Thursday, February 23, 2012

எனக்கும் காதலா! பகுதி 4



டிசம்பர் 22,2011:

காலை 7:30:
ராஜேஷ் வீட்டுக்கு வந்த உடனே ஹரி சண்ட போட ஆரம்பிச்சிட்டான். ஹரிஷ் கூட சமாதான படுத்த பாத்தான், இருந்தாலும் சூடா பேசிட்டு இருந்தனுங்க.

ஹரி : டேய் எதுக்கு டா? அந்த basket ball எடுத்துட்டு போன?
ராஜேஷ்: தோ இருக்கு மச்சி! ஆபீஸ் ல வெளையாட எடுத்துட்டு போனேன் டா!
ஹரி : சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல...
ராஜேஷ் : அதுனால என்ன டா.. ரூம்ல எல்லாரும் சொல்லிட்டு தான் எடுத்துட்டு போவாங்களா என்ன..
ஹரி: ஆமா டா சொல்லிட்டு தான் எடுத்துட்டு போகணும். அது என்னிது இல்ல
ஹரிஷ் : ஹரி ஓவரா பேசுற... ரூம் டா எல்லாரும் எல்லாம் ஷேர் பண்ணி தான இருக்கோம்..
ஹரி : நீ சொல்லுவ... உன் பொருள எடுத்துட்டு போனா தெரியும்...
ஹரிஷ்: அப்போ நான் இப்படி கத்த மாட்டேன்.. ராஜேஷ் தான் எடுத்துட்டு போனான்னு விட்ருவேன்..
ராஜேஷ் : மச்சி சரி டா! அதுக்கு ஏன் இவ்ளோ சீரியஸ் அஹ பேசுற..
ஹரி : முடியாது டா.. நீ எதுக்கு எடுத்து போன அத சொல்லு... நான் அத நீ எடுத்துட்டு வரமாட்டேன் நெனச்சேன்... ஆனா எடுத்துட்டு வந்ததனால தப்பிச்ச.
(ராஜேஷ் விளக்கி சொல்ல...)
ஹரிஷ் : ராஜேஷ் சரி விடு... ஹரி நீ சொல்லு பா.. நீ என்ன அத வச்சி பிளான் பண்ண?
ஹரி : உனக்கு தெரியாது டா!  டெய்லி காலைல அத வச்சி வெளையாடுன தொப்ப கொறையும் ஒரே மாசத்துல ஒடம்ப கொரசிடுவேன்...
ஹரிஷ் : ha ha ha ha....  நாயே இதுக்கு தான் நீ இவ்ளோ சீன் போட்ட... உனக்கு ஒடம்பு குறையனும்னா.. தெருவுல ஓடு இல்ல காலைல என் கூட வா IIT campus சுத்தி வருவோம்..
ராஜேஷ்: மச்சி இவனுக்கு அக்கு பஞ்சர் தான் தேவ படும்... மச்சி ஊசி இருக்குல காத்து எறகிற மாறி.. எரகிடலாம்... வரியா...
ஹரி: போடா... ############ நீ பொண்ண மடக்க எனக்கு ஓசில கெடச்சத தூக்கினு போவ! நான் ஒடம்பு கொறைக்க use பண்ண கூடாதா...
ஹரிஷ் : அவுனுக்கு தெறம இருக்கு... துரும்பு கூட அவனுக்கு பல் குத்த உதவும்... உனக்கு அந்த துரும்பு.... #####################
ஹரி : #############################################################################################################
ராஜேஷ் : போடா வெண்ணை... எதுக்கு இப்போ அசிங்கமா பேசுற....
ஹரிஷ் : ##########################################################################################################

(# - Cencored due to local language இறையாண்மை)
(இப்படி தான் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு, சத்தம் போடாம சத்தம் போட்டு ஒருத்தன ஒருத்தன் திட்டி இவனுங்களே இவனுங்க கலாய்ச்சிக்குவாங்க)

(கீர்த்தி சாயல் கொஞ்சம் நார்த் இந்தியன் மாறி.அவ பூர்விகம் அது ஆனா ரொம்ப நாள் முன்னாடி சென்னை ல செட்டில் ஆயிட்டாங்க. புரசைவாக்கம் ஏரியால தமிழும் ஹிந்தியும் கலந்து பேசுற பொண்ணு. சலவையும் white அந்த பொண்ணும் white. நெறைய நண்பர்கள் ஆண் பெண் என்று பேதமில்லாமல். புனே ல ஒரு கம்பெனி ல வேலை செஞ்சு அப்புறம் ராஜேஷ் கம்பெனிக்கு வேலைக்கு வந்து மூணு மாசம் தான் ஆகுது. ஒரு தலையணை இல்ல ரெண்டு மூணு தலையணை கட்டி கிட்டு தூங்கற பொண்ணு. ஆனா அவள் கனவுல ஹ்ரிதிக் ரோஷன் தான் வருவாரு, ஏன்னா இவ தவிர ரசிகை அவருக்கு மொபைல் wallpaper தீம் எல்லாம் அவருதான். அந்த டைரி மில்க் கவர் அஹ அழகா பொம்மையை போல் மடிச்சி வச்சிட்டு, தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு போனாள்)

