு...அத்தனை கோணங்களில் ஒளிப்பதிவு..கதையின் மூலக்கரு.. உண்மையில் சூர்யா தன்னுடைய நான்கு தோள்பட்டையில் படத்தை தாங்கி நிற்கிறார்.
Interval:
ஒருவன்: என்ன மச்சி இப்படி ஆயிடிச்சி.. செம சீன் இல்ல அந்த roller coaster fight... இப்போ என்ன ஆகும் சொல்லு 
இன்னொருவன்: இப்போ கொஞ்சம் கொஞ்சமா எது உண்மைன்னு இந்த சூர்யா கண்டு பிடிப்பாரு.. 
டீ காரர்: டீ வேணுங்கிறவங்க இங்க வாங்க.. டீ சார்... டீ சார்..
(நான்:அவசரப்பட்டு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டனோ.. டீ வாங்கி இருக்கலாம்)
Second Half:
என் இருக்கை நன்றாக தான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து, ஏதோ சரிக்கி கொண்டே போய் கொண்டிருந்தது. நான் எவ்ளோ நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தேனோ?படத்தில் இருந்த அணைத்து சுவாரசியமும் இழந்து... ஒரு வித சலிப்பு தன்மை வந்தது.. சரி ஆனது ஆச்சி கிளைமாக்ஸ் வரை பார்த்திட்டு போகலாம் என்று மேலும் சறுக்கி விளையாடும் விளையாட்டை விளையாடியே படத்தை கவனித்தேன். வாங்கி வந்த கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சி தந்தது நல்ல வேலை டீ வாங்கல? ஒரு பாட்டு வந்திச்சி "கால் முளைத்து" அப்பாஆஆஆஆஆ ரஷ்யன் பாடல்....அட அட அட ஹரிஸ் ஜெயராஜ் சரக்கு தீந்து போச்சு போல..செதுக்கிட்டார், பாடல் முடிவில் சண்டை எதிர் பார்த்தது தான். அடுத்தது பர பர கிளைமாக்ஸ் படம் முடிந்தது. 
மக்கள் செய்தி:
தம்பி சூர்யா நல்லா நடிச்சிருந்திச்சி.. ஆனா போன படம் மாறி பாட்டெல்லாம் அவ்ளோ நல்லா இல்லை. சூர்யா காமெடி பண்ணவே இல்ல. எல்லாமே சூரியான்னு ஆனதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு சூர்யா ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் பெற்று விட்டதால்.இது வரிசையாய் மூன்றாவது படம் என்பது நினைவிருக்கட்டும்.

ரசல்: முடிவா என்ன சொல்ல?
படத்தில் வரும் இரண்டு சூர்யாக்களை வெட்டி எடுக்க தெரிந்த இயக்குனர்,இரண்டாம் பாதியை வெட்டி எடுக்க மறந்து விட்டார். 

பில்லா

பில்லா முதல் பாகத்தில் ராஜ்கண்ணன் எழுதிய வரிகளில் ஆரம்பிக்கிறது பில்லா இரண்டாம் பாகம். 
"டேய் என் வாழ்க்கையல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனுதுடா..."
முதல் பாகத்திருக்கு எந்தவகையிலும் பங்கம் விளைவிக்காத இரண்டாம் பாகம் என்றே சொல்லலாம். இயக்குனர் சக்ரி மற்றும் உதவி கதை ஆசிரியர் எரிக் எழுதிய முழுக்க முழுக்க தமிழில் எடுக்க பட்ட ஆங்கில திரைக்கதை. படத்தில் லாஜிக் பார்த்தால் நான் தல ரசிகன் இல்லை. ஆனால் ஒரு ஆங்கில படமென்று பார்க்கும் போது முக்கால் வாசி இப்படி நடந்திருக்கும் என்று நினைப்போம் ,அதே பக்கத்தில் அமரும் நண்பர்கள் "டேய் அவனுக்கு என்ன டா ஆச்சி" என கேட்க்கும் போது "அவன காலி பண்ணிட்டான் டா" அப்படி நமக்கு புரிந்ததை சொல்லுவோம். இங்கும் அதே தான் நிகழ்வு தான். நீண்ட நாட்கள் பிறகு ஒரு முறையாவது படத்தின் வசனகர்த்தா ஈரா முருகன் மற்றும் ஜாபர் முருகன் வசனத்திற்காக பார்க்க வேண்டிய படம்.
"அகதிங்க தான அனாதைகள் இல்லையே"
"மத்தவங்க பயம் நமக்கு பலம்"
"கீழ ஒக்கந்திருபவனுக்கு தெரியாது எறங்கி வேல செய்றவனுக்கு தான் தெரியும்"
மற்ற வசனங்கள் முன்னோட்டதிலயே பார்த்துட்டு இருக்கோம். வில்லன் அறிமுக சடுன்ட் மிரள வைக்குது.  இப்போ வர படத்தில எதுல கதை இருக்கு ஒரு வரி கதையை எப்படி படமா எடுக்கிறாங்க என்பதை தான் தலை படத்தில் தலையை முன்னிறுத்தி 129 நிமிட படம். பாட்டெல்லாம் மூணு நிமிஷத்தில முடிஞ்சிருது. முக்கியமா பெயர் போடும் போது கூட வெறும் நிழற்படத்திலயே பில்லா ஏன் முரண் பாடனவன் என்று கூறியதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தது ஆனால் அடுத்த காட்சிக்கு ஒட்டவில்லை என்ற குறை தான் மற்றவர்களுக்கு ஏனோ மொக்கை என்று தோனுகிறது என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை தலை ரசிகனை தலைக்கு தலை வணங்குகிறேன் ஏன் என்றால் மிகவும் அழுத்தமான வசனங்களை அதற்கேற்ற உணர்ச்சியோடும் உச்சரிபோடும் பேசியதற்க்கு. மற்ற ரசிகர்கள் என்ன கூறினாலும் இந்த படமும் தலைக்கு மகுடம் தான்.

ரசிகனாய்
--
Yours,
Rasal

துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி விமர்சனம்

தீபாவளி சிறப்பு செய்திகள்:

ஏரியா முழுசா விடாம சரவெடி சத்தம்
அங்க ஒன்னு இங்க ஒண்ணுன்னு யானை வெடி சத்தம் 
அது வெடி சத்தமா இல்ல விசில் சத்தமான்னு தெரியல ஓயின்னு சத்தம்
இப்படி சத்தத்துக்கு நடுவுல...

திரை அரங்கம் இருக்கும் சாலைகளில் வீரிட்டு பறக்கும் வண்டி சத்தம்..... அட துப்பாக்கி படம் ஓடுற திரை அரங்கம் பக்கங்க...
கூட்ட நெரிசலை தடுக்க, ஆங்காங்கே காவல்துறை சிறப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்..

இனி என் சரவெடி:

இளைய தளபதி, டாக்டர் இன்னும் பல செல்ல பெயர்கள் இருந்தாலும், விஜய் என்னும் ஒருவரை சினிமாத்துறை ஒரு வளர்ந்த நடிகராய் தான் பார்க்க வேண்டும் என்று, இந்த வருடத்தில் இரண்டாவது படத்தை பதிவு செய்திருப்பதன் மூலம் மீண்டும் வெற்றி கண்டுள்ளார். ஆர்பாட்டம் இல்லாத தன்னுடைய இயல்பான நடிப்பில் என்னை போல் அஜித் ரசிகர்களையும் கவர வைக்கும் ஒரு கதாபாத்திரமா இல்லை கனவுப்பாத்திரமா என்பதை விஜய் தான் சொல்லவேண்டும். 52 படங்களில் இல்லாத ஒரு புதிய விஜய் திரை அரங்கம் சென்று பார்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

விஜயை ஆங்கிலம் ஹிந்தி தமிழ் மூன்று மொழிகளில் பேசுவதன் மூலமும், உடம்பை முறுக்கேற்றி காட்டுவது மட்டும் இல்லாமல், larger than life hero வாக காட்டாமல், intelligent wing army man என்று சாதாரணமாய் ஒரே காட்சியில் இந்த படம் வேற மாறி என்று ஆச்சரிய படுத்தி உள்ளார்  AR MURGADASS. ஏழாம் அறிவில் சொதப்பிய திரைகதையை இந்த துப்பாக்கியில் (ARM Reloaded) ஒவ்வொரு குண்டாய் படம் பார்பவர்களை சுடுகிறார். அதுக்காக படத்தில் இப்படி தான் துப்பாக்கி எடுத்துட்டு சுடுவாரான்னு கேட்டா? அதுவும் இல்ல!!! முழுக்க முழுக்க ஹீரோ என்பவர் மற்றவர்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது  அவர்கள் உதவியுடன் தான் படத்தின் இறுதியில் வெல்கிறார். இதுக்காக டைரக்டர் க்கு பாராட்டுகள்.

இந்த படத்தின் ரியல் ஹீரோ திரைக்கு பின்னால் நமக்காக ஒளிபதிவு செய்த சந்தோஷ் சிவன். இந்த படத்த DVD ல பாக்கறதா இருந்தா கூட தயவு செஞ்சு ஒரிஜினல் சிடி வந்தப்புறம் பாருங்க. இந்த அளவுக்கு எந்த ஒரு மசாலா(CLASS) படத்தோட originality பார்க்க முடியாது.பாடல்கள் எடுத்த விதம் இல்ல முழு படத்த எடுத்த விதமும் நம் தமிழ்க்கு புதுசு. (One Standing Ovation for Santhosh Sivan)

படத்துல இன்னொரு முக்கிய நபர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். சும்மா மாஸ் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை ஓட்டிங் அண்ட் கட்டிங். சபாஷ் ஸ்ரீகர் பிரசாத்.

சில புஸ் ஆன வெடிகள்:
* ஹரிஸ் ஜெயராஜ் வீட்ல சீக்கிரமே ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து கல் அடிக்க போவாங்கன்னு நெனக்கிறேன். அந்த அளவுக்கு trailer ல வந்த மியூசிக் மட்டும் வச்சிக்கிட்டு வண்டி ஓட்டலம்ன்னு பார்கறார். 

* பாட்டு போன படத்தோட இந்த படத்துல  நல்லா இருந்துச்சி, ஆனா படத்தோட சுவாரசியத்த கெடுக்கறதும் அதுதான். டைரக்டர்!!! பாட்டு இல்லாம படம் கொடுக்கற trend வந்திருச்சி கொஞ்சம் நீங்களும் திருந்துங்க.

* காஜல் அகர்வால் ஸ்வீட் தான் ஆனா என்னவோ சுகமா இல்ல.

புதுசா ஒரு வெடி:
* வெண்ணிலவை பாட்டு மொத்தம் அஞ்சு நிமிஷம் ஆனா படத்துல ஒன்ற நிமிஷம் அந்த அளவுக்கு சிறப்பான எடிட்டிங். அந்த பாட்டு தேவையே இல்ல இருந்தாலும் சந்தோஷ் சிவனுக்காக பாட்ட சுருக்க சொன்ன டைரக்டர்க்கு பாராட்டுகள்.


