Wednesday, December 30, 2015

பசங்க 2 - ஹைக்கூ

குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.

குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.

நன்றியுடன்,
ப.இரசல் 

Sunday, December 27, 2015

பூலோகம்

இந்த வருடம் கடைசியில் வந்தாலும் வரவேற்ப்பு சும்மா அள்ளுது. ஒரே காரணம் ஜனநாதன் அவர்களின் வசனம் என்ற காரணத்தோடு உள்ளே சென்றால். ஜெயம் ரவி ஆளே மாறி இருக்கார் படத்துக்கு. வெறும் உடல் பருமனை ஏற்றுவது மட்டுமல்லாமல் டான்சிங் பூலோகம் என்ற பேருக்கு ஏற்றார் போல் ஆங்கங்கே நடனம் ஆடுவதும், படம் நெடுக குத்து சண்டை வீரராக வருவது உண்மையில் அவரின் மென கெடல் புரிகிறது. 

படம் பார்த்துவிட்டு தான் தெரிந்தது இதில் ஸ்ரீகாந்த் தேவா இசை என்று. இசையும் பின்னணியும் படத்திற்கு பலம். முதல் பாதி விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாதி கருத்துக்களம். முதல் பட இயக்குனர் என்ற அடையாளமே இல்லாமல் உள்ளார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்டு நேர்த்தியான நெறியாடல். பாராட்டுக்கள்.

மக்களுக்கு இதை தான் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ஊடங்கங்கள் நினைத்தால் நமக்கு கிடைக்கும் செய்தி என்றுமே அரை வேக்காடு இல்லை ஒன்றுமே அப்படி நடக்கவில்லை என்பது தான். இந்த வருடம் தனிஒருவன் படமும் சரி பூலோகம் படமும் சரி ஒரே கருத்தை வெவ்வேறு கோணத்தில் கூறுகிறது. சபாஷ் என்று சொல்ல தெரிந்த நமக்கே ஊடங்கங்களை எதிர்த்து போரிட தெரியவில்லை.

உதாரணம் கூறவே முடியாத ம(றை)றக்கப்பட்ட செய்திகளை காட்டி தினம் நம்மை வீணடிக்கும் ஊடகத்திற்கு எதிராக மாற வேண்டியம் தருணம் இது என்பதை ஒருக்கணம் படம் பார்க்கும் போது ஏற்ப்பட்ட பாதிப்பு தான் படத்தின் வெற்றி.

வாழ்க பாரதம்,
ப. இரசல்

Saturday, July 11, 2015

பாகுபலி

பாகுபலி
அனைவருக்கும் தெரிந்த ராஜா கதை தான் ஆனால் 2015 ல் அதை பார்க்க ஏன் இந்த கூட்டம் அதான் ஒரு இயக்குனரின் வெற்றி. ராஜமௌளியின் பல திரைபடங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்த நேரம், மகதீரா போன்ற ஒரு படம் மீண்டும் மறுபதிப்பு செய்யமுடியாமல் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெற்றி அடைந்த தைரியம் தான், நான் ஈ திரைப்படம் தமிழில் தெலுகு மற்றும் பிற மொழிகளில்  வெற்றி பெற்றது. 



அப்படி இருக்க பாகுபலி எப்படி இருக்கிறது என்று கூற அனைவருமே இரண்டாம் பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் முதல் பகுதி கதையின் துவக்கம் மட்டுமே. சரி முதல் பகுதி எப்படி இருக்கிறது என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் அழுத்தமான கதையின் நெறியாடல் பார்த்த அனைவரையும் அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டது.

இப்படி ஒரு போர்கள காட்சி இப்படி பிரமாண்டமான கோட்டை இப்படி பிரமாண்டமான அழுத்தமான கதாபாத்திரங்கள் எல்லாம் சபாஷ் பேஷ் பலே. 

சத்யராஜ் என்னை பொறுத்தவரை இந்த பகுதியின் கைதட்டல்களை வெகுவாரியாக பெறுகிறார். என்ன ஒரு நடிப்பு திறமை அந்த நடிகனுக்குள். அடுத்து ரம்யா கிருஷ்ணன் அலட்டல் இல்லா நடிப்பு மிகவும் ஈர்க்கிறது. நாசர் போர்கள காட்சியில் கொடுக்கும் விதவிதமான முக பாவங்கள் அடடே அற்புதம். 

முக்கிய கதாபத்திரங்களை பற்றி திரையில் கண்டு கொள்ளுங்கள். அடுத்த பகுதி மிகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் இருக்க போகிறது, அப்பொழுது முன் பகுதியை விட்டுவிட்டோமே என்று தோன்ற கூடாது என்றால் திரையரங்கில் இந்த திரைபடத்தை கண்டுகளியுங்கள்.

பாகுபலி - தொடக்கம் - தொடரும் 

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

Sunday, June 7, 2015

காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம்

காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம் 



இவ்ளோ தான் நமக்கு தெரிஞ்சதுன்னு படத்த போய் பார்த்தா குப்பத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை எட்டிப் பார்த்தது போல படம் நகர்கிறது.
என்னடா குப்பத்து வாழ்க்கைய இது வரைக்கும் காட்டாத ஒன்னையா காட்டிடாங்க அப்படின்னு கேட்டா? ஆமா உண்மைதான் அப்படிதான் மொத்த படமும் இருக்கு. வெறும் பாஷையை மட்டும் அல்ல உடல் மொழியும்.

