Thursday, January 13, 2011

என்றும் சந்தோசம்!

யாரும் உயுரா உயரங்கள் இல்லை
இது தான் எல்லை என்று முடிவும் இல்லை
சறுக்கல்கள் கீறல்கள் இருந்தால் தான்
ரணம் ஆறும் முன் எண்ணம் உறுதிப்படும்

நடந்து வந்த பாதையில் குற்றம் கண்டால்
உறுதி கொண்ட இதயம் தான் உடைபடும்
தவறு செய்தததை போல் கூனி குருகும்
சற்றே நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்போம்!

சோகம் மட்டுமே வாழ்கை என்று இருந்ததில்லை
இன்பம் என்றும் சீராய் நிலைத்ததில்லை
இரண்டும் கலந்த நேரமும் நினைவில்லை
தடுக்கி விழுந்த நம்மை உற்சாக படுத்தி நடக்க வைத்த பெற்றோரை நினைவுகொள்!

முதல் தோல்வி உன் நடை பழக்கத்தில் தான்!
ஆனா ஆவன்னா பேச பழகி அம்மா அப்பா அழைத்து
மழலை சொல் கேட்டு பூரித்து போன நாட்கள் கடந்து
இன்று படித்து முடித்து உற்சாகம் இழந்தால் உள்ளம் நிறைய போவதில்லை!

போதுமென்ற மனம் வேண்டும் போதுமான அளவு பொருள் வேண்டும்
இறைவன் அருள் வேண்டும் படித்தவுடன் வேலை வேண்டும்
கரை ஓரம் வீடு வேண்டும் முக்கியமாக படுத்த உடன் உறக்கம் வேண்டும்
இது மொத்தம் ஒரு அடிப்படை உரிமையாய் அனைவருக்கும் வேண்டும்!

உள்ளம் தான் காரணம் மனம் பண்பட்டால் உன் தரம் உயரும்
பெற்றோர் சுற்றார் மனம் குளிரும்
நீ பார்க்கும் பார்வை தெளிவு பெரும்
நடந்த வந்த பாதையில் தவறில்லை நீ திருத்த வேண்டியது இனி போகும் பாதையே!

உற்சாகமாகு சந்தோசமாய் உன் பிறந்த நாளுக்கு அழைக்கதவர்களை நகை யாடு!
உடன் இருப்பவர்களுக்கு விருந்து கொடு பணம் விரயம் மனம் என்றும் சந்தோசம்!