அப்புறம் இந்த தீபாவளி எப்படி போச்சு?
ஆக மொத்தம் படம் நல்லா இருந்துச்சி கொஞ்சம் புஸ்சான வெடிகளை தவிர்த்து. லாஜிக் பாக்கறவங்க கொஞ்சம் தள்ளி நின்னு வெடியை வேடிக்க பாருங்க. சில நேரம் தூரத்துல வெடிக்கற அவுட் மாறி அழகா இருக்கும்.

சாட்டை

சாட்டை 
பிரபு சாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் வசனம் எனும் சாட்டையால் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அடி விளாசி இருக்கும் படைப்பு. 
பராசக்திக்கு பின் மிக நீண்ட வசனமான 
"கடைகோடியில இருக்குற ஆதிவாசி மகன்ல  இருந்து பணக்கார பசங்க வரைக்கும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாதுன்னு schools la uniform கொடுத்திருக்காங்க அவங்கள rank படி ஒக்கராம பிடிச்ச இடத்துல உக்கார சொன்னேன் அது தப்பா...
வீட்டுக்குள் ஒரு பள்ளி வேணும் பள்ளிக்குள் ஒரு வீடு வேனும்னுன்றதுக்காக வாத்தியார் வர வர வரைக்கும் நிக்க வேணாம் ஒக்கார சொன்னேன்...
கடவுள் மனுஷனுக்கு கொடுத்த வாரம் பேச்சு பேசாம இருந்தா கெட்டு போயடுவீங்கன்னு பசங்களும் பொண்ணுகளும் பேசுங்கன்னு சொன்னேன் ஏன் அத விட jail பெருசுன்னு நெனக்க கூடாதுன்னு..."
அது ஒரு ரெண்டு நிமிஷ வசனம் அதுக்கே இயக்குனரை ஆற தழுவி வாழ்த்தனும். இப்படி படம் நெடுக்க கைதட்டல் வசனங்கள் திரை அரங்கில். கடைசியாய் "ஏணியை கூரை மீது போடாதீர்கள் வானத்தை நோக்கி போடுங்கள்" என்று முடியும் போது சமீப காலங்களில் சண்டை காட்சிகளில் வராத மயிர் கூச்செறியும் சம்பவமும் நடந்தது. 
சினிமாத்தனம் இல்லாமல் படத்தை ரெண்டு மணிநேரம் கொண்டு போக முடியாது அதற்க்கு இந்த படமும் விதி விலக்கல்ல. ஆனால் அதையும் மீறி படத்தை ஒரு மாணவனாய் பார்த்தால் ஒரு ரகம் ஆசிரியராய் பார்த்தால் பல ரகம். சமுத்திரகனி தயாளன் ஆசிரியராய் வாழ்ந்து என் பல முன் மாதிரி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். 
அன்பழகன் நீங்க நல்லா வளரனும்....ஆல் தி பெஸ்ட்.....

ரொட்டி!! (ஒரு திகில் கதை)


ரொட்டி!! (ஒரு திகில் கதை)
இதை நான் ஒரு திகிலுடன் தான் எழுதுகிறேன்.
இரு சிறுவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்! அதில் ஒருவன் மட்டுமே அந்த சம்பவத்தை விவரிக்க! இன்னொருவன் உற்று கேட்டு கொண்டிருந்தான். அதாவது முந்தைய நாள்.....................................................................................

தன் தந்தையுடன் அருகில் இருக்கும் ரொட்டி கடைக்கு சென்றிருந்தான்.அங்கு வித விதமான ரொட்டிகளின் வடிவங்களை பார்த்த அவனுக்கு ஒரு ரொட்டி தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்திருக்கிறது.அதை வாங்குமாறு தந்தையிடமும், கடைக்காரனிடம் எடுத்து தருமாறு கேட்டான். அப்போது அந்த கடைகாருக்கு வேர்த்திருக்கிறது சற்றும் பதறிய வார்த்தைகளோடு உளற ஆரம்பித்திருக்கிறான். தன் தந்தை தன்னை அங்கு இருக்கும் உட்காரும் இடத்தில அமர்ந்திருக்குமாறு சொல்லி இருக்கிறார்...........................

தன் தந்தையும் அந்த கடைகாரரும் கடைக்கு வெளியில் சென்று பேசி இருக்கிறார்கள். அதை பார்த்தால் அது ஒரு ஏதோ  குலைநடுங்கும் சம்பவம் போல பேசிகொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து உள்ளே வந்த அவன் தந்தை, அவனை வேக வேகமாய் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். தன்னிடமும் அவன் தாயிடமும் இனி அந்த கடைக்கு போக வேண்டாம் என்றார். அவனுக்குள் இருந்த அச்சம் களைந்து அவன் தந்தையிடம் ஏன் என்று வினவி இருக்கிறான். அதற்க்கு அவன் தந்தையும் சற்று குழம்பிய வார்த்தைகளோடு...................

அங்கு பேய் இருக்கிறது நீ பார்த்த அந்த ரொட்டி, அந்த வடிவில் இல்லை போலும் செய்யும் போது . ஆனால் அது தினமும் ஒவ்வொரு இடத்தில கடித்து வைக்க பட்டது போல் காட்சி அளிக்கிறது. அதனால் தான் அந்த கடைக்காரர் தனியே என்னை வெளியே கொண்டு சென்று விளக்கினார். நாம் இனிமே அந்த கடைக்கு போக கூடாது  சரியா என்று கூறி இருக்கிறார்..............................

அடுத்த நாள் ஸ்கூல் பஸ் போகும் வழியில் கடையை எட்டி பார்த்திருக்கிறான் அங்கு கடை மூட பட்டிருக்கிறது. வெளியே மந்திரித்து கட்டிய எலுமிச்சை பச்சை மிளகாய் தெரிந்தது என்று அந்த சிறுவன் கூறி முடித்தான். அந்த இன்னொரு சிறுவன் உண்மையாவா டா!! டேய் பயமா இருக்கு டா..............

PIZZA(A thrilling Food without need of seasoning(Brand Actors) and appetizers(Brand Producers & Distributors))
மேலே கூறியவையும்  இந்த pizza படத்திற்கும் ஒரே ஒரு சம்மந்தம் உண்டு அது திகில்!! திகில்!! திகில்!!  திகில்லை தவிர்த்து வேர் எதுவும் இல்லை.  இதில் முக்கிய பாராட்டுக்கள் cameraman  தோளில் தன்னுடைய கனவுகளை திரைக்கதை எனும்  திறனால் ஒரு இரண்டு மணி நேர திகிலை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் இரண்டாம் நாயகன் இசை,திகில்லிர்க்கு தேவையான அத்தனை நுண்ணிய பயமுர்த்தும் இசை அது.முதல் முறையாக காட்சிகளையும் வசனத்தையும் தெரிவிக்காமல் எழுத வேண்டிய விமர்சனம் இது. அப்படி எழுதி விட்டால் அதுவே படத்திற்கு spoils-pot ஆகி விடும். அதனால் இந்த படத்தில் தெரிவிக்க மறந்த ஒரு  கருத்தை மட்டும் எழுதுகிறேன் "தயவு செய்து இந்த படத்தின் முடிவை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்"

Climax of ரொட்டி(ஒரு திகில் கதை)
மனைவி : ஏங்க பையன் கிட்ட சொன்னீங்க? அவனுக்கு என்ன புரியும்.
கணவன்: நான் அவனிடம் உண்மையை கூறவில்லை. அங்கு பேய் இருப்பதாய் அவனை மிரட்டி இருக்கிறேன். அதனால் அவனாக அங்கு செல்ல மாட்டான். அதனால் தான் எலி கடித்த அந்த ரொட்டியை வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. நாளை அந்த கடை சீல் வைக்க பட்டிருக்கும் சுகாதார துறையால்.
மனைவி: நல்ல வேலை என்கிட்ட  நீங்க சொல்லல அந்த கதையை!!! இல்லாவிட்டால் இந்த ஏரியாவே அந்த கடைக்கு போகும் போது பயந்திருக்கும். நான் ஒரு ஓட்ட வாய் பாருங்க.....

Sunday, December 16, 2012

நீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த ஞாபகம்!

நீதானே என் பொன்வசந்தம் -  முதல் முறை பார்த்த ஞாபகம்!



An Ilayaraja Musical
இளையராஜாவுக்கு காதல் கதைகள் என்றால் இளமை ஊஞ்சல் ஆட வைக்கும். பாடல்களில் இருந்த முதுமை இசை படத்தில் இல்லை. அவ்வபோது மௌனமே இசையாய் கொடுத்ததில் மட்டுமே ராஜா சார்.மற்ற இடத்தில guitar கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார். எங்கே அவரின் வயலின் இசை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. படத்தின் கோர்வையில் வரும் பாடல்கள் இதம், இடையில் பேசும் வசனங்கள் இங்கீதம். 

A Gautam Vasudev Menon Film
மின்னலேவும் விண்ணை தாண்டி வருவாயவும் ஏற்படுத்திய தூக்கம் இழந்த பொழுதுகள் இல்லை. காதலும் நெருடலும் சொல்லிருந்தாலும், அதை மூன்று பருவமாய் பிரிதிருந்தாலும், அதை படமாக இரண்டரை மணிநேரம் தேவையில்லை. பாடல்களிலும் கதை சொல்லும்போது தேவை இல்லாத சில பல பேசிக்கொள்ளும் காட்சிகள், கேள்விகளுக்கு விடை அளித்தாலும் நீதானே என் பொன்வசந்தம் வெறும் வசந்தம் மட்டும் தான். கண்டிப்பாக அடுத்த படத்தில் நீக்க பட வேண்டிய வார்த்தைகள்
1. காலி 
2. செம்ம feeling
3. அவ்ளோ அழகு 

இன்னைக்கும் கவுதம் அளவுக்கு காதலின் ஆழத்தை கூறியவர்கள் இல்லை மணிரத்தினத்தின் அலைபாயுதே மட்டும் விதிவிலக்கு. காதல் என்றும் ஆரம்பிக்கும் போதும், வெற்றி அடையும் போதும், சந்தோசம் மட்டும் தான் தெரியும்! அதை வெற்றியடைய போராடிய இரண்டு இதயங்களின் போராட்டங்கள் வலிச்சா மட்டும் தான் தெரியும். விண்ணை தாண்டி வருவாயா ஒரு ஆணின் மனதின் ரணத்தை காட்டியது, நீதானே என் பொன்வசந்தம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை பகுதியாய் காட்டியதிற்கு பாராட்டுகள். ஆனால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை அதனால் சிலர்க்கு பிடித்து பலருக்கு பிடிக்காமலும் போகலாம். This could be your love story tag போட்டுட்டு கூடவே இதையும் போட்டிருக்கலாம் and not everyone's story.