கடைசிவரைக்கும் குட்டிபசங்களை சின்ன காக்காமுட்டை பெரிய காக்காமுட்டைன்னு தான் ஞாபகம் இருக்கு. எதார்த்தம் மாறாத அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா , பொண்ணுகிட்ட விஷயம் இருக்கு. ஆனா இந்த குட்டி பசங்களுக்கு இது தான் முதல் படம், எப்படிப்பா நீங்க நடிசீங்கன்னு சொல்றது. அப்படியே இருக்கீங்களே தம்பிகளா. உங்ககிட்ட கத்துக்கணும்னு நினைக்கிறேன்.

ஊரே படத்த கொண்டாடுது அதான் தமிழ் ரசிகர்கள். புடிச்சா கொண்டாடுவாங்க. இயக்குனர் மணிகண்டன் சிகரம் தொடுவார் என்ற அச்சமில்லை. இடியென இறங்கும் உண்மையின் வலி நெஞ்சத்தை கேள்வி கேட்க வைக்கிறது அதான் உண்மை சினிமா. பாலுமகேந்திராவும் பாலச்சந்தரும் இருந்திருந்தால் என்ன கூறி இருப்பார்கள் என்று யோசிக்கிறேன். நிச்சயம் கட்டிப்புடித்து பாராட்டி இருப்பார்கள் இயக்குனரை. அதனால் தான் என்னவோ பாரதிராஜா தேசியவிருது தேர்வாளர்களில் ஒருவராய் இருந்துள்ளார்.

pizza சாப்பிடனும்னு தோனுச்சினா இந்த படம் கண்டிப்பா ஞாபகம் வரும் ஒவ்வொரு தடவையும்.

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

Monday, May 18, 2015

புறம்போக்கு எனும் பொதுவுடைமை - என் பார்வையில்



ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகு சில தெரிய வேண்டியவற்றை ஓரளவேனும் புரிந்த பின்எழுத ஆரம்பிக்கிறேன். திருவள்ளுவர் பொதுவுடைமை(communism) பற்றி எழுதி இருப்பாராஎன்று ஒரு கேள்வி எழுந்தது அதற்க்கான தேடுதலில் கிடைத்த குறள்

அதிகாரம்: கொல்லாமை குறள்:322
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"

Macaulay வகுத்த IPC(Indian Penal code) மூலம் இந்திய அரசாங்கம் குற்றவாளிகளுக்குதண்டனைகள் இன்றும் கொடுத்து வருகிறது. அப்படி குற்றவாளிகளுக்கு கண்டிப்புடன் தண்டனைகள் வழங்க வேண்டுமென நினைத்த Macaulay தான் காவல் துறை அதிகாரியாகவரும் ஷ்யாம்'ன் பெயர். இதனால் கதாபாத்திரத்தின் செயல்கள் கண்டிப்பாகவும் கடமை உணர்வுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஷ்யாமின் நடிப்பு திறமை இந்த கதாபாத்திரத்தின் மூலம் மெருகேறி உள்ளது.

பாலு என்கிற கதாபாத்திரத்தில் ஆர்யா. மக்களுக்காக ஆயுதம் ஏந்திய போராளி. இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் குப்பைகளை அனுமதிக்க கூடாது என்ற பிரச்சரரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க இந்திய ரானுவத்திர்க்கே மனித வெடிகுண்டாய் மாறிய போராளியின் கதாபத்திரம் இந்த பாலு. சமிபத்தில் படித்த ஒரு சில செய்திகள் தான் ஞாபகம் வந்தன அயல்நாட்டு குப்பைகளை கொண்டு வந்து அழித்திட இந்தியா என்ன குப்பை தொட்டியா? ஆனால் மக்களுக்காக போராடுபவன் போராளி அவன் அழிந்தால் தான் மக்களுக்கே நிம்மதி என தூக்கு தண்டனை விதிக்க பட்ட குற்றவாளி இந்தபாலு. ஆர்யாவின் நடிப்பு திறமையில் சந்தேகமே இல்லை அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

எமலிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கொலை செய்பவன் கொலையாளி அப்படியென்றால் தூக்கு தண்டனையை நிரவேற்றுபவன் கொலையாளி தானே. இப்படிஒரு கதாபாத்திரம் இது வரை திரைப்படங்களில் காட்டப்படாதவை. அதுவும் ஒருகுற்றவாளி முகத்தை மூடும் போது என்னை யாருமே நம்பவில்லை நீயாவது நம்பு நான் நிரபராதி என்று கூரியவனையே தூக்கிலிடும் துயரம் சொல்லமுடியாதது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு எவராலும் நிறைவாய் தந்திருக்கமுடியாது. உண்மையில் ஷ்யாமையும் ஆர்யாவையும் விட ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.

