Saturday, November 16, 2013

பிஸ்ஸா 2 வில்லா - Mystical Thriller



வரைமுறைகளை கடக்கும் இன்னொரு திகில் பரிமாணம். சூனியங்களின் எதிர்மறை விளக்கம் தான் வில்லா. திகிலை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது பிஸ்ஸா என்ற தலைப்பின் தலைப்பாய் போனதால்.

யாரிந்த தீபன்?
நாளைய இயக்குனர் இறுதி போட்டியாளர்களில் ஒருவர். அந்த தகுதி தான் இப்பொழுது தமிழ் திரையுலகை மிகவும் குறைவான பட்ஜெட்டில் அதிகம் வசூலிக்கிறது. தீபனின் அமுதா குறும்படம் ஒன்று போதும் திகிலுக்கு மறுபெயர் மனதில் எழும் அச்சம் தான் என்பது புரியும்.

வில்லாவில் என்ன இருக்கிறது?
நம் முன்னோர்கள் வரையறுத்த வாஸ்துவின் விளக்கம் தான் வில்லா. நாமே நமக்குன்னு ஏற்படுத்தி கொள்ளும் தினம் செய்யும் சில பழக்கங்கள் ஏன்? சும்மா இப்படி பண்ணா நல்லது நடக்கும் நினைக்கிறது அது தான் நாம் ஏற்படுத்தி கொள்ளும் பாசிடிவ் சக்தி. இங்க அதை தான் 1மணிநேரம் 42நிமிஷம் நெகடிவ் சக்தியை எப்படி பாசிடிவ் ஆக காட்ட முடியுமோ அப்படி திரைபடுத்தி இருக்கிறார் தீபன். படம் ஆரம்பித்து வில்லாவை காட்டும் வரை மக்கள் சோம்பல் முறிக்க நேரம் கொடுத்து விட்டு, படம்  ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும் போது தான் சில நேரம் மூச்சு விட தவறியதை உணர முடிகிறது ஏனென்றால் திகிலால் அல்ல அதில் இருக்கும் மர்மங்கள் நாம் ஓட்டி பார்க்கும் போது. 

வில்லாவும் மென்மையான இசையும் மிரட்டல் ஒலிகளும்:
காணும் ஞானம் பாடல் பயத்திற்கும் ஞாபகத்திற்க்கும் பயன் படுத்த பட்டிருக்கு. இப்பவும் headset இல் கேக்கும் போது ஏதோ ஒன்று நினைக்க தோனுகிறது அதுவே காட்சியாய் வரும் போது திகிலுக்கு புது அர்த்தத்தை தருகிறது. ஒலி அலை அதிர்வை உணர வைத்த காட்சி இப்பொழுதும் கேட்கிறது. அப்படி இசையும் ஒலியும் விளையாடியவாறு கொடுத்த சந்தோஷ்க்கும் சங்கருக்கும் நன்றியும் பாராட்டும்.

வில்லாவும் கலையும் ஒளிப்பதிவும்:
ஒரு பழங்கால வில்லா அதில் பல ஓவியங்கள் மற்றும் கலையாற்றல் மிக்க பொருட்கள் உண்மையில் கலை இயக்குனர் மாயன்  அதிக மெனக்கெட்டு இருக்க வேண்டும். அதனை நம் கண்களுக்கு விருந்தாக்கிய ஒளிப்பதிவாளரும்(தீபக்) சளைத்தவர் அல்ல. 

நடிகர்கள் வில்லாவினில்:
அசோக் எழுத்தாளருக்கான விறைப்பும் முறைப்பும்.சஞ்சிதா இளமையும் எதிர்பார்ப்பும். மற்றும் சில நடிகர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். புதுமுகமாய் தெரிவதால் தான் படத்திற்கு இவர்களால் பலம் கூடுகிறது.

டைரக்டர் டச்:
நாசர்: you cannot change anything and everything!
டைரக்டர்: ஆமா உண்மை தான்! ஆனா திகில் படத்துக்கான வரைமுறைகளை மாத்த முடியும்.