Jeeva & Samantha in
ஜீவா சரியான பொருத்தம் இல்லை ரொம்வவும் matured அஹ இருக்குற இமேஜ். வார்த்தைகளின் உணர்ச்சியில் பேசக்கூடிய வசனங்கள் உணர்ச்சியே இல்லமல் பேசப்படுவது ரசிகர்களை கத்தி இல்லாமல் கொள்வதற்கு சமம். இதுக்கு மேல ஜீவா நடிப்பை பத்தி பேச ஒன்னும் இல்ல.

சமந்தா நித்யாவாய் வாழ்ந்திருக்கிறார். ஸ்கூல் டிரஸ் ஆகட்டும், 20 வயசு பெண்ணாகட்டும் , 24 வயசு பெண்ணாகட்டும்! அவ்ளோ இயல்பும் இளமையும். எதற்காக அழுகிறோம் என்பதை அனுபவித்து நடித்தால்! அந்த காட்சி பிரமாதமாய் வரும் அப்படிதான் பல இடத்தில நடித்திருக்கிறார். ஜெசியை விட நித்தியா நேர்மையானவள்! அழகானவள்! ஆழமானவள்!. கவுதம் இந்த படத்தை சமந்தாவிர்க்காக எடுத்திருக்கிறார். காதலில் பெண்களின் வலிகளை நேர்த்தியாய் நடித்திருக்கிறார். Dependent person என்று ஜீவா சொல்லும் இடத்தில,சமந்தா ஏன் dependent என்று விளக்கிய விதம் நிறைய பேருக்கு புரியவில்லை.ஆனால் போறத்துக்கு முன்னாடி என்ன கட்டிபிடிச்சி இருந்தா? நான் கோவபட்டிருக்க மாட்டேன்! கண்டிப்பா அவன் கூட தான் இருந்திருப்பேன்! என்ற இடத்தில சமந்தாவின் காதலை புரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் சமந்தாவிருக்கு. I love samantha என்று சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை.

Santhanam comedies
சந்தானம்! சந்தானம்! தான் ஒரு வரி காமெடியன் அப்படின்னே கூப்பிடலாம். படத்தில சமந்தாவிர்க்கு பிறகு, சந்தானத்தோட காமெடி ஒரே ஆறுதல்.Chill out Chill out.

MS Prabhu & Om Prakash Cinematography And Antony Editing:
சொதப்பல் பா! இன்னும் கூட அழகை அழகாய் காட்ட முடியும் ஆனால் வெறும் காட்சியை ரொம்ப நேரம் காட்ட முடியாது. ஒரு சபாஷ் இருக்கு இண்டர்வல் முன்னாடி பத்து நிமிஷம் சீன் ஒரே Shot, ஒரு பறக்கும் காத்தாடியில் இருந்து பார்க்கும் அளவிற்கு எடுத்திருந்தாலும் நாயகனும் நாயகியின் expressions ய் எடுக்க மறந்து விட்டார்கள். எடிடிங்க்க்கு வேலை இல்லாத படம்.

வழங்கும் 
"நீ தானே என் பொன்வசந்தம்"
முதல் முறை பார்த்த ஞாபகம்....
மழை வரும் மாலை நேரம் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம்.

சிலர் மட்டுமே இது மாதிரி பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் வலிகளை புரிந்தவர்களுக்கான படம் நல்லா இருக்கு, இன்னும் நல்ல குணங்களுடன் இருக்கும் பெண்களை விரும்புவர்களுக்கு சுமார்.காதலே தெரியாதவர்களுக்கு மொக்க. Strictly for Dependent Girls who loves thier man deeply....


என்றும் காதலுடன்,
ரசல்

Wednesday, December 12, 2012

முரசு பாடலும் நானும்!


மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நினைவோடு 
கவியின் முரசு பாடலும் நானும்!


நான்:
உனக்கென்ன பாரதி நீ எழுதி விட்டாய்..
நீ பிறந்த தமிழகத்திலே 
சாதி வன்கொடுமைகள்?
பார்ப்பனாய் பிறந்து 
சாதி ஒழிப்பு பாடல்கள் 
உன் சினங்கெழ தோலுரித்தாய்! தொகுபுரைத்தாய்!

சாதி வளர்க்க இங்கே தமிழன்
கட்சி வளர்க்கிறான் 
சாதி இல்லை என்று சொல்லி 
ஒருவன் சாதி வளர்பவனுக்கு 
தண்ணீர் ஊற்றுகிறான்!

இது புரியா ஒரு கும்பல் 
குடிசைகளை தீக்கு இறையாக்கிறான்
குடும்பங்களை நாசமாக்கிறான்!
கேள்வி கேட்டால் கட்டி உதைக்கிறான்
எட்டி மிதிக்கிறான்!

பாரதி தமிழ் பற்றி படிப்பவர்கள் கூட 
பாரதத்தில் வாழும் தமிழனை கண்டுகொள்ளவில்லை 
ஏளனம் செய்தான்!
மீன் பிடித்து வாழும் தமிழனை கொன்றாலென்ன 
சிறை பிடித்து சென்றாலென்ன?
வாய் வார்த்தை போராட்டம் மட்டும் தான் 
மறத்தமிழனின் உடன் பிறப்பா?

நீயோ அன்று கொட்டு முரசே என்று பாடி விட்டாய்!!
நீ இன்றிருந்தால் உன் கொட்டு முரசை 
"மீன் பிடி மீனவனும் 
விவசாயம் செய்யும் உழவனும்  
பணம் தேடி அலையும் எந்த ஒரு உயிரும் 
ஒன்றென இப்பூவுலகில் காணீர்"
என்றிருப்பாயோ?

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, September 18, 2012

கசாப் கருணை மனு!

கொல்லும் போது உனக்கில்லாத கருணை 
உனை தூக்கில் இடும் போது எங்களுக்கு எதற்கு?
அதனால் தான் என்னவோ சாகும் வரை தூக்கில் இடும் தண்டனை உனக்கு...
இதையாவது செய்யுமா எங்கள் குடியரசு!!!

Monday, September 17, 2012

இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!


கேட்பாரற்று இருப்பதாலே வாழ்ந்து வரும் கொடியவன்
புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்க வக்கில்லை?
என் தமிழர் வாழ்வாதாரம் சிதைந்து விட வாழ்ந்துவிட்டு...
எம் நாட்டில் குடித்த ரத்தம் பத்தாதென்று இங்குவந்து
உன்னால் நாங்கள் கருப்பு கொடி காட்டினால் அடி..
கூட்டம் சேர்ந்தால் கண்ணீர்புகை..
பேரணி நடத்தினால் துப்பாக்கி சூடு..
இந்த புறம்போக்கு அரசியலில் வீழ்வது மனிதமடா!

Wednesday, March 14, 2012

எனக்கும் காதலா! பகுதி 5

இந்த பகுதி தான் ஒரு வாழ்க்கையின் தொடக்கம், அதனால் நான் கொஞ்சம் அதிகமாவே நேரம் செலவிட வேண்டி இருக்கு. 

சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்..


Thursday, February 23, 2012

எனக்கும் காதலா! பகுதி 4



டிசம்பர் 22,2011:

காலை 7:30:
ராஜேஷ் வீட்டுக்கு வந்த உடனே ஹரி சண்ட போட ஆரம்பிச்சிட்டான். ஹரிஷ் கூட சமாதான படுத்த பாத்தான், இருந்தாலும் சூடா பேசிட்டு இருந்தனுங்க.

ஹரி : டேய் எதுக்கு டா? அந்த basket ball எடுத்துட்டு போன?
ராஜேஷ்: தோ இருக்கு மச்சி! ஆபீஸ் ல வெளையாட எடுத்துட்டு போனேன் டா!
ஹரி : சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல...
ராஜேஷ் : அதுனால என்ன டா.. ரூம்ல எல்லாரும் சொல்லிட்டு தான் எடுத்துட்டு போவாங்களா என்ன..
ஹரி: ஆமா டா சொல்லிட்டு தான் எடுத்துட்டு போகணும். அது என்னிது இல்ல
ஹரிஷ் : ஹரி ஓவரா பேசுற... ரூம் டா எல்லாரும் எல்லாம் ஷேர் பண்ணி தான இருக்கோம்..
ஹரி : நீ சொல்லுவ... உன் பொருள எடுத்துட்டு போனா தெரியும்...
ஹரிஷ்: அப்போ நான் இப்படி கத்த மாட்டேன்.. ராஜேஷ் தான் எடுத்துட்டு போனான்னு விட்ருவேன்..
ராஜேஷ் : மச்சி சரி டா! அதுக்கு ஏன் இவ்ளோ சீரியஸ் அஹ பேசுற..
ஹரி : முடியாது டா.. நீ எதுக்கு எடுத்து போன அத சொல்லு... நான் அத நீ எடுத்துட்டு வரமாட்டேன் நெனச்சேன்... ஆனா எடுத்துட்டு வந்ததனால தப்பிச்ச.
(ராஜேஷ் விளக்கி சொல்ல...)
ஹரிஷ் : ராஜேஷ் சரி விடு... ஹரி நீ சொல்லு பா.. நீ என்ன அத வச்சி பிளான் பண்ண?
ஹரி : உனக்கு தெரியாது டா!  டெய்லி காலைல அத வச்சி வெளையாடுன தொப்ப கொறையும் ஒரே மாசத்துல ஒடம்ப கொரசிடுவேன்...
ஹரிஷ் : ha ha ha ha....  நாயே இதுக்கு தான் நீ இவ்ளோ சீன் போட்ட... உனக்கு ஒடம்பு குறையனும்னா.. தெருவுல ஓடு இல்ல காலைல என் கூட வா IIT campus சுத்தி வருவோம்..
ராஜேஷ்: மச்சி இவனுக்கு அக்கு பஞ்சர் தான் தேவ படும்... மச்சி ஊசி இருக்குல காத்து எறகிற மாறி.. எரகிடலாம்... வரியா...
ஹரி: போடா... ############ நீ பொண்ண மடக்க எனக்கு ஓசில கெடச்சத தூக்கினு போவ! நான் ஒடம்பு கொறைக்க use பண்ண கூடாதா...
ஹரிஷ் : அவுனுக்கு தெறம இருக்கு... துரும்பு கூட அவனுக்கு பல் குத்த உதவும்... உனக்கு அந்த துரும்பு.... #####################
ஹரி : #############################################################################################################
ராஜேஷ் : போடா வெண்ணை... எதுக்கு இப்போ அசிங்கமா பேசுற....
ஹரிஷ் : ##########################################################################################################

(# - Cencored due to local language இறையாண்மை)
(இப்படி தான் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு, சத்தம் போடாம சத்தம் போட்டு ஒருத்தன ஒருத்தன் திட்டி இவனுங்களே இவனுங்க கலாய்ச்சிக்குவாங்க)