எஸ் பி ஜனநாதன் communism பற்றி இதற்க்கு முன் ஈ மற்றும் பேராண்மையில் நன்றாகவேகூறி இருப்பார். அதே பாணியில் இந்த படமும் இருக்கிறது ஆனால் சிறு தடையாக முதல்மூன்று பாடல்கள் நெருடலாய் போனது. பின் பாதியில் முழுமையாய் பார்ப்பவர் மனதில்அழுத்தம் திருத்தமாக தனியுடமை விட பொதுவுடைமை பற்றி கருத்துகளை பதிவிறக்கம்செய்கிறார். சிறைசாலையில் நகரும் கதையில் முன்புவந்த படங்களை போல் அல்லாமல் ஒவ்வொரு காட்சிகளும் அளந்து எடுக்கபட்டுள்ளன. அதிலும் ஒரு இடத்தில் தவறு செய்தான் என்று தான் தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கிறோம், அங்கும் துன்புறுத்தல் நடந்தால் அது தவறு என்று ஆர்யா ஜெனிவா ஒப்பந்தத்தை சுட்டி காட்ட அதற்க்கு ஷ்யாம் துன்புறுத்த கூடாது என்று தான் இருக்கிறது ஆனால் தண்டனை கொடுக்கலாம் என்று இருட்டறையில் சாப்பாடு இல்லாமல் அடைக்க உத்தரவிடும் இடம் யோசிக்க வைக்கிறது. ஏனென்றால் அந்த கைதி எட்டாவது முறையாக தப்பிக்க முயற்சி செய்ததால் கசையடி கொடுத்து கொண்டிருந்த போது நடந்த உரையாடல் அது. இப்படியாக படம் நெடுக சிறை அரசியல் மற்றும் தவறுகளின் சுட்டிக்காட்டுதல்கள். கார்த்திகா நாயர் போராளியாக நடித்திருந்தாலும் இந்த படத்திற்கு ஏற்றவாறு உள்ள கதாபாத்திரமாக தெரியவில்லை. பெண் போராளி இன்னும் கூட அர்த்தமுள்ளவராக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.

கலங்கிய நெஞ்சத்துடன் திரைஅரங்கை விட்டு வெளியே வந்த எனக்கு இந்த திரைப்படமும் பேசப்படவேண்டும் என்பது என் கருத்து.

பொதுவுடைமை பற்றி மேலே கூறிய குரலின் அர்த்தத்தையே வைத்து இந்ததிரைபடத்தின் பார்வையை முடிக்கிறேன்.

உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமேஇல்லை.

என்றும் அன்புடன்,
ப.இரசல்

ஓகே கண்மணி - என் பார்வையில்

ஒரு முறை என்னுடைய whatsapp status "காதலை காதலால் தவிர காதலாய் கூற முடியாது" என்பது தான். அதை எப்படி கூறுவது காதல் இனிமையானது என்பதை தவிர. ஆதாம் ஏவாள் காதலை தொடங்கி வைத்தனர் எனபது மட்டும் தான் உண்மை. அட யாருக்கு தான் இல்லை காதல்... இப்படி அடுக்கி கொண்டே போய் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் காதலை திரையில் கண்டால் பொங்குவது மகிழ்ச்சியா கண்ணீரா. ஆம் இரண்டும் கலந்தது தான் அது. அப்படி பட்ட காதலின் மற்றுமோர் பரிமாணத்தை கண்டேன் ஓ காதல் கண்மணி படத்தில்.



மணிரத்தினம்... இன்றுவரை சொல்லாத காதலை.. சொல்லத்தான்.. உருவாக்கத்தின் எல்லையாய் இருந்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு கவிதையோடு கூறி இருக்கிறார். ஓகே கண்மணி என்று கூறும் ஓவ்வொரு நொடியும்.. நமக்கு நாமே கூறி கொள்ளும் ஓகே கண்மணி..ஒன்னும் இல்லை எல்லாம் நலமே என்பது தான். அடடா செதுக்கல்கள் எல்லா இடத்திலும் எல்லா காட்சியின் ஓட்டத்திலும். காதல் கரை உடைந்து ஓடுகிறது. இன்றைய கால கட்டத்தில் மேலை நாடுகளின் தழுவலை கொண்டு இந்தியாவில் எதிரொலிக்கும் கலாசார மாறுபாடு தான் இந்த ஓகே கண்மணி.

அதை கூட எந்த ஒரு சமரசம் இல்லாமல் வார்த்தைப் பேழையோடு ஜாலம் செய்திருக்கிறார் மணிரத்தினம். குடும்பத்தோடு பார்க்கும் படம் அன்று என்று கூறும் அனைவருக்கும் கூறி கொள்ளும் ஒரே பதில் முதலில் திரை அரங்கிருக்கு வாரும் பின் பேசி கொள்வோம். இன்றைய சமுதாயம் மௌனராகம்,இதயத்தை திருடாதே,அலைபாயுதே அன்று, அது ஓகே கண்மணி என்று புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

ஏ ஆர் ரஹ்மான் இசை கவர்ந்தது முதலில். ஆனால் படத்தை கண்டபின் அது பீ சீ ஸ்ரீராம்,ஏ ஆர் ரஹ்மான்,மணிரத்தினம் கூட்டணியின் எல்லை இல்லா உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் என்பதை உணர்ந்தேன். 