இந்த படம் வேற மாறி பிஸ்ஸா முதல் பகுதி திகில் படம் இது மாயை(mystical thriller) ஆனா அத பத்தி ரொம்ப நேரம் யோசிக்க வைக்கும்.

மூன்றாம் பாகமும் எடுக்கப்படலாம்!

என்றும் அன்புடன்,
ரசல்

Saturday, November 9, 2013

பாண்டியநாடு - பொழுதுபோக்கு விமர்சனம்




சுசீந்தரன் மீண்டும் ஒரு "நான் மகான் அல்ல"  பாணியில் மதுரையை தழுவி எடுக்க பட்ட குடும்பம் + அதிரடி படம். commercial படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் உதாரணம். நம் தமிழ்நாட்டில் கலை ரசிகர்களை விட timepass க்காக மட்டும் படம் பார்பவர்கள் அதிகம் ஏனென்றால் உழைப்பாளர்கள் தான் நாம் பெரும்பாலும். சோம்பலை முறிக்க படம் பார்க்கும் போது படங்கள் கலையை நோக்கி போகும் போது மேலும் சோம்பல் தரும் சூழ்நிலை, படத்தின் காரணமாய் இல்லை படம் பார்பவரின் மனநிலையால்.

இங்கே அப்பா,அம்மா,அண்ணன்,அண்ணி,குழந்தைகள் என  குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான தினமும் பார்க்கும் காட்சிகள். ஒரு வில்லன் எப்படி அவனே உருவாகிறான் ஆக்ரோஷமாய் ஆட்டி படைக்கும் கதாபாத்திரம். ஒரு காதல் அதுவும் கண்டதும் காதல் அதை வளர்க்க கதாநாயகனின் முயற்சிகள். நாலு பாட்டு கேக்கரமாரி.நட்புடன் சில நண்பர்கள். வில்லனை பழிவாங்க போராடும் பயந்தாங்கோலி கதாநாயகனும் வயதான தந்தையும். இவை எல்லாவற்றையும் திரைகதையாய் உருவாக்கி சீட்டின் நுனியில் அடுத்து என்ன என யோசிப்பதற்க்குள் சுவாரசியம் வைத்த விதம் தான் இந்த படத்தை வெற்றியாக்கி உள்ளது.

விஷாலுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு வெற்றி இதில் தொடையை தட்டவில்லை,வரேண்டா,போறேண்டா, மதுரைகாரண்டா  போன்ற வசனங்கள் இல்லாமல் ஒரு நடுத்தர வாலிபன் சமுதாயத்தில் எதற்கும் சண்டை போடாமல் கண்களில் பயத்தை வில்லனை காணும் போதும் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் கதாபாத்திரம். பாரதிராஜா அயுதயெழுத்தில் நடித்திருந்த பொழுதும் பாதிநேரம் குரல் கேக்காமல் போனது ஆனால் இங்கே அந்த குறையை போக்கிவிட்டார். அடடா அவர் எத்தனை பேருக்கு நடிக்க கற்றுகொடுதிருப்பார் அவரிடம் இப்படி ஒரு கதாபாத்திரம் பல நாள் பேசப்படலாம். இமான் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் சுவாரசியம் கூட்டுகிறது.

நான் படம் பார்க்கும் போது மக்கள் எந்த அளவுக்கு ரசித்திருந்தால் விஷால் நண்பனை கொன்றவனை அடிக்கும் முதல் அடிக்கு கைதட்டி கூச்சளிட்டிருப்பார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. கடைசியாக பாரதிராஜா விஷாலின் கரங்களை பற்றிக்கொண்டு பேசாமல் உணர்வுபூர்வமாய் நடிக்கும் நடிப்பு அது சுசீந்திரன் கைகளை பற்றிக்கொண்டு இந்த தலைமுறை உங்களை போன்ற இயக்குனர்கள் கையில் தான் உள்ளது என்பதை போல் இருந்தது.

ரொம்ப நாள் பிறகு நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி.

என்றும் அன்புடன்,
ரசல்