(கீர்த்தி சாயல் கொஞ்சம் நார்த் இந்தியன் மாறி.அவ பூர்விகம் அது ஆனா ரொம்ப நாள் முன்னாடி சென்னை ல செட்டில் ஆயிட்டாங்க. புரசைவாக்கம் ஏரியால தமிழும் ஹிந்தியும் கலந்து பேசுற பொண்ணு. சலவையும் white அந்த பொண்ணும் white. நெறைய நண்பர்கள் ஆண் பெண் என்று பேதமில்லாமல். புனே ல ஒரு கம்பெனி ல வேலை செஞ்சு அப்புறம் ராஜேஷ் கம்பெனிக்கு வேலைக்கு வந்து மூணு மாசம் தான் ஆகுது. ஒரு தலையணை இல்ல ரெண்டு மூணு தலையணை கட்டி கிட்டு தூங்கற பொண்ணு. ஆனா அவள் கனவுல ஹ்ரிதிக் ரோஷன் தான் வருவாரு, ஏன்னா இவ தவிர ரசிகை அவருக்கு மொபைல் wallpaper தீம் எல்லாம் அவருதான். அந்த டைரி மில்க் கவர் அஹ அழகா பொம்மையை போல் மடிச்சி வச்சிட்டு, தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு போனாள்)

(ராஜேஷும் தூங்கிட்டு தான் இருந்தான், ஆனா சுத்தி ஹரிஷ் ஓட குரல் கேட்டுட்டே இருந்துச்சி. ஏதோ வேலையா இருக்கான் போலன்னு தூங்கிட்டே இருந்தான். தூங்கும் போது சுத்தி நடக்குற விஷயம் கேக்குற விஷயம் கனவா வரும், இப்படி தான் ஹரிஷ் ஏதோ பறக்கும் ரயில் ரூட் சொல்ல சொல்ல இவனுக்கு கனவு முழுக்க ரயில்ல பயணம் செய்யுற மாறி ஒரு கனவு, அதுல கீர்த்தி ஏறினாள்! ரயில் தண்டவாளம் மாறிச்சி! இவனுக்கு பசி எடுத்து எழுந்திருக்கும் போது யாருமே இல்ல. சரி சாப்டு படுக்கலாம்னு பார்த்தா மணி நாலு. இதுக்கு மேல என்ன சாப்பிட என்று மீண்டும் குட்டி தூக்கத்தை போட்டான்)

மாலை 5:30:
வண்டி டிரைவர் போன் போட்டார்,  மணி அப்பவே ஐந்தரை. வண்டிய கெளம்ப சொல்லிட்டு வேலைக்கு கெளம்பினான். போற வழில ஒரு கடைல எதை எதையோ வாங்கிட்டு போனான். இதுக்கு தான் இவன் வண்டி கெளம்ப சொன்னது இப்போ தான் தெரியுது. அவன் மொபைல் சிணுங்கியது சாயின் தவற விட்ட அழைப்பு மற்றும் ஒரு மெசேஜ்.

ஹரிஷ் அலுவல் மெசேஜ்:
உன்னோட சிரிப்புக்கும் என்னோட சிரிப்புக்கும் என்ன வித்தியாசம்?
நீ சந்தோஷமா இருந்தா சிரிப்ப, நான் நீ சந்தோஷமா இருந்தா சிரிப்பேன்.

ஆபீஸ் குள்ள நுழைந்த உடன், 

இவன் கண்கள் இவனை துரத்துது!
தேடி எங்கும் அலைபாயுது!
நாடி எல்லாம் துடிபாகுது!
கூடி வரும் பெண்டியரில் அவள் ஒருத்தியா என்று!

ச்சீ ஒன்னு கூட நல்லாவே இல்ல.. கொஞ்சமா எட்டி பாத்தா தெரியுது அவள் அமரும் இடம்,பிரகாசம் இவன் முகம். 
இடையில் ஒரு மொபைல் ரிங் டோன். வடிவேல் காமெடி ரிங் டோன்: என்னா பீலிங்கு...... சிரித்து கொண்டே சென்றான் அவன் இருக்கைக்கு.

முருகன் இவன் அழைப்பிற்கு முன்னாடியே வந்துட்டான். 

முருகன்: சார் என்ன இன்னைக்கி நீங்க வர லேட் ஆயிடுச்சி...
ராஜேஷ்: ஏன்டா... நீ வேற.. நானே கூப்புட போறேன் வேணும்னா..
முருகன்: சார்.. அவுங்க உங்கள கேட்டாங்க. எங்க இன்னும் ஒன்னுமே சொல்லலையா என்னன்னு?
ராஜேஷ்:(உள்ளுக்குள் பூரிப்பு) அப்புறம் என்ன சொன்னாங்க?
முருகன்: நீங்க யாருன்னு கேட்டாங்க.. அப்புறம் நாளைக்கு உங்கள பாக்க ஆர்வமா இருக்கறதா சொன்னாங்க..
ராஜேஷ்: சரி இந்தா!! இத கொண்டு போய் கொடு!

முருகன் கீர்த்தியிடம் ராஜேஷ் கொடுத்த பையினை கொடுத்துட்டு போனான். கீர்த்தி கொஞ்சம் கொழம்பி போய் அந்த பையில் என்னவென்று பார்த்தாள். உள்ளே முழுவதும் decoration items அப்புறம் ஒரு நோட் கூட..

"கீர்த்தி நீங்க என்ன பாக்கணும் இல்ல? அதுனால இநத பையில் இருக்கும் அணைத்து decoration items வச்சி உங்க இடத்த அழகா மாத்திக்குங்க. நாளைக்கு உங்கள கடைசி கிப்ட் கொடுத்து பாக்க வரேன் like a Chirstmas thatha(handsome). "

கீர்த்தி தன்னுடைய இடத்தை முழுவதும் அழகாக ஜோடித்தாள். அப்படியே தன்னுடைய கணிணீயில் ஏதோ எழுதி print out போட்டு வந்து தன்னுடைய இடத்தில ஒட்டி வைத்தாள்.

நுழைவு வாயிலில் "Welcome to my Chirst Maa"
சுற்றி முழுவதும் "Chirst Maa u are great", "U are so nice Chirst Maa" ,"U r not Chist maa u r Choclate Maa", "Merry Christmas for my new Friend(Chirst Maa)" இப்படி பல எழுத பட்ட காகிதங்கள். முருகன் கூடவே உதவி புரிந்தான். அங்கே சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கண்ணு வச்சிட்டாங்க.

ராஜேஷ் கொஞ்ச நேரம் பேசாம இன்னைக்கே சொல்லிடம்னு நினைத்தான். சாயிடம் அதை பற்றி கேட்டான்.

சாய்: டேய் வேணாம் டா... இதுவரைக்கும் ஒரு த்ரில் இருக்கு இல்ல.. அத அப்படியே maintain பண்ணு.. பொண்ணுங்கள எப்பவுமே சுத்த விட சான்ஸ் கிடைக்காது டா...
ராஜேஷ்: இல்ல சும்மா decoration items வாங்கி கொடுத்து அலங்காரம் பண்ண சொன்னேன், அதுக்கு கூட அவ தனியா போஸ்டர் போட்டு வச்சிருக்கா.. கொஞ்சம் பீலிங்கா இருந்துச்சு..
சாய்: இது தாண்டா பசங்க பிரச்சனையே.. பொண்ணு உன்ன பத்தி நினைக்கிறா ன்னு தெரிஞ்சா போதுமே! உடனே அலுப்புவீங்கலே..
ராஜேஷ்: அப்படி இல்லடா! எனக்கு தோனுச்சு உன்கிட்ட கேட்டேன்.. சரி இன்னைக்கு என்ன ஒன்னும் பண்ணலையா?
சாய்: அந்த கடன்காரன் தான!  இன்னைக்கு எதாவது ஒரு தமிழ் பாட்டை மாத்தி பாட சொல்லி இருக்கான்.
ராஜேஷ்: உன்னோட christ maa  அநேகமா ஒரு சினிமா பைத்தியமா இருக்கணும், அதுனால டெய்லி இப்படி சினிமா பத்தியே செய்ய சொல்றாங்க. சரி என்ன பாட்டு அப்போ.
சாய்: தெரியலைங்க இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். மைக் செட்ட யார்கிட்டயும் கொடுக்க வேணாம்னு HR Order போல. Security வரும் போதே சொன்னாரு.
ராஜேஷ்: என்ன சொல்றது!! நம்ம HR உன் மேல அவ்ளோ பாசமா இருக்காங்க!

சாய் சென்டர்ல போய் நின்னு கத்தி பாடினான். அவன் வந்த உடனே எல்லாரும் அவுங்க வேலைய விட்டுட்டு பார்த்தாங்க, அவ்ளோ பிரபலம் ஆயிட்டான் அவன்!!!

சாய்: இப்போ நான் மங்காத்தா படத்தில இருந்து open the bottle பாடலை மாத்தி எழுதி இருக்கேன்.
Disclaimer : இது முழுவதும் கற்பனையே யாரையும் பழிவாங்கும் நோக்கோடு செய்ய வில்லை.
மச்சி  open the dooruuuuu.....
இது  அதட்டல்  பரம்பர  
அஞ்சாறு  manager வேற  
அன்றாடம்  ஒப்பாரி  தான்  
நாம  கொட்டு  நு  ஒருமுர 
சொன்னாக்க  பலமுற 
கொட்டு  கொட்டுன்னு  கொட்டுவாங்கதான்..  
நாம  முறிக்கினு  போயடாக்க
எங்க  போவாங்க  இவுங்க  வீட்டுக்கா ...


இப்போ  ஒம்போது  offler  letter ஒன்னாக  இருக்கு 
ஓஹ ஹோ ன்னு  நம்  ஜாதகம் ..


ஆடி ஆடியே சோந்தோமடா  
நம்மேனி  வாடியே செத்தோமடா
ஓடி  ஓடி  ஏ  அலுதோம்டா  
சும்மாவே  ஒக்கண்ட்தே பல இழந்தோமடா..

மொத்த பேரும் கைதட்டி மீண்டும் ஒருமுறை பாட சொல்லி கேட்டனர். மேனேஜர் அவன்கிட்ட வந்து பாராட்டிட்டு போனாரு. இருந்தாலும் அவர பத்தி பாடும் போது சொல்லி இருக்கலாம்ல என்று கேட்டு சென்றார்.

ராஜேஷ் சாயிடம் HI 5 தட்டினான். அப்போ ஒரு பொண்ணு பேய் முகமுடி போட்டு கிட்டு ஓடிவந்து ராஜேஷ் கிட்ட
"ஓதல வா ஓதல வா நேனு சந்தரமுகி... ன்னு சொல்லிச்சி"
அதுக்கு சாய் "அழகு பொம்மாயி" என்று சொன்னான்.அந்த பொண்ணு முகமுடி கலட்டன அப்புறம் தான் தெரிஞ்சிச்சி அது நம்ம கழுத பொண்ணு...

முகம் தேடி அவள் காத்திருக்க 
நகம் கடித்து காத்திருந்தான் 
நாளை வருகைக்கு....

