Tuesday, August 20, 2013

ஆதலால் காதல் செய்வீர்!

ஆதலால் காதல் செய்வீர்!



ராஜபாட்டை தந்த தோல்வி,அதன் பின்னர் மக்களிடம் கூறிய மன்னிப்பு,ஒரு உண்மை படைப்பாளியின் சமுகத்தின் மீதுள்ள  கோவம், இவை யாவும்  படத்தை பார்த்தவர்களை கன்னத்தில் அறைந்த முயற்சி தான் ஆதலால் காதல் செய்வீர்.

காதலை வரையறை இல்லாமல் பார்த்துவிட்ட நமக்கு இந்த படம் ஒரு முழுமுதல் தைரியமான படைப்பு. இந்த கால இலங்காதலை எந்த ஒரு சமாதானமும் இல்லாமல் திரையில் சிறு கவர்ச்சியான காட்சியமைப்பு கூட இல்லாமல் காதலின் காமத்தை திரையாக்கிய விதம் தான் படத்தின் முதல் வெற்றி.

சுசிந்தரன் தன்னை எப்படி பட்ட படைப்பாளி என்று இது வரை வந்த படங்களை காட்டிலும் இந்த படத்தின் உழைப்பு தான் மேலோங்கி இருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் முதலில் இந்த கால இளைஞர்கள், அவர்களுக்கு மிக நீண்ட படங்கள் கொடுக்க தேவையில்லை ஒன்றரை மணி நேரம் போதும் என்று முன் பாதி முக்கால் பின் பாதி முக்கால் மணி நேரம் தான் படம். ஆனால் பகிரப்பட்ட ஒன்று அந்த இளைஞர்களை பற்றி தான். கூடவே அவர்களின் முதிராத காதலை அவர்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்து கொள்வர் அதன் மூலம் விளையும் பின்விளைவு இவை யாவும் அடுத்து அடுத்து காட்சிகளாய் அடுக்கி கடைசியில் கண்களையும் உங்கள் மனதையும் இறுக்கி எழ முடியாமல் திரைஅரங்கை விட்டு வெளியே போகும் வழி தெரிந்தும் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடி செல்வீர்.

ஐந்து நிமிட பாடல் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். அந்த பாடல் ஏற்படுத்தும் பரிதாபம் எழுத தேவை இல்லை உணர்ந்தாலே போதும். கடைசியாய் இந்த படத்திற்கு  ஏன் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற பெயர் என்பதை சுசிந்தரன் தான் கூற வேண்டும் ஏனென்றால் எனக்கு தோன்றியது  "காதல் செய்வீர்? ஆதலால்..."  

என்றும் அன்புடன்,
ரசல்

No comments:

Post a Comment