Saturday, August 31, 2013

கவிதை நடையில் "தங்கமீன்கள்"



கவிதை நடையில்  "தங்கமீன்கள்"


மகிழ்ச்சி:

இரண்டாம் தாயாய் செல்லம்மாவை தோளில் சுமந்த 
கல்யாணியின் கபடமில்லா தெளிவுரையை 
வெள்ளித்திரையில் கண்டேன்!

பாத்திரபடைப்பு:

கல்யாணி என அழைக்கபடும் தந்தைக்கும் 
வடிவு என்ற தாயுக்கும் சிறு வயது காதலில் 
பிறந்த செல்லம்மா கதாநாயகியாய் 
கதையில் வரும் உறவுகள் 
கதாநாயகர்களாய்!

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள  பாசத்தை மட்டும் கூறவில்லை
ஒரு ஆண்மகனின் 
தந்தை,தாய்,மாணவி,அண்ணன் மற்றும் நண்பன் 
என்ற உறவுகளோடு தன்னையே வருத்திக்கொள்ளும் 
வாழ்வாதாரத்தின் போராட்டம்!

செல்லம்மாவும் கல்யாணியும்:

கிளிபிள்ளையின் கேள்விகளுக்கு 
அன்பாய் அரவணைத்து கூறினால் 
அப்பிள்ளையும் அறிவாளிதான்!

எது என்ன விலை என்று தெரியும் போது 
அக்குழந்தைகள் தந்தை சுமை அறிந்து 
கேட்பதில்லை!

ஆனால் அது தெரியும் வரை முடிந்தவரை 
முடியாது என்ற வார்த்தையை கூற 
வருத்தப்படும் கல்யாணி!

தந்தை கூறினால் அது உண்மையாக தான் இருக்கும் 
அவர்போல் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் ஒருவர் வந்தால் 
அவர் கூறுவதையும் கேட்டுக்கொள்ளும் செல்லம்மா!

அதுவரை ஒரு கேள்விக்கு பல பதில்கள் உண்டென
கூறுவதில் கெட்டிக்காரி அவள்!
அதில் அர்த்தம் புரிந்தவன் கைதட்டுகிறான்!

இசையும் ஒளிப்பதிவும்:

ஒளி சேர்க்கையில் ஒலி விளையாடியது 
கரடு முரடான பாதையின் காட்சியில் பசுமை 
இசை சேர்ந்தபின் அதன் செழுமையில் 
கண்களும் செவிகளும் அதன் காட்சிக்குள்ளயே 
சஞ்சரிக்கும்!

பிரிவும் கண்ணீரும் ஏற்படுத்தும் வலியை 
இசை தாங்கி செல்கிறது கூடவே மனமும் 
இறுகியது!

எழுத்தும் இயக்கமும்:

தமிழ் கல்வியும் அதன் நிலைமையும் தான் கற்றது தமிழ்! 
தனியார் பள்ளியும் அதனால் தனியாய் போன தந்தையும் தான் 
தங்கமீன்கள்!

பணமும் மனமும் ஒன்று சேரும் போது  வாழ்வியலில் 
சந்தோஷத்தை இழக்கும் என 
கவிதை நடையில் தன் கதை நெறியில் 
விளக்கபாடம் எடுத்ததற்கு 
கண்களில் நீர் ததும்ப 
நன்றிகள்!

இதற்குமேல் இந்த உறவை பற்றி  பதிவு செய்யப்பட்டால் 
பணம் கொடுத்து படம் பார்க்கும் உங்களை நான் வழிநடத்தி 
சென்றது போல் ஆகிவிடும்!


பலகோடி பாராட்டுகள் கேக்கட்டும் இந்த 
உண்மை படைப்பாளியின் உன்னத படைப்பிற்காக!

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, August 20, 2013

ஆதலால் காதல் செய்வீர்!

ஆதலால் காதல் செய்வீர்!



ராஜபாட்டை தந்த தோல்வி,அதன் பின்னர் மக்களிடம் கூறிய மன்னிப்பு,ஒரு உண்மை படைப்பாளியின் சமுகத்தின் மீதுள்ள  கோவம், இவை யாவும்  படத்தை பார்த்தவர்களை கன்னத்தில் அறைந்த முயற்சி தான் ஆதலால் காதல் செய்வீர்.

காதலை வரையறை இல்லாமல் பார்த்துவிட்ட நமக்கு இந்த படம் ஒரு முழுமுதல் தைரியமான படைப்பு. இந்த கால இலங்காதலை எந்த ஒரு சமாதானமும் இல்லாமல் திரையில் சிறு கவர்ச்சியான காட்சியமைப்பு கூட இல்லாமல் காதலின் காமத்தை திரையாக்கிய விதம் தான் படத்தின் முதல் வெற்றி.

சுசிந்தரன் தன்னை எப்படி பட்ட படைப்பாளி என்று இது வரை வந்த படங்களை காட்டிலும் இந்த படத்தின் உழைப்பு தான் மேலோங்கி இருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் முதலில் இந்த கால இளைஞர்கள், அவர்களுக்கு மிக நீண்ட படங்கள் கொடுக்க தேவையில்லை ஒன்றரை மணி நேரம் போதும் என்று முன் பாதி முக்கால் பின் பாதி முக்கால் மணி நேரம் தான் படம். ஆனால் பகிரப்பட்ட ஒன்று அந்த இளைஞர்களை பற்றி தான். கூடவே அவர்களின் முதிராத காதலை அவர்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்து கொள்வர் அதன் மூலம் விளையும் பின்விளைவு இவை யாவும் அடுத்து அடுத்து காட்சிகளாய் அடுக்கி கடைசியில் கண்களையும் உங்கள் மனதையும் இறுக்கி எழ முடியாமல் திரைஅரங்கை விட்டு வெளியே போகும் வழி தெரிந்தும் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடி செல்வீர்.

ஐந்து நிமிட பாடல் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். அந்த பாடல் ஏற்படுத்தும் பரிதாபம் எழுத தேவை இல்லை உணர்ந்தாலே போதும். கடைசியாய் இந்த படத்திற்கு  ஏன் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற பெயர் என்பதை சுசிந்தரன் தான் கூற வேண்டும் ஏனென்றால் எனக்கு தோன்றியது  "காதல் செய்வீர்? ஆதலால்..."  

என்றும் அன்புடன்,
ரசல்