Wednesday, February 8, 2012

எனக்கும் காதலா! பகுதி 3




டிசம்பர் 21,2011:
இந்த வார activity க்கு document work  முடிச்சி manager  approval க்கு mail அனுப்பி விட்டு கெளம்பும்போது தான் ஞாபகம் வந்தது, அன்றைய daily checklist அனுப்பவில்லை என்று. சற்று நேரத்தில் அதனையும் முடித்து கிளம்பிய போது நேரம் காலை 6:50. நேரத்திற்கு நாம் போகிறோமோ இல்லையோ cab போய்விடும். அடுத்த வண்டி 7:30 க்கு தான். சரி நாம் செய்த தவறுக்கு அவுங்க என்ன செய்ய முடியும்,அதே போல் ராஜேஷும் பொதுவாக யாரையும் கடிந்து கொள்வதில்லை,ஆனா சாய் இந்த மாறி எதாவது நடந்தா? காட்டு கத்து கத்துவான்! உடனே Transport Manager போன் போட்டு அவர்கிட்ட புகார் கொடுத்துட்டு, என்ன செய்வான்?... அதே 7:30 cab ஏறி போவான். 

சரி அதுவரை facebook மொபைலில் பார்த்துகிட்டு இருந்தான். நேத்து அடித்த status message க்கு ஒரு like நாலு comment. 

"Harish Lakshminarayan likes this"
Harish Lakshminarayan: மாமா வெளையாட்டு புள்ள டா நீ!
Hariharan Tamilmani: வேளை நேரத்துல வேளை செய்யாம? என்ன விளையாட்டு ராஸ்கல் :P
Saai Chandran: ராஜேஷ் நீங்க ரொம்ப கில்லாடிங்க சூப்பரா காய் நகர்துறீங்க
Harish Lakshminarayan: டேய் விளையாட்டுன்னு தான சொன்ன? Saai Chandran: ராஜேஷை நோட் பண்ணுங்க நீங்க முன்னேறலாம்.

யார் என்ன கமெண்ட் போட்டாலும் ஒரு அசட்டு சிரிப்பு வரத்தான் செய்யும்.அதுக்கு அவனும் விதிவிலக்கில்லை, அவனும் ஒரு கமெண்ட் போட்டான்.
Rajesh Kumar: Harish,Hari,Saai உங்க விளையாட்டு எங்களுக்கு தெரியாதா. public public!!

ஹரிஷ் ராஜேஷை போனில் அழைத்தான் அதற்க்குள் cab ready ன்னு அவனை கூப்பிட்டார்கள். ஹரிஷ் அழைப்பை துண்டித்து விட்டு cab ஏறினான். ஹரிஷ்க்கு மெசேஜ் type பண்ணிட்டு இருந்தான் அதற்க்குள் ஹரிஷ் மீண்டும் அழைத்தான். 

ஹரிஷ்: டேய் எங்கடா இருக்க? 
ராஜேஷ்: இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது, அதனால வண்டிய விட்டுடேன்!! இப்போ தான் கிளம்பினேன்.
ஹரிஷ்: சரி நான் ஒரு friend ஐ பாக்க போறேன் அப்படியே office க்கு போய்டுவேன்.
ராஜேஷ்: ரைட் மாப்ள நாளைக்கு பாக்கலாம்.

இவனுங்க ரெண்டு பேருமே CUG la இருக்காங்க. ரெண்டு பேருமே மொதல்ல ஒரே company ல வேளை செஞ்சதுனால, இன்னைக்கும் இவங்க அழைப்புகளுக்கு இலவசமே. பாதி தூரம் கடந்திருக்கும் cab driver  ராஜேஷை "சார்! சார்! ஒரு அஞ்சு நிமிஷம் டீஸல் போடுக்குரேன்" சொல்லி அவன் அரை தூக்கத்தை எழுப்பி விட்டான். 

ஹரிஷ் அலுவல் message:
Cute lover message:
"எல்லா செங்கலளிலும் " i miss you" ன்னு எழுத போறேன், எதாவது ஒரு செங்கல் உன் தலைல விழணும்னு ஆச படுறேன்,அப்போ தான் உனக்கு என் வலி என்னன்னு தெரியும்."

வீடு வந்து சேரும் போது 8:15, ஹரி கிட்ட பேசிட்டு இருந்தவன் அப்படியே உறங்கினான். அவன் மொபைல் சிணுங்கள் அவனை எழுப்ப கூடாது என்று அதை ஹரி silent ல் போட்டு விட்டு, தொலைக்காட்சியையும் அணைத்து விட்டு Quantitive Aptitude book ஐ புரட்டி கொண்டு இருந்தான்.

மதியம் 1:30:
(ஹரி பாஸ்கட் ball கோர்ட்ல விளையாடிட்டு இருந்தான், அங்கே இன்னொரு ரூம் மேட் அப்பு சத்தம் டேய் தூக்கி போடுறா. அவன் பந்து எறிந்த இடத்தில இருந்து செங்கல் விழுந்தது. ராஜேஷ் ஒரு திகைப்புடன் எழுந்தான். அங்கே ஹரி Bournvitta Basket  தொங்கி கொண்டு இருந்தது அவன் விளையாடிட்டு இருந்தான். அப்போ தான் தெரிந்தது அது ஒரு கனவென்று.) 

ஹரி: சாரி மச்சி எழுப்பிட்டு விட்டுடனா?
ராஜேஷ்: இல்ல இல்ல! பசிச்சிச்சு அதான் எழுந்துட்டேன்!
ஹரி: நான் அப்பு கிட்ட ஆந்திரா meals வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்..
ராஜேஷ்: டேய் sodexho இருக்கு டா எடுத்துட்டு போக சொன்னியா?
ஹரி: இல்லடா எங்க இருக்குன்னு தெரியல? அதான் அவனையே வாங்கிட்டு வர சொன்னேன்!

(ஆந்திரா meals bachelor's க்கு எப்போவுமே வர பிரசாதம் 35 ருபாய் unlimited meals  அத ஒன்னு வாங்கி ரெண்டு பேர் சேந்து சாப்பிடுவாங்க. பப்பு சோர்ல ஆரம்பிச்சு தயிர்ல முடியும்.. கண்டிப்பா வயிர் நிறையும்! என்ன அதுல? சோடா மாவு கலப்பாங்க!! அதுனால ரெண்டு பேர் என்ன? மூணு பேர் கூட சாப்பிடலாம்.. இன்னும் ஒரு கூடுதல் தகவல்? ராஜேஷ் தான் முதலில் அந்த கடைக்கு போய் சாப்பிடுவான், அங்க owner ஓட பொண்ணு கல்லூரியில் படிக்குது !இவன்கிட்ட ஒரு நாள் பேசி இருக்கு,அதனால இப்போ அங்க இவுனுங்க எல்லாரும் regular customers.)

ஹரி: டேய் அப்பு என்ன ரூம்க்கு வந்துட்ட?
அப்பு: வேளச்சேரிக்கு collection வந்தேன் சரி அப்படியே சாப்பிட்டு போலாமேன்னு!!
ராஜேஷ்: அப்பு முன்னாடியே உன் குரல் கேட்டுச்சு?
அப்பு: இப்ப தாண்டா நான் வரேன்! ஹரிக்கிட்ட போன் பண்ணேன் அவ்ளோதான்!!
ராஜேஷ்: (ஓஹ! அது கனவு இல்ல)
ஹரி: டேய் தயிர் சாப்டுறியா அப்பு?
அப்பு: வேணாம் நீயே சாப்டு! 
(அப்போ ஒரு போன் அப்புவிற்கு "சார் நான் இப்போ கிண்டி ரயில்வே station ல இருக்கேன், நீங்க தாம்பரத்தில wait பண்ணுங்க வந்துடுறேன்" அப்பு எப்பவுமே இப்படி தான்? சமையல் அறையில் இருந்தா செங்கல்பட்டு,வரவேற்பறையில் இருந்தா தாம்பரம்,வீடு வெளிய இருந்தா கேளம்பாக்கம். இப்படி ஊரு ஊரா அலைந்து!!! சீட்டு தேஞ்சு போச்சு அவனுக்கு!!!)
அப்பு: டேய் மீதிய சாப்பிடு நான் கெளம்பறேன்!
ராஜேஷ்: சரி டா! கிண்டி ரயில்வே station ல போய் கை கழிவிக்கோ!! (ஹரியும் ராஜேஷும் வலது கையை தட்டி கொண்டனர்)
அப்பு: என்ன மாப்ள பண்றது? இப்படி சொன்னா தான் நம்புவானுங்க! போன் எடுத்த நச்சு நச்சு சொல்றானுங்க! இந்த executive பொழப்புக்கு தான் இப்படி அலைய வேண்டி இருக்கு... உங்கள மாறி எனக்கு ஏசி ரூம்ல வேலையா என்ன! விடு நான் கெளம்பறேன்...

(ராஜேஷ் ஹரி சாப்பிட்டு முடித்து விட்டு! எப்படி இந்த பாஸ்கட் பால் வந்துச்சுன்னு ஹரி கிட்ட கேட்டான். Bournvitta வாங்கனுதுக்கு ஓசியில வந்துச்சு சொன்னான். ஆனா ஹரி Bourvita வெறும் வாய்ல சாப்ட வாங்கி இருக்கான்.ஏற்கனவே வெறும் வாய்ல வடை சுடுவான் இதுல இது வேற . இருவரும் சற்று நேர உரையாடலுக்கு பிறகு உறங்கினர்)

மாலை 6:30:
வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்லும் போது மொபைலை நோன்டியவ்னுக்கு, சில வார்த்தைகள் மின்னொளி என உதித்தது!!! அதை தட்டி சேர்த்தான்.. இயல்பாக அவனுடைய எண்ணங்கள் கவிதையாய் மாறின.. 

அவள் மிஸ் யு என்று செங்கலில் எழுதினாள்!
உறங்கிய போது கனவில் ஒன்று!
நடக்கும் போது பாதையில் ஒன்று!
அகல பார்த்த போது செம்மண்ணாய் ஒன்று!
முகர்ந்த போது தூசியாய் ஒன்று!
ஒன்றொன்றாய் தாக்கி!
உனை தீண்டிய வேதனை என்னையும் தீண்டியது!
மிஸ் யு செங்கலாய்!

(அதை தன்னுடன் பழகும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தான் குருந்தகவலாய். இன்று என்ன செய்ய வேண்டும் என்று முன்னரே தேர்வு செய்து விட்டான் அதற்கான ஏற்பாடுகளோடு வந்திறங்கினான். )

ஒரு கவிதை எழுதும் மாலை பொழுது! சுவாசிக்கும் காற்று புதிதாய் இருக்கும்! அதிலும் உன் கண்பட்ட கன்னியர் எல்லாம் புது கவிதையாய் தெரியும். இவன் கண்பட்ட கன்னியர்களில் முதல் ஆளாய் கீர்த்தி. இருவரும் ஒரே நேரம் வண்டியில் இருந்து இறங்கி காலார தங்கள் இருக்கைக்கு நகர்ந்து சென்றனர். அவள் கவியின் வார்த்தையாய் இருந்தது பார்த்தவர்களுக்கு தெரியாது இவன் ஓரக்கண் பார்வைக்கு தான் தெரியும்.

