Friday, April 1, 2022

ஆன்மீகம்

 மார்ச் மாதம் #ஆன்மீக மாதமாய் மாறியது. முதலில் இரண்டு வருடமாக வெளி ஊருக்கு செல்லாமல் இருந்து சிவராத்திரி அன்று எங்கள் #குராயூர் #திருவேட்டை #அய்யனார் குலதெய்வத்திற்க்கு அங்காளி பங்காளி கிடா வெட்டு சாமி கும்பிடும் அழைப்பு வந்தது. அதோடு என் மகளுக்கு காதுகுத்தி மொட்டை போட்டு கும்பிட்டு வந்தோம். #விருதுநகர் #மாரியம்மனையும் கும்பிட்டு வந்தோம் அந்த பயணத்தில். இடையில் மகள் நட்சத்திர பிறந்த நாளுக்கு #திருச்சி  #கருமண்டபம்  #ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தோம். 


காலை நடைப்பயிற்சியில் மயில்கள் பார்ப்பது வழக்கம் கடந்த ஒரு மாதமாக. அடுத்த சில நாட்களில்  #கடைசிவிவசாயி படமும் பார்த்தேன். சில நாட்கள் மனைவியையும் அழைத்து கொண்டு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அவர்களும் மயிலை ரசித்தார். மூன்று வருடமாக செல்லாத மனைவியின் குலதெய்வம் #புஞ்சைசங்கேதி #சப்பாணி #கருப்பு சாமி தரிசிக்க சென்றோம். இரண்டே நாளில் #பழனி போக முடிவெடுத்தோம். நேற்று #பழனி சென்று முருகனையும் #போகரையும் தரிசித்து வந்தோம். அழகென்ற சொல்லுக்கு #முருகா!

இன்று காலை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு #கருடனை பார்தேன்....

தொடரும்!!

--
Yours,
Rasal

No comments:

Post a Comment