நடிகர் நடிகையர் என்று வரை பிரிக்க முடியாமல் ஒவ்வொருவரும்  தங்கள் நடிப்பு திறமையால் உயிர் ஊட்டி உள்ளனர் இந்த படத்திருக்கு.

ஓகே கண்மணி திரைப்படம் ஒரு காலப்பெட்டகம் எப்போது காதலை பூரித்து கொள்ள நினைக்கிறீர்களோ அன்று மீண்டும் உங்கள் கானொளியில்.

என்றும் காதலுடன்,
ப.இரசல் 

Monday, March 23, 2015

வாழ்க்கைப் போர்! - கவிதை


எழுத துடிக்கும் கைகளுக்கும் 
வார்த்தைகளை தேடிகொண்டிருக்கும் புத்திக்கும் 
இடையே போர்!

முதல் போர்!
கடந்த காலம் தரும் நினைவுகளை சுமந்து..
சுவுடுகளை மறைக்கும் தவறுகளின் சீர்திருத்தம்!
காதலில்லை உலகிலென 
கண் துருத்தி பார்த்தால்! 
மடை திறந்தார் போல் ஊற்றுகிறது வீதிக்கோர் காதல் 
விளக்கதிற்கோர் காதல், போட்டிக்கொரு காதல் 
உணர்விர்க்கோர் காதல்... அது பச்சை பசேலென தழைத்திருந்தது..
நடக்கும் பாதையில் புத்துணர்வு பிறந்தது
ஆனால் வாடியவை கண்டு வெதும்பியது...

இரண்டாம் போர்!
நிகழ்காலம் தந்து கொண்டிருக்கும் சுவாரசியங்களில் 
கால மாற்றம் தரும் ஆச்சரியங்களின் சீர்திருத்தம்!
சுமையென கருதும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்!
பணி சுமை, உடல் சுமை, தேடல் சுமை 
வாழ்க்கை சுமை, வாழ்வாதாரம் சுமை 
ஆனால் பாசமெனும் சுமை அனைத்தையும் கட்டிக்கொண்டது!
வாழ்க்கையில் தெளிவு இருந்தது இன்றைய நாள் போனதென்று.. 
ஆனால் இழந்தவை கண்டு வெம்பியது..

மூன்றாம் போர்
எதிர்காலம் புரியாமல் எதை நோக்கி என்றும் தெரியாமல்..
கடந்தவை மீண்டும் பெறமுடியாது என்று விளங்கியும்!
சேமிப்பு ஒன்றே வாழ்வாதாரம் எனும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்
பண சேமிப்பு, இடம் சேமிப்பு, மருத்துவ சேமிப்பு 
கல்யாண சேமிப்பு, களிப்பு சேமிப்பு, வீடு சேமிப்பு 
ஆனால் அவை திட்டமிடலின் பரஸ்பரம் 
வருமானம் சேமிக்கலாம்.. வளமாகவும் இருக்கலாம்!
ஆனால் இரண்டாம் போர் கருதி ஏங்கியது!

http://www.chillzee.in/poems-link/207-p-rasal-kavithaigal/4177-vazhkkai-por

இப்படிக்கு,
ப.இரசல் 

பார்த்திபனின் பார்வதி - சிறுகதை


மேகம் ஜல்லடையில் நீர் ஊற்றி மழையென பூமாரி கொண்டிருக்கும் ஜான் எப் கென்னெடி விமான நிலையம் நோக்கி... வான் வாய்க் எக்ஸ்பிரஸ்வேயில்  வேகமெடுத்து ஓடி கொண்டிருந்த மகிழுந்தில் பார்வதியும் பார்த்திபனும் உரையாடி சென்று கொண்டிருந்தனர்.

“உனக்கு நினைவிருக்கிறதா! அதோ.. இரண்டு வருடங்கள் முனனால்.. நம்மால் எதிர்கொள்ளவே முடியாமல் போன ஒரு சந்தர்ப்பம். அப்போது கூட நீ கூறினாயே.. பரவாயில்லை பார்த்துக்கலாம்!!” என்று வினவினான் பார்த்திபன்.

“என்ன அப்படி நான் மறந்துட்டேன்!! நீங்க தான் எல்லாவற்றையும் ஞாபகம் வச்சிருப்பீங்களா என்ன?. இப்போ எதைப் பத்தி சொல்றீங்க!” என்றாள் பார்வதி.

“சத்தியமா சொல்றேண்டி.? என்னை பொறுத்த வரைக்கும் உனக்கு ஞாபக சக்தி குறைவு தான்... சரி! ரெண்டு clue தரேன். இப்போ சொல்லு பார்க்கலாம். அன்றைக்கு நீ தனியா வர பயந்த! நான் இருக்கேன்... வான்னு சொன்னேன். என்ன கண்டுபிடிச்சியா!” என்று குறும்புப் பார்வையுடன் கேட்டான்.

“இல்லங்க!! நீங்க எத சொல்றிங்க! ஒரு நாள் ஆபீஸ்ல ஒருத்தன் என்னை தொந்தரவு பண்றான்.. அவன் என்னை ஒரு இடத்தில மீட் பண்ணனும்னு சொன்னான்.. அதுவா!.” குழப்பப் பார்வையில் கேட்டாள்.
     