சுவாரிசயமான christ maa christ child விளையாட்டு! இன்னும் இரண்டே நாட்களில் முடியப்போகிறது. ஒவ்வொருவரும் தங்களை ஆட்டி படைக்கும் ஆள் யார் என்று தேடி கொண்டிருக்கிறார்கள்? அதில் பலரும் கண்டுபிடிக்கப்பட்டனர்! அதனால் பலரும் ஒதுங்கி விட்டனர். ராஜேஷை கண்டுபிடிக்கும் எண்ணம் கீர்த்திக்கு இல்லை! தனக்கு யாரோ பிடித்ததை எல்லாம் செய்கிறார்கள்! நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? வெள்ளி கிழமை அன்றே தெரிந்து கொள்கிறேன், என்று அமைதியாக விட்டு விட்டாள். ராஜேஷை ஆட்டி படைக்கும் நபர் யாரென்று தேடமலே சிக்கிவிட்டார்? அவர் இதுக்கு மேல என்ன செய்ய சொல்றதுன்னு தெரியலன்னு அவரே ஒத்துகிட்டார்? வேறு யாரும் இல்லை முருகனின் supervisor தான் அவர். இருந்தாலும் ராஜேஷ்க்கு அவர் வெள்ளி அன்று பரிசு கொடுப்பதாக வாக்களித்து சென்றார்.

வழக்கம் போல் முருகனிடம் தூது அனுப்பினான்: 
"இன்று உனக்கு refree வேலை,உனக்காக cafeteria மைதானமாக மாற்ற பட்டுள்ளது. அங்கே சிறுவர்கள் விளையாடும் ball உம் basket தொங்க விட பட்டுள்ளது. உனக்கு பிடித்த ஐவரை அழைத்து கொண்டு போய் ஆளுக்கு ரெண்டு முறை வாய்பளித்து அதில் ஒருமுறை சரியாக பந்தினை போடும் நபருக்கு ஒரு டைரி மில்க் பரிசளிக்க வேண்டும். டைரி மில்க்கள் அங்கே பந்துடன் வைக்க பட்டுள்ளது."

அவளின் அருகினில் இருக்கும் தோழிகளை அழைத்து கொண்டு போட்டிக்கு தயாரானாள். 
முதல் போட்டியாளர்: ரெண்டு பந்துகளையும் தவற விட்டாள்
இரண்டாம்,மூன்றாம்,நான்காம் மற்றும் ஐந்தாவது போட்டியாளர்கள்: கொடுக்க பட்ட வாய்ப்புகளில் சரியாக பந்தினை அந்த கூடைக்குள் செலுத்தினர்.
அங்கே ஒரே கூட்டம் கூடியது பெண்கள் ஆர்பரிக்க ஆண்கள் ஈ மொய்க்க அங்கே காட்சிகள் களோபரம் ஆனது.வெற்றியாளர்களுக்கு டைரி மில்க் கொடுத்தாள். முதல் போட்டியாலரிடமும் மீதம் இருந்த டைரி மில்கையும் கொடுத்தாள் அவள். இதை பார்த்த ராஜேஷ் முகம் வாடி போனது அவளுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே என்று!! அதோடு கீர்த்தி மேல் இருந்த ஓர பார்வை மேலும் அகல விரிந்தது. இருந்தாலும் அவளை பாராட்டியே ஆகவேண்டும் என்று முருகனிடம் பெரிய டைரி மில்க் வாங்கி வந்து அவளிடம் கொடுக்க சொன்னான்.

(டைரி மில்க் கல்லூரியில் படிக்கும் போதே அவனுக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பது அவனது வழக்கம். இன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் சிறிய சாக்லேட்களை வாங்கினான் ஆனால் அது நடக்காமல் போகவே அவளுக்கு பெரிதாய் கொடுக்க ஆர்வபட்டான்)

கீர்த்தியிடம் முருகன் அந்த டைரி மில்கை கொடுத்த போது அவளுக்கு ஆச்சர்யம்! முகம் மலர்ந்தது! மற்றும் அவளுக்கு யார் என்று தெரிய வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது? முருகன் என்னோவோ சொல்லி தப்பித்து வந்து ராஜேஷிடம் தப்பித்த கதையை ஒப்பித்தான். அதற்குள் யாரோ ஆபீஸ் மைக் சிஸ்டத்தில் "mic testing one two three four" என்று அழைத்து கொண்டிருந்தார்கள். அது வேறு யாரும் இல்லை சாய் தான் பேசிகொண்டிருந்தான்.

சாயினை அணைத்து சினிமா நடிகர்களை போல் எதாவது ஒரு topic வைத்து கலை சேவை புரியமாறு அவனின் கிறிஸ்து தாயின் வேண்டுகோள்....

MGR குரலில்: ஐயோ அம்மா இன்று நான் என்ன செய்வேன், நீங்கள் ஆணையிட்டால் நான் உங்களுக்கு அடிபணிகிறேன். கும்பிட போன தெய்வம் குறுக்கே வரும் ஆனால் நான் குறுக்கே போனால் தாய்குலமே வராதம்மா.அண்ணா மீது ஆணை! அந்த பொண்ணை நான் கரெக்ட் பண்ணியே தீருவேன்! 

சிவாஜி குரலில்: அங்க ஒரு பொண்ணு..... என்ன பாத்து இளிச்சிச்சி.. நான் கை வீசம்மா கை வீசு டேடிங் போலாம் கை வீசுன்னு சொன்னேன்.. அதுக்கு அவ என் கன்னத்து மேலயே கை வச்சிட்டு போய்டாளே... (உக்கு உக்கு இருமல் சத்தம்)

ரஜினி குரலில்: ஜீன்ஸ் போட்டு சிட்டுங்கே கிட்ட மோதலாம் ஆனா சிங்கத்து கிட்டே மோதக்கூடாது... ஹா ஹா ஹா. ரெண்டு கை ரெண்டு கால் இல்லனாலும் அந்த figure ஐ கரெக்ட் பண்ணுவான் சார் இந்த காளி ரொம்ப கெட்ட பையன் சார் அவன்...

கமல் குரலில்: well u see... நான் என்ன சொன்ன வரேன்னா.. அங்க பொண்ணுகளுக்கு ஒண்ணுன்னா ஓடி போறான் பார்... அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேன்..டெய்லி பஸ்ஸ்டாப் ல நின்னு கடலை போடுறான் பார்... அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேன்.. ஒரு பைசா போன் க்கு கூட missed கால் கொடுக்கறா பார்.. அவளை நிறுத்த சொல் நான் நிறுத்தறேன் ... என்ன கடலை போடவேனம்ன்னு சொன்னா.... ஹாஆஅ ஹாஆ ஹா 

கடைசியாக Mr.ராகவன் குரலில்: நல்லத நாலு பேருக்கு சொல்ல ஷொல்லி என்ன கூப்பிடாங்க... என்ன சொல்ல பிள்ளைவாள்.. இவங்க எல்லாம் இப்படி தான்... நானும் ஒரு பொண்ணு கிட்ட போய் i love u ன்னு சொன்னேன்... அதுக்கு அவ என்ன காலம் போன வயசுல உனக்கு எதுக்கு இந்த பொழப்புன்னு கேட்டுட்டா.

ஆபீஸ் மொத்தமும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அனைவரும் சாயை வாழ்த்தி புகழ்ந்தனர். சாய் திக்கு முக்காடி நின்ற நேரம் HR கிட்டே இருந்து அழைப்பு வந்தது என்னனு போய் பார்த்தால் அங்கு அவனின் manager அமர்ந்திருதார். HR கண்டித்தார் மேனேஜர் கண்ணடித்தார். பெண்களை பத்தி பேசறது தப்புன்னு சொல்லி அவன அனுப்பிட்டாங்க. அவன் மேனேஜர் HR ஐ ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குள் அந்த கழுதையை போல் கத்திய பெண் பக் பக் பக் என்று கோழி பிடிக்க நேராக ஓடி வந்து மேனேஜர் ஐ இடித்தாள். என்ன என்று வினவினால்? அவளுக்கு இன்று கோழி பிடிக்குமாறு உத்தரவாம். மேனேஜர் அதற்க்கு "அது சரி மா எந்த ஊர்ல கோழி நேர் கோட்டுல ஓடுச்சி.. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சி போங்க" என்று கிண்டலளிதார்.

ராஜேஷ் இன்னும் சிரிப்பில் இருந்து மீளவில்லை அவன் சாயை கட்டி தழுவினான். அன்று மொத்த அலுவலகமும் சிரிப்பு வெடியில் இருந்து மீண்டு தங்கள் பணிக்கு செல்ல மிகுந்த நேரமானது. இந்த வார இறுதியில் நடக்கும் activity approve செய்யப்பட்டு, ஆயுத்த பணிகளுக்கு சாயுடன் கலந்துரையாடிய போது தான் தெரிந்தது? சாய் விடுமுறையில் செல்கிறான் என்று.அதனால் இந்த வாரம் சனி காலை ராஜேஷ் தான் செய்ய வேண்டும் என்று மேனேஜர் கூட மெயில் அனுப்பி இருந்தார். 

கீர்த்தி ராஜேஷ் அமரும் இடத்திருக்கு வந்தாள். என்னடா தெரிஞ்சி போச்சான்னு பார்த்தான்? ஆனால் அவள் சாயிடம் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்தாள்.. அதோடு பெரிய டைரி மில்கில் ஒரு சில அவனுக்கும் தந்து ராஜேஷிடமும் தந்து சென்றாள். அவள் மெல்ல நடந்து செல்ல... இவன் மனம் அவள் பின்னால்!

பகிர்ந்து உண்ணும் பழக்கம் அவளுக்கு!
உண்மை அறியா நிலை இவனுக்கு!
இன்று முதல் அவன் அரைதூக்கத்தில் வரும் முகம் அவளுடையது!

மேலும் சுவாரசியங்கள்...
அடுத்த சந்திப்பில்!


Thursday, January 26, 2012

எனக்கும் காதலா! பகுதி 2

டிசம்பர் 20,2011:
ராஜேஷ் காலை 6:30 shift முடிந்து தூக்கம் கலையாமல் வீடு சேரும் போது மணி 7:30. உள்ளே நுழையும் போதே ஹரிஷ் யாரோடோ தன் கைபேசியில் உரையாடி கொண்டிருந்தான். அவர்கள் ரூமில் மற்ற ஐந்து பேரில் வீரா குளித்து விட்டு அடுத்து கோழி @ அருணை எழுப்பி கொண்டிருந்தான் மீதம் மூன்று பேர் உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனா!! என்ன அவர்களுக்குள் என்று தெரியாது? ராஜேஷ் இருந்தா மட்டும்... அவர்களுக்குள் கலகலப்புக்கு குறைவே கிடையாது.

ஹரிஷ் தன்னுடைய உரையாடலை(அதுக்கு பெயர் அதிகாலை கடலை) துண்டித்து விட்டு உள்ளே நுழைந்தான்.

