Friday, April 1, 2022

ஊரடங்கி..ஊரடங்கி..

 ஊரடங்கி..ஊரடங்கி.. இரண்டு ஆண்டாக நல்லது! கெட்டது! உற்றார்! உறவினர்! நண்பர்களை கூட பார்க்காமல் கடந்து சென்ற காலம் இப்போது மாறிவிட்டது. பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தொடர் விழாக்களும் விசேஷங்களும் வந்து மனதினை புத்துணர்வாகியது.


நிகழ்வு  1:
அன்பு தம்பியாகவும் நண்பராகவும் இருந்த விக்னேஷ் திருமணம் காரைக்குடியில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள கீழாநிலக்கோட்டையில் திருமணம் மற்றும் வரவேற்பு.கல்யாணமாம் கல்யாணம் தடபுடலா கல்யாணம் அற்புதமான உணவு மற்றும் பரிமாறும் அன்புள்ளம் கொண்டவர்கள். முதல் முறையாக பழக்கம் இல்லாத ரோடுகளில் கார் ஒட்டி சென்ற அனுபவமும் புதுமை.

நிகழ்வு 2:
அன்பு மகள் ஸ்பூர்த்திக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்ற வருடம் புது மனை புகு விழாவை போல் அதிக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடினாலும் அன்பும் மகிழ்ச்சியும் அது அளவிட முடியாது. 

நிகழ்வு 3:
விருதுநகர் சென்று குல தெய்வ வழிபாட்டில் மகள் ஸ்பூர்த்திக்கு காதுகுத்தும் மொட்டை அடித்தலும் ஒன்று சேர கிடா சோறும் இரண்டு வருடம் சந்திக்காமல் இருந்த உறவினர்கள் உரையாடல்கள் என ஏக போகமாய் இனிதே முடிவடைந்தது.

விருதுநகர் வந்து மாரியம்மன் தரிசனம், சித்தி சித்தப்பா அண்ணன் மதனி தம்பி மாமா பெரியம்மா அக்கா குழந்தைகள் என அனைவரையும் கண்டு உரையாடியதே உள்ளத்தில் புது சந்தோஷத்தையும் அன்பையும் துளிர செய்தது.

ரெண்டு வருடம் சுவைக்காத பண்டங்கள் அட டா ஒவ்வொன்றும் ஒரு ரகம். மகேஷ் பேக்கரி பிளம் கேக்கும் மில்க் ரோல், இருட்டு கடை அல்வா,சேவு காரம்.

எங்கும் இன்பமயம்...

ஆன்மீகம்

 மார்ச் மாதம் #ஆன்மீக மாதமாய் மாறியது. முதலில் இரண்டு வருடமாக வெளி ஊருக்கு செல்லாமல் இருந்து சிவராத்திரி அன்று எங்கள் #குராயூர் #திருவேட்டை #அய்யனார் குலதெய்வத்திற்க்கு அங்காளி பங்காளி கிடா வெட்டு சாமி கும்பிடும் அழைப்பு வந்தது. அதோடு என் மகளுக்கு காதுகுத்தி மொட்டை போட்டு கும்பிட்டு வந்தோம். #விருதுநகர் #மாரியம்மனையும் கும்பிட்டு வந்தோம் அந்த பயணத்தில். இடையில் மகள் நட்சத்திர பிறந்த நாளுக்கு #திருச்சி  #கருமண்டபம்  #ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தோம். 


காலை நடைப்பயிற்சியில் மயில்கள் பார்ப்பது வழக்கம் கடந்த ஒரு மாதமாக. அடுத்த சில நாட்களில்  #கடைசிவிவசாயி படமும் பார்த்தேன். சில நாட்கள் மனைவியையும் அழைத்து கொண்டு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அவர்களும் மயிலை ரசித்தார். மூன்று வருடமாக செல்லாத மனைவியின் குலதெய்வம் #புஞ்சைசங்கேதி #சப்பாணி #கருப்பு சாமி தரிசிக்க சென்றோம். இரண்டே நாளில் #பழனி போக முடிவெடுத்தோம். நேற்று #பழனி சென்று முருகனையும் #போகரையும் தரிசித்து வந்தோம். அழகென்ற சொல்லுக்கு #முருகா!

இன்று காலை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு #கருடனை பார்தேன்....

தொடரும்!!

--
Yours,
Rasal