Sunday, December 21, 2014

பிசாசு

பிசாசு என் பார்வையில் கதை பற்றி அல்லநான் உணர்ந்ததை பற்றி

இரவின் மடியில் குற்றவியல் பின்னணியில்எடுக்க பட்ட படங்களை தந்த மிஷ்கினின்மற்றுமொரு பரிமாண படைப்பு இந்த பிசாசு.அழகிய பெண்ணின் கண்களில் இருந்துஆரம்பித்து ஆக்ரோஷ பிசாசு ஆட்டம் வரை,அனைத்தும் யாருக்கும் பிடிக்காது என்ற கூறமுடியாதுஇது பேய் படம் என ஆரம்பித்துமுடிவில் இது மக்கள் பேசும் படமாய்மாறிப்போவது எத்தனை அளவு நாம் அதில்உள்ளே போகின்றோம் என்பதை காட்டுகிறது.

இசையில் வயொலினின் இசை முக்கியம்என்பது ஆரம்பத்திலே உணர முடிந்தது,அதற்க்கேற்றார் போல் காட்சிகளின் தொகுப்புநாம் மிஷ்கின் படம் தான் பார்த்துகொண்டிருக்கிறோம் என்று ஆங்காங்கேஉணர்த்துகிறதுஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம்நான் பார்த்த திரைஅரங்கில் என்னை போலேசினிமா விரும்பிகள் தான் கைதட்டி படத்தைபாராட்டினர். அதை திரைஅரங்கில்பார்த்தவர்களை விட தொலைக்காட்சியிலும்dvd யிலும் பார்த்தவர்கள் தான் அதிகம்.ஆனால் இந்த படம்! அதிக திரையரங்குகள்! முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாய்!முதல் இரண்டு நாளில் பார்த்ததில் எனக்குமிகவும் மகிழ்ச்சி!

மிஷ்கின் உலக சினிமாவில் இருந்து கதையைதிருடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம்படம் பார்க்கும் போது தெரிந்தால் பேசலாம்.இன்று உலக சினிமாக்கள் எல்லாருக்கும்எல்லா வடிவத்திலும் பார்க்க முடிகிறது.ஆனால் தமிழ் மொழியில் இருண்டவிஷயங்களை இருளில் நமக்கேத்த வடிவில்கொடுக்க மிஷ்கின் போன்ற ஒரு சில கலைபடைப்பாளர்களே கொடுக்க முடியும்அது இந்தபடத்திலும் நிருபித்து உள்ளார்.

நடிப்பிற்கு புதிய முகங்கள் என்று கூற முடியாதஅளவு அனைத்து கதையின் நாயகர்களும்வாழ்ந்து காட்டி உள்ளனர்இங்கே நாயகர்கள்என அனைத்து கதாபாத்திரங்களையும் தான்கூறுகிறேன்இதில் காதல்,பாசம்,சமுக கோவம்என பல விஷயங்களை பதிவுசெய்திருக்கிறார்இசை ஆங்காங்கேமெல்லியதாய் ஒலித்து! ஒரு கட்டத்தில் என்இதய துடிப்பும்… அந்த ஓசையும்!! ஒன்றே!! எனஉணர்ந்தேன்ஒளி ஓவியம் என்று தான்ஒளிப்பதிவாளரை பதிய வேண்டும்அவருக்கென கலை இயக்குனரின் உழைப்பும்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இங்கே கதையை பற்றியும்! கதையில்சுவாரசியம் பற்றியும் பேசினால்! எங்கே நான்படம் பார்த்து அடைந்த திருப்தி… இதைபடிப்பவர்களுக்கு அமையக்கூடாது என்றுஎதுவும் கூறாமல் என்னை கவர்ந்த அந்தநாயகியின் கண்களை நினைத்து இந்தமிஷ்கினின் உழைப்பை ஒரு துளி ஆனந்தகண்ணீரில் முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
இரசல்

Sunday, December 14, 2014

லிங்கா - இது தலைவர் படம்



பிறந்தநாள் கொண்டாடும் தலைவர் தன் ரசிகர்களுக்கு கொடுத்த விருந்து தான் லிங்கா. கண்ணா இது ரஜினி படம் மத்த நடிகர்கள் படம் இல்ல. அதுனால இந்த படம் ரஜினி திரைப்படங்களில்  சிறந்த படமா இருக்குமா கேட்டா அத பத்தி உண்மையான ரஜினி ரசிகனுக்கு கவலை இல்ல. ஏன்னா கிட்டத்தட்ட இதுக்கப்புறம் அவர் படம் வருமான்னு நெனச்ச ரசிகனுக்கு நன்றி கடனா நடிச்ச படம் லிங்கான்னு தான் சொல்லணும். அத கூட வியாபார விமர்சகர்கள் ஈரோஸ்க்கு கோச்சடையான்ல ஏற்பட்ட நஷ்டத்துக்கு எடுத்த படம்ன்னு சொல்லி புறம் பேசறத கேள்வி பட்டேன். 

விமர்சனமே தேவையில்லாத ரஜினி படத்துக்கு எதுக்கு விமர்சனம். இது ரசிகனுக்கும் தலைவருக்கும் நடந்த ஒரு புரிதலுக்கான படமா தான் பாக்குறேன். ஒன்னு புரியல! ரஜினியை வைத்து அனிமேஷன் காமெடீஸ் சர்தார் காமெடிகளை விட அதிகம். அதே விஷயத்த தலைவர் ஸ்க்ரீன்ல பண்ணா! ஒத்துக்க முடியலன்னா? நீ உண்மையான ரஜினி ரசிகனே இல்ல. 