     “இன்னும் சொல்லுடி.. அன்று நானும் உன் கூடவே அந்த இடத்திற்கு வந்திட்டு!!! அவனைத் துரத்திட்டு அதே இடத்துல நாம ரெண்டு பேரும் romance பண்ணிவிட்டு வந்தோமே...  அதான பாரூ செல்லம்”. என்றான் பார்த்திபன்.

“அப்போ அது இல்லையா!” என்ற குழம்பிய கண்களுடன் அவனை  நேராய் பார்த்து என்னவென்று அறிய சற்று காதலுடன் பார்க்கத் துவங்கினாள்.
     
    “ஏய்! ஆய்! அப்படி பார்த்தா கண்டு பிடிச்சிடலாமா என்ன? சும்மா முழிக்காத யோசி!” என்று ஆதே கலகலப்புடன் குறும்பாய் அவள் காதுகளில் தன் விரல் ஸ்பரிசம் தந்தான்.

“சமாளிக்க முடியாத பிரச்சனை.. நம்ம கல்யாணம் தான்!!.. அதுக்கும் அதே தான் நான் சொன்னேன்!! நீங்களும் அதான் சொன்னீங்க!! கண்டிப்பா நீங்க அத பத்தி சொல்லலன்னு மட்டும் தெரியுது...” சிமிட்டிய கண்களுடன் அவனை பார்த்துக்கொண்டே அவளுடைய பேச்சைத் தொடர்ந்தாள்.

“அப்புறம்....”

“எனக்கு பிரசவ வலி வந்தப்ப... நீங்களும் முதல்ல எதுவுமே பேசல.. நானும் வலியிலே அழுவுறேன்... ஆனா என்னோட அழுகையை பார்த்துட்டு.. கையை பிடிச்சிக்கிட்டு நான் இருக்கேன்னு சொன்னீங்க!! ஆனா!! சுகப்பிரசவம் கஷ்டம்ன்னு சொல்லி.. உங்களையும் விட்டுவிட்டு என்னை மட்டும் ஆபரேஷன் தியட்டர் கூட்டிட்டு போனாங்க. அய்யோ!......வலியோடு ஒரு குழ்ந்தை பிரசவத்திற்கு உள்ளே போறதுக்கு முன்னாடி இன்னொரு குழந்தையாய் உங்களை விட்டுட்டு போனேன்!”, என தொடர்ந்தாள் பார்வதி.

     “சத்தியமா நான் மறந்துட்டேன்.. இப்போ சொல்லுங்க.. நீங்க எதையும் மறக்க மாட்டீங்க.. ஒத்துக்கிறேன்...” என முனக ஆரம்பித்தாள்.

     “சொல்லி முடிச்சிட்டியா எல்லாத்தையும்??? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?” அவன் வினவ. அவள் பூமுகம் மலர புன்னைகையுடன் கண் சிமிட்டி “ஆமாம்” என்றாள்.

     பார்த்திபன் தொடர்ந்தான், “இதுவரைக்கும் நம்ம வாழ்கையில நடந்த எல்லா சுவாரசியமான விஷயத்தை சொல்லிட்ட... ஆனா... கசப்பான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டியே... காதல், கல்யாணம், குழந்தையை தாண்டி... “பிரிவு” நாம் ரெண்டு பேருமே சந்திக்க முடியாத ஒண்ணா இருந்திச்சி.. இல்லையா!

அவள் அவனை நேர்முகமாய் உற்று நோக்கினாள்.

     “அமெரிக்கா போகிற வாய்ப்பு வந்த பிறகு உன்னை விட்டுட்டு எப்படி போறதுன்னு தெரியாம கடைசியில் எப்படியோ உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி வந்து உன்கிட்ட சொன்னா. எனக்கு தனியா வர பயமா இருக்குன்னு சொன்ன... நான் இருக்கேன் நீ வான்னு சொல்லி..  உன்னை இங்கு அமெரிக்காவிற்கு கூட்டிட்டு வந்தேன்..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்.

“ஆமாங்க!! உண்மை தான் அந்த நேரத்துல அப்படி ஒரு முடிவு நாம எடுக்காம இருந்திருந்தா ரெண்டு பேருக்குமே ரொம்ப கஷ்டம் தான்..” என்று முடித்தாள் பார்வதி.

பார்த்திபன் சற்று முகத்தை சுருக்கி தொடர்ந்தான் “சரி! இப்போ ஏன் கேட்டேன் தெரியுமா?  அப்படி பட்டப் பிரிவு நம்மை வாட்ட கூடாதுன்னு சொல்லுகிற நாம்.........

இதோடு பிரியப்போறோம்..
     
     முழுதும் அமைதி நிலவியது மகிழுந்தின் வெளியே சாரலும் அடங்கி போனது. உள்ளே பின்புற இருக்கையில் கண்கள் கலங்கிய நிலையில் பார்த்திபன் மட்டும்... மனதில் மீண்டும் தொடர்ந்தான்.

