Wednesday, December 30, 2015

பசங்க 2 - ஹைக்கூ

குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.

குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.

நன்றியுடன்,
ப.இரசல் 

No comments:

Post a Comment