Saturday, July 11, 2015

பாகுபலி

பாகுபலி
அனைவருக்கும் தெரிந்த ராஜா கதை தான் ஆனால் 2015 ல் அதை பார்க்க ஏன் இந்த கூட்டம் அதான் ஒரு இயக்குனரின் வெற்றி. ராஜமௌளியின் பல திரைபடங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்த நேரம், மகதீரா போன்ற ஒரு படம் மீண்டும் மறுபதிப்பு செய்யமுடியாமல் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெற்றி அடைந்த தைரியம் தான், நான் ஈ திரைப்படம் தமிழில் தெலுகு மற்றும் பிற மொழிகளில்  வெற்றி பெற்றது. 



அப்படி இருக்க பாகுபலி எப்படி இருக்கிறது என்று கூற அனைவருமே இரண்டாம் பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் முதல் பகுதி கதையின் துவக்கம் மட்டுமே. சரி முதல் பகுதி எப்படி இருக்கிறது என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் அழுத்தமான கதையின் நெறியாடல் பார்த்த அனைவரையும் அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டது.

இப்படி ஒரு போர்கள காட்சி இப்படி பிரமாண்டமான கோட்டை இப்படி பிரமாண்டமான அழுத்தமான கதாபாத்திரங்கள் எல்லாம் சபாஷ் பேஷ் பலே. 

சத்யராஜ் என்னை பொறுத்தவரை இந்த பகுதியின் கைதட்டல்களை வெகுவாரியாக பெறுகிறார். என்ன ஒரு நடிப்பு திறமை அந்த நடிகனுக்குள். அடுத்து ரம்யா கிருஷ்ணன் அலட்டல் இல்லா நடிப்பு மிகவும் ஈர்க்கிறது. நாசர் போர்கள காட்சியில் கொடுக்கும் விதவிதமான முக பாவங்கள் அடடே அற்புதம். 

முக்கிய கதாபத்திரங்களை பற்றி திரையில் கண்டு கொள்ளுங்கள். அடுத்த பகுதி மிகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் இருக்க போகிறது, அப்பொழுது முன் பகுதியை விட்டுவிட்டோமே என்று தோன்ற கூடாது என்றால் திரையரங்கில் இந்த திரைபடத்தை கண்டுகளியுங்கள்.

பாகுபலி - தொடக்கம் - தொடரும் 

என்றும் அன்புடன்,
ப.இரசல்