“தேங்க்ஸ் பார்வதி.. உன்னோட நினைவுகளோட.. என்னால் முடிந்தவரை வாழ்ந்து விட்டேன்.. இதுக்கும் மேலே நீ சந்தோஷமா தான் இருக்கேன்னு தெரிந்தபிறகு.. என்னோட புதிய வாழ்க்கையை தேடிப்போறேன் இந்தியாவுக்கு. இந்த இரண்டு வருடம் நான் ஒரு வாழ்க்கைத்துணையாய் எப்படி இருக்க வேண்டுமென உன் நினைவுகளில் கற்றுக்கொண்டேன்.” என்று முடித்தான் விமான நிலையம் அடைந்ததை அறிந்து.

இரண்டு வருடங்களுக்கு முன்னால்...

பார்வதி பார்த்திபனை விட்டுவிட்டு தன் குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்தாள். அவர்களின் கடைசி உரையாடல்.

அன்று...

     “இந்த காதல் பிரிவு ரொம்ப கஷ்டமா இருக்கு பார்வதி!.. ப்ளீஸ்!! என்ன விட்டு விட்டு போறது.. உனக்கும் அப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் இருக்கிறேன் உன்னை பத்திரமாப் பாத்துக்குவேன்.” என்றான் பார்த்திபன்.

     “இதற்கும் மேலே உன்னை காயப்படுத்த முடியாது. எனக்காக காத்திருன்னு பொய் சொல்லவும் விரும்பல.. வலிக்கும் தான் பரவாயில்லை பார்த்துக்கலாம்...” என்று கூறி நடந்தாள் பார்வதி .

இன்று...

ஜான் எப் கென்னடி விமான நிலையம் உள்ளே போகும் முன்.. பார்த்திபன் தன்னுடைய facebookஇல்

“Coming back to India is like coming back from dream to reality. @John F Kennedy Airport”
Facebook பக்கம் புதிதாய் ரெப்ரெஷ் செய்து பார்த்திபனின் newsfeed இல் status க்கு கீழ்

தன் கணவனின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு செய்திருந்தாள் பார்வதி..

“நம்பிக்கையில்லா வாழ்கையில்
உன் கை கொடுத்து தன்னம்பிக்கை கொடுத்தாய்
இன்று உன் மனைவியாய்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசை கணவா! இது கனவா!”

காதலுடன்,
பார்வதி.

-முற்றும்-


Title Design: Bala Krishnan

எழுத்தும் உணர்வும்,

ப.இரசல்

Thursday, March 12, 2015

ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை


முதல் திரைப்படம் வீட்டில உள்ள dvd வெளியிடு. C2H Cinema 2 Home பெயர் சூட்டப்பட்டதிலே விளக்கம் உள்ளது. அதுவும் போக இது சேரனின் படம். ஐம்பது ரூபாயில் திரைப்படம் உங்கள் வரவேற்பறையில்  டிஜிட்டல் 5.1 ஒலியில். 



விமர்சனங்களால் வர்ணிக்கபட்டவர் சேரன் அவருடைய முந்தைய படங்கள் மற்றும் தேசிய விருதுகள் அதற்க்கு எடுத்துக்காட்டு. சமுதாய சீர்திருத்த நோக்கோடு தான் படங்கள் இருக்கும் ஆட்டோகிராப் படம் தவிர்த்து. வசனங்கள் குறிப்பாய் படத்தின் இறுதியில் ஈர்ப்பாய் இருந்து மக்களை யோசிக்க விடும். இப்படி இருந்த சேரனின் ஆட்டோகிராப் பிந்தைய படங்கள் வணிக ரீதியாக ஓடவில்லை என்றாலும் நல்ல கருத்துகளை தாங்கி நின்றது. ஆனால் அவருடைய கடைசி முயற்சி theatre இல் ரிலீஸ் பண்ண முடியாமல் போனது தமிழ் திரைஉலகம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம். ஏனென்றால் இப்போது distributors கையில் தான் ஒரு படம் வரும் வராது என்ற நிலை உள்ளது. சேரன் நடித்த ஆடும் கூத்து என்ற திரைப்படம் தேசிய விருது வாங்கிய படம் திரையரங்குக்கு வராமலே ஜீ தொலைகாட்சியில் வெளியிட பட்டது என்பதே எனக்கு சமிபத்தில் தான் தெரியும். இப்படி முடக்க பட்ட பல திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தன்னுடைய படத்தில் இருந்தே ஆரம்பித்த சேரனுக்கு முதற் கண் நன்றிகள்  மற்றும் வாழ்த்துக்கள்.

ஜே கே திரைப்படம் சேரனின் மற்ற படங்களில் இருந்து இந்த கால சூழ்நிலையில் உள்ள மக்களை குறிவைத்து உருவாக்க பட்ட படம். சற்று தாமதம் ஆனதாலும் அதை பற்றி அதிகம் வலைதளங்களில் பேச பட்டதாலும் சில நேரம் ஏன் இந்த காட்சியை வைத்தார் என கேள்வி கேட்க தோனுகிறது. உதாரணம் நாம் facebook பற்றி அதிகம் படங்களில் பார்த்தது தான். கதை ஒரு நண்பன் தன்னை சுற்றி உள்ளவர்கள் அதாவது பெற்றோர்,தம்பி,தங்கைகள் மற்றும் நண்பர்களுக்காக பணம் சம்பாதிக்கும் ஒரு நலம் விரும்பி அது ஏன் என்பது மட்டும் தான் படத்தின் சுவாரசியம் அதுவும் படத்தின் போக்கில் யூகிக்க முடிகிறது. ஆங்காங்கே பளிச் வசனங்கள் சில காட்சிகளில் நாம் எதை பார்க்க தவருவோமோ அதை சுட்டி காட்டியும் உள்ளார். discovery தொலைக்காட்சி சொல்லும் பறவைகள் கதை உண்மையில் யோசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இல்லை என்றாலும் அனைத்தும் காட்சி கோர்வைகளாய் தான் இருந்தன. சிறிய திரையில் பார்ப்பதால்  ஒளிப்பதிவு பற்றி விளக்க முடியவில்லை. எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அது போலவே இருந்தது. மொத்தத்தில் முயற்சியை பாராட்டும் அளவிற்கு திரைப்படம் பாராட்டும் அளவு இல்லை. ஆனால் சமுதாய கருத்துக்கள் கூற இதிலும் தவறவில்லை.

நன்றி சேரன் 

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

Thursday, February 26, 2015

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்


வித்தியாசமான முயற்சிகள் பாராட்டப்படவேண்டும். இன்ஜினியரிங் படிக்கறப்ப மொபைல் communication பாடத்துல வராத ஈர்ப்பு இந்த படத்த பாக்கறப்போ வந்திச்சி. நாலு கதையா இல்ல மூணு கதையான்னு சொல்லத் தெரியவில்லை. ஆனா எல்லாத்தையும் சேர்க்கற ஒரே விஷயம் மொபைல். ஒவ்வொரு கதையமைப்பும் அதன் சுவாரசியமும் வித்தியாச பட்டிருக்கு. அதன் மூலம் படம் விரைவாக உள்ளது போலவே உணரப்படுகிறது.

நகுல் கதாபாத்திரம் தான் முழுக்க முழுக்க ஒரு பொறியியல் மாணவனாக என்னை ஈர்த்தது. முழுக்க முழுக்க தொழில்துறையை பற்றிய சிம்போசியம் பார்த்த மாத்ரி இருந்தது. நகுலின் அம்மாவாக ஊர்வசி அதே ஊர்வசி தான். அதிலும் கடைசியில் அவருக்கும் எப்படி இதெல்லாம் தெரியும் என்று கூறும்போது நம்மையும் மீறி சிரிக்க தவறமாட்டோம்.

தினேஷ் பிந்து மாதவி காதல் இன்னுமொரு பரிமாணம் காதல் வந்த இடம் புதுமை. சதீஷின் காதல் கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும் அறிமுக காட்சியும் மொபைல் திருடனிடம் பேசும் வசனங்கள் காமெடி ரகம்.

ராம் பிரகாஷ் ராயப்பா தமிழ் திரையுலகில் நல்லதொரு ஆரம்பத்தோடு வந்திருக்கிறார். வரவேற்க்கிறோம் வாழ்த்துக்களுடன்.

என்றும் அன்புடன்,
ரசல் 

Thursday, January 29, 2015

பிரிவில் காதல் - கவிதை



உன் பிறந்தநாளுக்கு நாம்...
காதலிக்கும் பொழுது
நீ ஓர் இடத்தில் நான் ஓர் இடத்தில்!
நினைத்தாலும் பார்க்க முடியாது?
பிரிந்த பின்
நினைத்தும் பார்க்க முடியாது..
நாம் ஓர் இடத்தில்..
இப்படிக்கு,
நீயும் நானும்

Tuesday, January 20, 2015

உருவமில்லை உணரமுடியும் - சிறுகதை - Short Story

இது ஒரு போட்டிக்கான பதிவு. இதில் ஆறுதல் பரிசு கிடைத்தது இந்த கடவுளை பற்றிய தலைப்பில் எழுதிய கதைக்கு. நன்றி கதை தேர்வாளர்களுக்கும் என் நண்பர்களுக்கும்.

http://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3822-uruvamillai-unaramudiyum-2015-potti-sirukathai-60

"உலகின் நிலை மாறுபாட்டால் ஒவ்வொரு முறையும் பஞ்சபூதங்களின் ஒன்றால் பேரழிவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலும் அழிவை நோக்கி தான் போய்கொண்டிருக்கிறது. கடவுள் காப்பாற்றி விடுவார் என்ற கால பேச்சு மாறி உன்னை நீயே தான் காப்பாற்றிகொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தனை கொள்ள வேண்டும்" என்று சுற்றுபூர சூழல் மாசுபாட்டை பற்றிய பேச்சை முடித்தார் சமுக ஆர்வலர் திரு.அருணகிரி அய்யா அவர்கள். கைதட்டல்கள் பலமாய் ஒலித்திட மேடையில் இருந்து இறங்கி தன்னுடைய இரு சக்கர வாகனம் நோக்கி நடந்து சென்றார்.
 
