Saturday, November 9, 2013

பாண்டியநாடு - பொழுதுபோக்கு விமர்சனம்




சுசீந்தரன் மீண்டும் ஒரு "நான் மகான் அல்ல"  பாணியில் மதுரையை தழுவி எடுக்க பட்ட குடும்பம் + அதிரடி படம். commercial படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் உதாரணம். நம் தமிழ்நாட்டில் கலை ரசிகர்களை விட timepass க்காக மட்டும் படம் பார்பவர்கள் அதிகம் ஏனென்றால் உழைப்பாளர்கள் தான் நாம் பெரும்பாலும். சோம்பலை முறிக்க படம் பார்க்கும் போது படங்கள் கலையை நோக்கி போகும் போது மேலும் சோம்பல் தரும் சூழ்நிலை, படத்தின் காரணமாய் இல்லை படம் பார்பவரின் மனநிலையால்.

இங்கே அப்பா,அம்மா,அண்ணன்,அண்ணி,குழந்தைகள் என  குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான தினமும் பார்க்கும் காட்சிகள். ஒரு வில்லன் எப்படி அவனே உருவாகிறான் ஆக்ரோஷமாய் ஆட்டி படைக்கும் கதாபாத்திரம். ஒரு காதல் அதுவும் கண்டதும் காதல் அதை வளர்க்க கதாநாயகனின் முயற்சிகள். நாலு பாட்டு கேக்கரமாரி.நட்புடன் சில நண்பர்கள். வில்லனை பழிவாங்க போராடும் பயந்தாங்கோலி கதாநாயகனும் வயதான தந்தையும். இவை எல்லாவற்றையும் திரைகதையாய் உருவாக்கி சீட்டின் நுனியில் அடுத்து என்ன என யோசிப்பதற்க்குள் சுவாரசியம் வைத்த விதம் தான் இந்த படத்தை வெற்றியாக்கி உள்ளது.

விஷாலுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு வெற்றி இதில் தொடையை தட்டவில்லை,வரேண்டா,போறேண்டா, மதுரைகாரண்டா  போன்ற வசனங்கள் இல்லாமல் ஒரு நடுத்தர வாலிபன் சமுதாயத்தில் எதற்கும் சண்டை போடாமல் கண்களில் பயத்தை வில்லனை காணும் போதும் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் கதாபாத்திரம். பாரதிராஜா அயுதயெழுத்தில் நடித்திருந்த பொழுதும் பாதிநேரம் குரல் கேக்காமல் போனது ஆனால் இங்கே அந்த குறையை போக்கிவிட்டார். அடடா அவர் எத்தனை பேருக்கு நடிக்க கற்றுகொடுதிருப்பார் அவரிடம் இப்படி ஒரு கதாபாத்திரம் பல நாள் பேசப்படலாம். இமான் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் சுவாரசியம் கூட்டுகிறது.

நான் படம் பார்க்கும் போது மக்கள் எந்த அளவுக்கு ரசித்திருந்தால் விஷால் நண்பனை கொன்றவனை அடிக்கும் முதல் அடிக்கு கைதட்டி கூச்சளிட்டிருப்பார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. கடைசியாக பாரதிராஜா விஷாலின் கரங்களை பற்றிக்கொண்டு பேசாமல் உணர்வுபூர்வமாய் நடிக்கும் நடிப்பு அது சுசீந்திரன் கைகளை பற்றிக்கொண்டு இந்த தலைமுறை உங்களை போன்ற இயக்குனர்கள் கையில் தான் உள்ளது என்பதை போல் இருந்தது.

ரொம்ப நாள் பிறகு நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி.

என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment