Wednesday, December 30, 2015

பசங்க 2 - ஹைக்கூ

குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.

குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.

நன்றியுடன்,
ப.இரசல் 

Sunday, December 27, 2015

பூலோகம்

இந்த வருடம் கடைசியில் வந்தாலும் வரவேற்ப்பு சும்மா அள்ளுது. ஒரே காரணம் ஜனநாதன் அவர்களின் வசனம் என்ற காரணத்தோடு உள்ளே சென்றால். ஜெயம் ரவி ஆளே மாறி இருக்கார் படத்துக்கு. வெறும் உடல் பருமனை ஏற்றுவது மட்டுமல்லாமல் டான்சிங் பூலோகம் என்ற பேருக்கு ஏற்றார் போல் ஆங்கங்கே நடனம் ஆடுவதும், படம் நெடுக குத்து சண்டை வீரராக வருவது உண்மையில் அவரின் மென கெடல் புரிகிறது. 

படம் பார்த்துவிட்டு தான் தெரிந்தது இதில் ஸ்ரீகாந்த் தேவா இசை என்று. இசையும் பின்னணியும் படத்திற்கு பலம். முதல் பாதி விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாதி கருத்துக்களம். முதல் பட இயக்குனர் என்ற அடையாளமே இல்லாமல் உள்ளார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்டு நேர்த்தியான நெறியாடல். பாராட்டுக்கள்.

மக்களுக்கு இதை தான் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ஊடங்கங்கள் நினைத்தால் நமக்கு கிடைக்கும் செய்தி என்றுமே அரை வேக்காடு இல்லை ஒன்றுமே அப்படி நடக்கவில்லை என்பது தான். இந்த வருடம் தனிஒருவன் படமும் சரி பூலோகம் படமும் சரி ஒரே கருத்தை வெவ்வேறு கோணத்தில் கூறுகிறது. சபாஷ் என்று சொல்ல தெரிந்த நமக்கே ஊடங்கங்களை எதிர்த்து போரிட தெரியவில்லை.

உதாரணம் கூறவே முடியாத ம(றை)றக்கப்பட்ட செய்திகளை காட்டி தினம் நம்மை வீணடிக்கும் ஊடகத்திற்கு எதிராக மாற வேண்டியம் தருணம் இது என்பதை ஒருக்கணம் படம் பார்க்கும் போது ஏற்ப்பட்ட பாதிப்பு தான் படத்தின் வெற்றி.

வாழ்க பாரதம்,
ப. இரசல்