ஹரிஷ்: என்ன ராஜேஷ் தூங்க போறீயா? சாப்டு தூங்கலாம்ல? இரு நான் நாயர் கடைல tiffen வாங்கிட்டு வரேன்...
ராஜேஷ்: சரி டா! பொங்கல் வடை கெட்டி சட்னி வாங்கிட்டு வா.. 
ஹரிஷ்: டேய் மாமா தூங்கிடாத வரேன்..(கண்டிப்புடன்)

(நாயர் கடைல அஞ்சு நாளைக்கு முன்னாடியே கெட்டி சட்னி செஞ்சு fridgela வச்சிருப்பாரு. இருந்தாலும் வேளச்சேரி TCS பின்னாடி இருக்குற நாயர் அவ்ளோ famous. அதே போல இவங்களுக்கு ரூம் பாத்து கொடுத்தவரும் அவர் தான் நைட் ரெண்டு மணி வரைக்கும் கடையை ஓபன் பண்ணி வச்சிருப்பாரு. எவ்ளோ late ah போனாலும் பாசமா சாப்பாடு போடுவாரு but digestion problem வந்ததில்ல)

(ஹரிஷ் வண்டி சத்தம் பீறிட்டது காலைலயே வண்டிய வாசல்ல விட்டுட்டு அவங்க வீட்டு மாடில இருக்குற சுரேஷ் அண்ணா பக்கத்துக்கு வீட்டு குடிகாரன் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அவர பத்தி அதிகமா சொல்லிக்க ஒன்னும் இல்ல but அவருக்கு இவங்க ரூம்ல தெரிஞ்ச ஒரே பேரு ஹரிஷ், அவருக்கு ஹரிஷ் எப்பவோ உதவி பண்ணிருக்கான் அதனால அவன மட்டும் ஞாபகம் வச்சிருக்காரு)

அவன் உள்ளே நுழையும் போதே.. வீரா,அருண் வேலைக்கு கெளம்பி போனாங்க. ஆனா சும்மா போகல ராஜேஷ கலாச்சிட்டு போறானுங்க. யாருக்குமே ராஜேஷை கிண்டல் பண்ணனும் தோணும், ஆனா அவன் யாரையும் திட்ட கூட மாட்டான், அவனுக்கு தெரிஞ்ச அதிக பட்ச கெட்ட வார்த்த "போடா வெண்ணை! சரி நீ மூடு".

ராஜேஷ் facebookla status message update பண்ணிட்டு இருந்தான். "Yesterday was a excellent day, in office we are playing Chirst Maa Christ Child and we are entertained much. Laugh riots everywhere"

ஹரிஷ்: டேய் ராஜேஷ் மொபைல் நோண்டாம சாப்டு தூங்கு 

ராஜேஷ்: அது ஒன்னும் இல்ல மச்சி நேத்தி ஆபீஸ்ல நடந்த கூத்த facebookla update பண்ணிட்டு இருந்தேன்.
(நைட் நடந்தத ஹரிஷ் கிட்ட விவரிச்சான்)

ஹரிஷ்: அது என்னமோ போடா உனக்கு மட்டும் office cabla figure வருது,எங்க! நாம எல்லாரும் ஒண்ணா போனாகூட உன்ன தாண்ட பாக்குறாங்க!

ராஜேஷ்: நிறுத்துரா வெண்ணை! நீ மட்டும் காலைலயே கடலை போடலையா..

ஹரிஷ்: டேய் அது friend da! எங்கள யாரு பார்த்தாலும் friend ah தான பாக்குறாங்க.. உங்கள அப்படியா!

ராஜேஷ்: சரி நீ மூடு..

(tiffen சாப்டும் போதே ஹரி(இன்னொரு roommate) எழுந்து ராஜேஷ் பொங்கல்ல கைய வச்சான். பல் வெலகாம சாப்டறது அவனுக்கு மட்டும் இல்ல இந்த gang க்கே உரித்தான ஒன்னு ஒரு தடவ யாரோ foriegn சாக்லேட் கொண்டு வந்தாங்க அதுவும் காலைல நாலு மணி.. அஞ்சு மணிக்கெல்லாம் கூட்டா சேந்து முடிச்சு புட்டானுங்க)

மாலை ஆறு மணி:
ராஜேஷ் மொபைல் மெசேஜ்:(அது ஒரு forward message ஹரிஷ் அலுவளிடம் இருந்து)
"ஒரு அழகான பொண்ணுகிட்ட எந்த மாறி பையன் வேணும் லவ் பண்றதுக்குன்னு கேட்டா 
அவன் ஒரு சிறந்த போட்டியாலரா இருக்கணும் என்னோட காதல விட  அவனோட காதல காட்றதுக்கு"
ராஜேஷ் replies "நானும் அந்த மாறி பொண்ண தான் தேடிட்டு இருக்கேன்"

(cab la வரும் போது இன்னைக்கு கீர்த்தி கிட்ட என்ன செய்ய சொல்லலாம்னு யோசிச்சிட்டு வந்தான். உதித்தது புது ஐடியா! வண்டியை விட்டு ஆபீஸ் வெளியிலேயே இறங்கினான், நேற்று சென்ற அதே fancy shop ல் அவன் நினைத்ததை வாங்கி கொண்டு ஆபீஸ் க்கு சென்றான்)

அவன் வருவதற்கு முன்னாலே அவனுக்கு செய்ய வேண்டிய task வந்துவிட்டது. saai கூட வந்துட்டான் அவன் cab இன்னிக்கி சீக்கிரம் போல.

ராஜேஷ்: saai whats up dude? என்ன இது என் deskboard ல யாரோ எழுதி இருக்காங்க? 
"You are a good child. Please wear this kitchen cap from 7 to 8PM and invite them to our cafeteria 'வாங்க சாப்பிடலாம் வாங்கன்னு' சொல்லுங்க. Urs Christ Ma"
ha ha ha... டேய் kitchen cap முடி கொட்டாம சாப்பாடு போட use பண்ணுவாங்களே அதான! ஹ்ம்ம் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ!

Saai: அட அந்த கொடுமைய விட இத பாருங்க என் desk la?

"Mr.Saai இத நடிகர் சூர்யா குரலில் படிக்கவும்(நிச்சியமா இது பெருமை பட கூடிய விஷயம்). சரி இன்னைக்கு நீங்க முழுக்க விஜயகாந்த் டோன்லயே பேசணும். எங்களுக்கு தெரியும் நீங்க நல்லா மிமிக்ரி பண்ணுவீங்கன்னு. நம்ம HR கிட்ட போய் 'ஆத்தா எனக்கு மட்டும் சம்பளம் ஜாஸ்தியா கொடுங்க.. எனக்கு உங்ககிட்ட பிடிக்காத வார்த்த  appraisal' nu சொல்லுங்க. உங்கள் கிறிஸ்து தாய்"

ராஜேஷ்: பரவாலைங்க உங்களுக்கு வராததையா சொல்லிருக்காங்க! பண்ணுங்க. ஆனா HR வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க. ஆத்தா ன்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வச்சிக்கனும்ங்க!! 

Saai: சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் உங்கள் கீர்த்திக்கு! 

ராஜேஷ்: சொல்றேன் வாங்க! இது chirstmas flag. இன்னைக்கு கொடி ஏத்தி சாக்லேட் கொடுக்க சொல்ல போறேன். வாங்க நம்ம முருகன(ICARE boy) போய் பாப்போம். . எல்லாரும் பாக்குற மாறி இருக்கணும்.
(walking towards cafeteria)

முருகன்: சார் என்ன இன்னைக்கு! 

ராஜேஷ்: (விவரித்தான் என்ன செய்ய வேண்டுமென) சரி இதுக்கு ஒரு நல்லா இடம் வேணும் அதே போல இதுல இந்த eclairs சாக்லேட் போட்டு முடிச்சிடு!
கயுற இழுத்தா சாக்லேட் கொட்டனும்! 

முருகன்: விடுங்க சார் நான் பாத்துக்குறேன்! நம்ம reception ல இருந்து உள்ள வந்த உடனே தான் கலர் கலரா கொடி தொங்க விட்டுருக்காங்களே!

ராஜேஷ்: சபாஷ் டா முருகா! சரி நான் போய் அந்த receptionist கீட்ட சொல்லிடறேன்!  
(ராஜேஷ் receptionist மற்றும் security கிட்ட சொல்லிட்டு அப்படியே கீர்த்தி desk call பண்ணி வரசொல்ல சொன்னான். வந்தவுடன் இந்த சீட்டை கொடுத்திருங்க. நான் யார்ன்னு சொல்ல கூடாது என்று கூறிவிட்டு சென்றான்)

Note to Kirti from ur chirst ma
"எத்தனையோ சந்தோஷங்கள் அதில் கொடி ஏற்றும் போது நமக்கு சாக்லேட் கெடைக்குமான்னு தான் நாம அண்ணாந்து பார்த்தது உண்டு!! ஆனால் நாம் கொடி எற்றுவோமா என்று நமக்கு தெரியாது? இன்று நீ கொடியேற்றி உனக்கு கிடைக்கும் சாக்லேட் ஐ உன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்"

கீர்த்தி இன்று சிகப்பு வெள்ளை நிற சுடிதார். பெண்கள் என்றுமே சிகப்பு வெள்ளை ஆடையில் அழகுதான்!! அவளும் விதி விலக்கல்ல. அவள் புன்னகை,நடை,பாவனை எல்லா அழகான பெண்களை போல் தான். கொஞ்சம் maintenance charges ஜாஸ்தி ஆகும் போலன்னு ராஜேஷ் நினைத்து கொண்டான்.

கீர்த்திக்கு receptionla இருந்து அழைப்பு வந்தது. அங்கே அவர்கள் கொடுத்த சீட்டினை வாங்கினாள். அவளை அக்கணம் பார்த்தவனுக்கு தோன்றும் சில வார்த்தை கோர்வைகள் இங்கே....

பூரிக்கும் பெண்கள் ஆயிரம் மின்னலுக்கு சமமா! 
என்ன அவளும் சாதாரண பெண் தானே!
அவள் வெட்கமும் புருவ படபடப்புகளும்
கொஞ்சல் சிரிப்பும் கெஞ்சல் கேள்வியும்!
அடடா யாரையும் சிலிர்படையுமோ!

அவள் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆனால். சற்று விழி பிதுங்கி நின்றாள்! எங்கே அந்த கொடி என்று?. முருகன் உதவி புரிந்தான். மேடம் அங்கே உள்ளதென்று அப்படியே அனைவரையும் கூவி அழைத்தான் கொடி ஏற்றத்திற்கு தயார் ஆகுங்கள் என்று. ராஜேஷ் ஒரு ஓரத்தில் Kitchen Cap அணிந்து கொண்டு நின்றிந்தான். கீர்த்தி கொடி ஏற்ற ராஜேஷ் முதல் ஆளாய் கை தட்டி அனைவரையும் தட்ட வைத்தான். 