அவர் பின்னரே கூட்டத்தில் இருந்து ஓடிவந்த பெருமாள் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தன்னை ஒரு பகுதி நேர அர்ச்சகர் என்று அறிமுகம் செய்து கொண்டான். பார்க்க படித்த பட்டதாரி ஆனால் பகுதி நேர ஊழியம் அர்ச்சகராய் என்ற மனதில் ஓடிய கேள்வியால் "ஹ்ம்ம் சொல்லுப்பா என்ன கேள்வி?" என்று வினவினார்.
 
பெருமாள்  அவரிடம் "உங்களுக்கு கடவுள் பக்தி இருப்பது போல் தெரிகிறது.. ஆனால் உங்கள் பேச்சு முற்போக்கு சிந்தனையாளரை போல தோன்றுகிறது".
 
அருணகிரி பதிலளித்தார் "உண்மை தான் எனக்கும் கடவுள் பக்தி இருக்கிறது ஆனால் என் பேச்சு மக்கள்சுற்றுபூரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அதனால் அந்த உதாரணம் கொடுத்தேன்" என்றார்.
 
பெருமாள் அமைதியாக "உங்களிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி இதுதான்.. கடவுளாலும் காப்பற்ற முடியாது இப்பொழுது இருக்கும் கால மாற்றங்களால்  அதை தானே கூறினீர்"
 
"ஆமாம்!", என்றார்
 
"உருவாக்கியவருக்கு அதை அழிக்கவும் தெரியும் காக்கவும் தெரியும் அல்லவே உங்கள் கடவுள் பக்தி உண்மையென்றால்?" பெருமாள் வினவினான்.
 
சற்றே சிந்தித்தார் அருணகிரி, மெல்லிய புன்னகையோடு "இந்த தலைப்பு பல ஆண்டுகளாகவே நிருபித்தும் நிருபிக்க படாமலும் இருக்கிறது. ஆனால் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சுய புத்தியை தன்னையும் தன் சுற்றத்தையும் பாத்துக்க தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். நாம் மேலும் பேசலாம் மீண்டும் சந்திக்கும் பொழுது" என்று தனது வண்டியை கட்ட ஆயுத்தம் ஆனார்.
 
பெருமாள் "நன்றி ஐயா! நான் இதே கட்டிடத்தில் மேற்பார்வையாளராகவும் மாலையில் அந்த கோயிலில் தான் அர்ச்சகராய் இருக்கிறேன். மீண்டும் நீங்கள் வரும் போது சந்திக்கிறேன் " என்று விடைகொடுத்தான்.
 
அருணகிரி தன் வண்டியில் செல்லும் போது நடந்த உரையாடலே கேட்டு கொண்டிருந்தது. இடையில் போக்குவரத்து சிக்னல் விழவே வண்டியை நிறுத்தி எதிர் திசைகளில் இருந்து வரும் வண்டிகளை பார்த்து யோசித்து கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே தன் அருகில் இருக்கும் இடங்களில்  ஓட்ட பட்டிருக்கும் படங்களை ஒரு நோட்டம் விட்டார். விநாயகர்,முருகன்,சிவன்,பெருமாள்,அம்மன்,இயேசு,முஸ்லிம் எழுத்துக்கள் என பார்க்கும் இடமெல்லாம் எதாவது ஒட்டி இருப்பதை கண்டார்.
 
மெதுவாக பச்சை விளக்கு எரிந்தவுடன் யோசித்து கொண்டே தன் வீட்டிற்க்கு வந்தடைந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் ஊரில் இல்லாததால் தானே கதவை திறந்தவருக்கு பளிச் வெளிச்சம் அவரையும் அவர் முகத்தையும் மறைத்தது. வெறும் வெளிச்சம் மட்டும் தான் நடக்க தொடங்கினார், புரிந்துகொள்ளவே முடியாத அமைதி, தன் ரத்தத்தின் ஓட்டம் என எல்லாம் அவருக்கே கேட்டுக் கொண்டிருந்தது. கண்களை மூடி கசக்கி நன்றாக விழித்தவர்க்கு எல்லாம் மாயமாய் மறைந்தது.
 
தன் நாட்குறிப்பில் கண்ட காட்சியையும் உரையாடலையும் பதிவு செய்தார். முடிவில் கடவுளால் உலகத்தை படைத்தல்,காத்தல், அழித்தல் என மூன்றுமே முடியும் ஆனால் அவருக்கு உருவமில்லை உணரமுடியும். ஆனால் அதை உணர  மனிதனின் உயிரோட்டம் மிக முக்கியம் சுற்றுபூரத்தை சுத்தமாய்வைத்தால் தான் நோய்நொடி இல்லாமல் வாழமுடியும். உன்னை காப்பாற்ற மருத்துவர்கள் இதுவரை கண்டுபிடித்ததை வைத்து தான் முயற்சி செய்ய முடியும் ஆனால் மாசுபாட்டால் மனிதனையே காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று எழுதி முடித்தார்.

கோயிலில் அர்ச்சகர் பெருமாள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கல்லாய் கடவுள் அருள் கூர்ந்த வண்ணம் மக்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
 
இப்படிக்கு
ப.இரசல்