Sunday, December 27, 2015

பூலோகம்

இந்த வருடம் கடைசியில் வந்தாலும் வரவேற்ப்பு சும்மா அள்ளுது. ஒரே காரணம் ஜனநாதன் அவர்களின் வசனம் என்ற காரணத்தோடு உள்ளே சென்றால். ஜெயம் ரவி ஆளே மாறி இருக்கார் படத்துக்கு. வெறும் உடல் பருமனை ஏற்றுவது மட்டுமல்லாமல் டான்சிங் பூலோகம் என்ற பேருக்கு ஏற்றார் போல் ஆங்கங்கே நடனம் ஆடுவதும், படம் நெடுக குத்து சண்டை வீரராக வருவது உண்மையில் அவரின் மென கெடல் புரிகிறது. 

படம் பார்த்துவிட்டு தான் தெரிந்தது இதில் ஸ்ரீகாந்த் தேவா இசை என்று. இசையும் பின்னணியும் படத்திற்கு பலம். முதல் பாதி விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாதி கருத்துக்களம். முதல் பட இயக்குனர் என்ற அடையாளமே இல்லாமல் உள்ளார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்டு நேர்த்தியான நெறியாடல். பாராட்டுக்கள்.

மக்களுக்கு இதை தான் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ஊடங்கங்கள் நினைத்தால் நமக்கு கிடைக்கும் செய்தி என்றுமே அரை வேக்காடு இல்லை ஒன்றுமே அப்படி நடக்கவில்லை என்பது தான். இந்த வருடம் தனிஒருவன் படமும் சரி பூலோகம் படமும் சரி ஒரே கருத்தை வெவ்வேறு கோணத்தில் கூறுகிறது. சபாஷ் என்று சொல்ல தெரிந்த நமக்கே ஊடங்கங்களை எதிர்த்து போரிட தெரியவில்லை.

உதாரணம் கூறவே முடியாத ம(றை)றக்கப்பட்ட செய்திகளை காட்டி தினம் நம்மை வீணடிக்கும் ஊடகத்திற்கு எதிராக மாற வேண்டியம் தருணம் இது என்பதை ஒருக்கணம் படம் பார்க்கும் போது ஏற்ப்பட்ட பாதிப்பு தான் படத்தின் வெற்றி.

வாழ்க பாரதம்,
ப. இரசல்

No comments:

Post a Comment