ஐயோ!! ஒரு இழுவையில் கொடி ஏற்ற படவில்லை.. ராஜேஷ் முருகனை முறைத்தான். முருகன் உடனே முதல்வருக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி போல் அவள் கயுரை தொட இவன் ஏற்றினான். சாக்லேட் மழை பொழிந்தது. அவள் ரசித்து முடித்து ஒவ்வொரு சாக்லேட் ஐ எடுத்து அருகில் இருந்தவர்களுடன் பகிர்ந்தாள். அப்பொழுது saai விஜயகாந்த் குரலில் "ஹே புள்ள எங்களுக்கு சாக்லேட் கெடையாதா!" என்றான்.அனைவரும் நகை ஆடினர். கீர்த்தி ஒரு சாக்லேட் சாய்க்கும் கொடுத்தாள் ராஜேஷை பார்த்து இளித்து விட்டு போனாள். ஏன் என்றால்? சாக்லேட் அவனுக்கு கொடுக்கலயே!!!(அது ஒரு விஷயமே இல்ல அவனுக்கு! ஆனா அவனுக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை kitchen cap போட்டதுனால சிரிச்சி இருப்பாளோ!! பொண்ணுங்க எதுக்கு சிரிக்கிரங்கன்னு தெரியுமா என்ன????)

சில பல சிரிப்பு சத்தங்களுக்கு பிறகு அனைவரும் மீண்டும் தங்கள் பணியினை தொடர்ந்தனர்!! 

(சாய் ராஜேஷ் கிட்ட விஜயகாந்த் குரலில் "நமக்கு இன்னைக்கு வந்த டிக்கெட் கவுன்ட் ஆறு அதுல நான் பார்த்தது ரெண்டு நீ நாலு" என்றான். அப்படியே HR கிட்ட போய் அப்பரைசல் பத்தியும் பேசிட்டு வந்தான் வரவழில நேத்து கழுதையா கத்துன பொண்ணு இன்னைக்கு "யார் தச்ச சட்ட தாத்தா தச்ச சட்டன்னு" அவுங்க டீம்ல இருகரவுங்க கிட்ட தொடர்ச்சியா சொல்லி "யார் தத்த தட்ட தாத்தா சட்ச சட்டன்னு" ஒளரிட்டு இருந்துச்சு)

என்றும் போல் அவனின் வேலை சற்று அதிகமாய் இருந்தது. இதில் இந்த வாரம் சனி அன்று ஒரு நியூ installation அதற்க்கு தேவையான document preparation ல் ஈடுபட்டான்.

உறங்க மறுக்கும் கண்களை!
உளற மறுக்கும் வார்த்தைகளோடு
இரவே கடந்திடுவாய்!
உன்னை மீண்டும் நாளை சந்திக்கிறேன்!

தொடரும்....

Thursday, January 19, 2012

எனக்கும் காதலா! பகுதி 1

ராஜேஷ் காதலை காதலிக்கும் சங்க உறப்பினர் yet single . ஹரிஷ் காதலை சுவாசமாய் உணர்ந்தவன் but single . நல்ல நண்பர்கள் உணர்வையும் இடத்தையும் பகிர்ந்தவர்கள் அவர்களுடன் மேலும் ஏழு பேர். காலம் போன போக்கில் அனைவரும் நடை பயணிகள் என்றாவது நாமும் நமக்கென ஆனவர்கள் வருகையை எதிர் கொண்டிருக்கும் ஒரு நல்ல gang .

ஆனால் காதலை காதலிபவர்களை தேடி 2012 ஆம் வருகை புரிந்தது அதன் தொகுப்பே எனக்கும் காதலா!.  
   
19th December 2011:
ராஜேஷ்க்கு நைட் shift வேலை, ஹரிஷ் இரண்டாம் shift வேலை. ராஜேஷ் வழக்கம் போல் shift cab ஏறி சென்றான், 
Mobile message (a smart phone holder)
"Hi, +91 9566548114 this is my new official number. Please msg/call only on emergency -Harish"
தன்னுடைய கை பேசியில் ஹரிஷ் எண்ணை அலுவல் என்று பதிவு செய்தான்.  

இரவு வேலைக்கு விளக்கம் தேவையில்லை அதாவது இப்பொழுது தான் விடிந்தது அமெரிக்காவில். நாமும் பகலில் தூங்கி இரவில் வேர்வை இல்லாமல் உழைக்க வேண்டும் வீட்டிற்க்கே வண்டி வந்து கூட்டி செல்லும் விடிந்தபின் தூக்கத்தை தேடி காத்திருந்து மீண்டும் வண்டி ஏறி தெரு வாசலில் இறங்கி வீடு சேருவோம். இது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. 

அனைவரையும் ஹாய் சொல்லி அமர்ந்து தன்னுடைய அஞ்சல்(email) அனைத்தையும் ஒன்றொன்றாக பார்த்தவனுக்கு பின்னால் சக நண்பர் "come lets go for coffee" என்றார். just a min saai!!!.இது ஒன்னும் புதிதல்ல ஷிப்ட்க்கு வந்தவுடன் காபி குடிக்க செல்வது அவர்கள் வழக்கம்.

Rajesh : அப்புறம் saai என்ன இன்னைக்கு ரொம்ப கடுப்பா இருக்கீங்க. 
Saai: அட போங்க boss எவனோ ஒரு கடன்காரன் என்னை இன்னைக்கு எல்லாருக்கும் அதாவது நம்ம குரூப் மெயில் id க்கு "Happy Christ Maa Christ Child for all participants. As a child i obey my maa. I trust my mom ஏழாம் அறிவு movie broken avatar collections. Please trust my mom." இப்படின்னு  mail அனுப்ப சொல்லிருக்கான்.

(Christ Maa Christ Child game: சும்மா ஆபீஸ்ல கிறிஸ்துமஸ் கொண்டாட இந்த game ஒரு team இல்ல ரெண்டு team சேந்து respective name and cubicle no குலுக்கல் முறையில் எடுத்து அவர்களுக்கு வந்த சீட்டினில் யார் பெயர் உள்ளதோ அவர்களுக்கு தெரியாமல் தினமும் எதாவது ஒரு interesting task செய்ய செய்து gift அளிப்பது. கடைசி நாளில் யார் என்பது தெரியபடுத்தனும்.)

Rajesh: Oh! மச்சி நான் சுத்தமா மறந்துட்டேன் வெள்ளி கிழமை சீட் எடுக்க சொன்னாங்க தான... I got Kirti Vardhan 3602 cubicle. நான் check பண்ணவே இல்ல. சரி lets see the desk first who it is then i will decide what should i give. சரி எனக்கு என்ன வந்துருக்கு தெரியலயே!
Saai: சரி tea சாப்டுங்க செக் பண்ணுவோம்... என்ன பண்ண சொன்னவன் எப்புடியும் என்ன நல்லா தெரிஞ்ச பையன் தான் பொண்ண இருந்தா இப்படி பண்ண சொல்ல மாட்டங்க.. 

(In Desk)
Rajesh seen his laptop has a note
"Get a orange juice from Vending Machine hand it to a Cleaning(ICARE) guys-Yours Christ Maa"
Rajesh: Hey Saai இங்க பாருங்க எனக்கும் ஒரு சீட்டு வந்துருக்கு clean பண்ற ஒரு பையனுக்கு vending Machine ல இருந்து Orange juice வாங்கி கொடுக்க சொல்லிருக்கு. Hmmm.... Interesting... நான் பண்ண போறேன்... ஏதோ சொல்லி மெயில் அனுப்பறதுக்கு இது எவ்ளோவோ பராவால!
Saai: Ok i am also going to do it.. since its looks funny to send mail to our group... lets wait for the replies.. ராஜேஷ் common lets see who is ur child... 
Rajesh: ஏங்க அந்த பேர பாத்தாலே தெரியல... ஏதோ ஒரு பையன் தான்... நம்ம cubicle number பாத்தீங்களா 2532 அது 3602 கடைசியா இருக்கும்ன்னு நெனைக்கிறேன் இல்லன்னா நம்ம notice பண்ணி இருக்க மாட்டோமா!!

(Kirti Vardhan - அட பொண்ணுதாங்க!!! புதுசு போல!!! அதான் நம்ம கழுகு கண்ணு ராஜேஷ் கண்ணுல மாட்டல.. அதுக்கு எல்லாம் ராஜேஷ் மாதரி கொடுத்து வச்சிருக்கணும் yet single dont forget)

Rajesh: சரி saai பொண்ணுதான் தெரிஞ்சிபோச்சு just take care of the calls for 30 Min. நான் வெளிய போயிட்டு வரேன்.

ராஜேஷ் ஒரு fancy shop க்கு போய் 5 baloon ஒரு Cadbury's Gem வாங்கி கொண்டுவந்தான். Vending machine la ஒரு orange Juice எடுத்தான். ஒரு பையன் usually ah அவனுக்கு நைட் ஷிப்ட்ல எதாவது வேணும்னா வாங்கிட்டு வருவான். அவன கூப்பிட்டு orange juice ah கொடுத்துட்டு. இந்த balloon எல்லாத்தையும் ஊதி அதுல ரெண்டு பலூன்ல gems போட்டு 3602 cubicle கிட்ட கட்ட சொன்னான். அந்த பையன்கிட்ட ஒரு note கொடுத்து அந்த Kirti Vardhan கிட்ட கொடுக்க சொன்னான்.

Note to Kirti Vardhan:
Burst the empty baloons which tied near ur desk.. and get the Cadbury Gems waiting inside other two baloons - Urs Christ Maa

Rajesh calls Saai... "Machi come near to 3602" 

(saai walks towards the bay of 3602 seen Kirti vardhan is bursting the baloons, இத saai மட்டும் பார்க்கவில்லை ஒட்டு மொத்த floor வேடிக்கை பார்த்தது. அங்கே ஒரு பொண்ணு comment எனக்கும் ஒரு christ maa இருக்கே கழுத மாதரி எட்டு மணிக்கு சட்டுன்னு கத்துன்னு சொல்லிருக்கு... laugh of Kirti(இனிமேல் முழு பேர் சொல்லமாட்டேன் so understand) filled the place when she took the gems without bursting the balloon by just releasing the air... பொண்ணும் கில்லாடி தான் பா)

Saai: சூப்பர் ராஜேஷ்.. ரசிகன் டா நீ. we got some p3 tickets... come lets go... 


இருவரும் தங்களது பணியினை தொடங்கினர்... வேலை ஜாஸ்தி தான் இருந்தாலும் christ maa christ child கலாட்டாக்கள் அன்று அனைவரையும் சிரிப்புடனே இருக்க செய்தது..

(saai அனுப்பிய மெயில் ஏழாம் அறிவு oscar க்கு nominate ஆகி இருக்கறதா இன்னைய போர்டு meeting la discuss பண்ணுவதாக manager மெயில் reply அனுப்பி இருந்தார். ஒரு பொண்ணு கழுதை போல் கத்தியவுடன் ஒரு cubicle லில் ஆட்டு குட்டி முட்டையிட்டு பாடல் sound ah போட பட்டது வேர் ஒரு காமெடி. நம்ம ராஜேஷ் செய்ததை நினைத்து பூரிப்புடன் அன்றைய வேலையை கழித்தான்)

தொடரும்......