லிங்கால அற்புதமான கலை இருக்கு, அதுக்கு பின்னாடி வேலை செய்த சாபு சிரில் உண்மையிலே பாராட்ட பட வேண்டியவர். குறுகிய காலத்துல எடுத்த படத்துக்கு இப்படி ஒரு செட்! கண்டிப்பா இது தமிழ் திரைப்பட உலகம் பெருமை பட கூடிய விஷயம். தலைவர் வயச குறைத்து காட்டி படத்தை முழுமையாய் ஒட்டாமல் முக்கால்வாசி பிளாஷ் பாக்கள கதை கூறிய விதமும் பாராட்ட கூடியது. பெரிய நடிகர்கள் புகை மற்றும் சரக்கு அடிபதைபோல் நடிப்பதால் தான் இளைய சமுதாயம் கெட்டு போகிறது என்கிற விஷயத்தை ஏற்று கொண்டு சந்திரமுகியில் இருந்து இந்த படம் வரை அது போன்ற காட்சிகள் இல்லாமல் எடுதமைக்கும் பாராட்டலாம். மூணு மணி நேரம் தலைவர் குறும்பு,விவேகம்,வேகம்,சண்டை,கண்ணீர் மற்றும் முக்கியமாய் ஸ்டைலோட மொத்த படத்தையும் தோளில் சுமக்கிறார் அதில் இசை,எடிட்டிங் பற்றி யோசிக்க மறந்து போகிறது. ஆனால் ரத்தினவேலுவின் ஒளிபதிவு ஈர்க்கிறது.

இதெல்லாம் விட பின்னால் வரும் தலைவர் கூறிய வசனங்கள் யாவும் பொன்மொழியாய் பொன்குமரன் மற்றும் ரவிக்குமார் எழுத்துக்களில்.

> நான் எந்த வேலை செஞ்சாலும் அது புடிச்சா தான் செய்வேன் அதுல என் வேலை இருந்தா தான் காசே வாங்குவேன்.


>நாங்கெல்லாம் விடுதலை வீரர்கள் - ஹா.. எதிரிய அடிக்கறவன் தான் வீரன் கொள்ளை அடிக்கறவன் இல்ல

>என்னை ராஜாவா பாத்தீங்க,engineer அஹ பாத்தீங்க இப்போ சமைக்காரனா பாக்கிறீங்க... நாம எந்த வேல செய்யரோம்ன்னு முக்கியமில்ல அத புடிச்சி செய்றமா என்றது தான் முக்கியம்.

>எதிர் பாக்காதது நடந்தா தான் சுவாரசியம்..

>I havent failed i have postponed my success

>உன்ன நம் முன்னோர்கள் வைக்க வேண்டிய எடத்துல வைக்கல அதுனால நான் நிக்குறேன் 

>மன்னருக்கு தேவை மக்கள் துணை அந்த ஆண்டவன் அருளால அது என்னைக்குமே இருக்கு 

>ஒரு வேளை சாப்படலன்னா பரவலா.. ஒரு வேளை கூட சாப்படலன்னா

>ஒரு நாட்டுக்காக போராடுனா தான் விடுதலை உன் வீட்டுக்காக இல்ல 

>அரண்மனைல இருந்தா தான் ராஜாவா எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்து இல்லாதவங்களுக்கு இருக்கறதா கொடுக்கறவங்க எல்லாமே ராஜ தான்

>எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் நாம தூங்கற இடம் நம்ம உயரம் தான

இன்னும் பல இருக்கு இந்த ரஜினி படத்துல ரெண்டாவது தடவை பாக்க கூட. அடுத்த படம் எல்லா ரசிகனுக்குமான படமா இருந்தா இந்த படத்த மறந்துடுவாங்க, ஆனா இன்னிக்கி ரஜினி ரசிகனா அடுத்த ஷோவ்க்கு டிக்கெட் பாக்க ஆரம்பிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ரசல்

Friday, December 12, 2014

தலைவர் இருக்கிறார் மறவாதே!


நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கு தான் அந்த புகழாரம் சூட்டினோம். தலைவன் என்றால் MGR- தலைவர் என்றால் ரஜினி. மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தின் தலை எழுத்து. இன்னும் ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் இடம் பிடிக்கவே இன்றும் பல நடிகர்களின் பெயர் மூன்றெழுத்து தான். மக்கள் மனதில் இடம் பிடிக்க! மக்கள் தங்கள் படங்களை பார்க்க வர! எத்தனையோ உக்திகளை கையாண்டாலும்,  கடைசியில் இல்லை முதலில் இருந்தே மக்களின் மனதில் தோன்ற வேண்டும் இவன் நாளை தலைவன் என்று.

அது தான் இன்றைய தலைமுறைகளின் நாயகன் எங்களின் தலைவர் ரஜினிகாந்த். அன்று கதவை திறந்து வந்த முதல் காட்சியை மறக்கவில்லை நாங்கள் ஏன் என்றால் எங்கள் மனதின் கதவை திறந்து உக்கார்ந்த நாளாகவே நினைக்கிறோம்.

உன்னுடைய பிறந்தநாளுக்கு இதை விட பெரிய விருந்து எதுவும் கொடுக்க முடியாது,உனது லிங்காவை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவனாய்... 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே!!

Art by Bala
Written by Rasal