(ராஜேஷும் தூங்கிட்டு தான் இருந்தான், ஆனா சுத்தி ஹரிஷ் ஓட குரல் கேட்டுட்டே இருந்துச்சி. ஏதோ வேலையா இருக்கான் போலன்னு தூங்கிட்டே இருந்தான். தூங்கும் போது சுத்தி நடக்குற விஷயம் கேக்குற விஷயம் கனவா வரும், இப்படி தான் ஹரிஷ் ஏதோ பறக்கும் ரயில் ரூட் சொல்ல சொல்ல இவனுக்கு கனவு முழுக்க ரயில்ல பயணம் செய்யுற மாறி ஒரு கனவு, அதுல கீர்த்தி ஏறினாள்! ரயில் தண்டவாளம் மாறிச்சி! இவனுக்கு பசி எடுத்து எழுந்திருக்கும் போது யாருமே இல்ல. சரி சாப்டு படுக்கலாம்னு பார்த்தா மணி நாலு. இதுக்கு மேல என்ன சாப்பிட என்று மீண்டும் குட்டி தூக்கத்தை போட்டான்)

மாலை 5:30:
வண்டி டிரைவர் போன் போட்டார்,  மணி அப்பவே ஐந்தரை. வண்டிய கெளம்ப சொல்லிட்டு வேலைக்கு கெளம்பினான். போற வழில ஒரு கடைல எதை எதையோ வாங்கிட்டு போனான். இதுக்கு தான் இவன் வண்டி கெளம்ப சொன்னது இப்போ தான் தெரியுது. அவன் மொபைல் சிணுங்கியது சாயின் தவற விட்ட அழைப்பு மற்றும் ஒரு மெசேஜ்.

ஹரிஷ் அலுவல் மெசேஜ்:
உன்னோட சிரிப்புக்கும் என்னோட சிரிப்புக்கும் என்ன வித்தியாசம்?
நீ சந்தோஷமா இருந்தா சிரிப்ப, நான் நீ சந்தோஷமா இருந்தா சிரிப்பேன்.

ஆபீஸ் குள்ள நுழைந்த உடன், 

இவன் கண்கள் இவனை துரத்துது!
தேடி எங்கும் அலைபாயுது!
நாடி எல்லாம் துடிபாகுது!
கூடி வரும் பெண்டியரில் அவள் ஒருத்தியா என்று!

ச்சீ ஒன்னு கூட நல்லாவே இல்ல.. கொஞ்சமா எட்டி பாத்தா தெரியுது அவள் அமரும் இடம்,பிரகாசம் இவன் முகம். 
இடையில் ஒரு மொபைல் ரிங் டோன். வடிவேல் காமெடி ரிங் டோன்: என்னா பீலிங்கு...... சிரித்து கொண்டே சென்றான் அவன் இருக்கைக்கு.

முருகன் இவன் அழைப்பிற்கு முன்னாடியே வந்துட்டான். 

முருகன்: சார் என்ன இன்னைக்கி நீங்க வர லேட் ஆயிடுச்சி...
ராஜேஷ்: ஏன்டா... நீ வேற.. நானே கூப்புட போறேன் வேணும்னா..
முருகன்: சார்.. அவுங்க உங்கள கேட்டாங்க. எங்க இன்னும் ஒன்னுமே சொல்லலையா என்னன்னு?
ராஜேஷ்:(உள்ளுக்குள் பூரிப்பு) அப்புறம் என்ன சொன்னாங்க?
முருகன்: நீங்க யாருன்னு கேட்டாங்க.. அப்புறம் நாளைக்கு உங்கள பாக்க ஆர்வமா இருக்கறதா சொன்னாங்க..
ராஜேஷ்: சரி இந்தா!! இத கொண்டு போய் கொடு!

முருகன் கீர்த்தியிடம் ராஜேஷ் கொடுத்த பையினை கொடுத்துட்டு போனான். கீர்த்தி கொஞ்சம் கொழம்பி போய் அந்த பையில் என்னவென்று பார்த்தாள். உள்ளே முழுவதும் decoration items அப்புறம் ஒரு நோட் கூட..

"கீர்த்தி நீங்க என்ன பாக்கணும் இல்ல? அதுனால இநத பையில் இருக்கும் அணைத்து decoration items வச்சி உங்க இடத்த அழகா மாத்திக்குங்க. நாளைக்கு உங்கள கடைசி கிப்ட் கொடுத்து பாக்க வரேன் like a Chirstmas thatha(handsome). "

கீர்த்தி தன்னுடைய இடத்தை முழுவதும் அழகாக ஜோடித்தாள். அப்படியே தன்னுடைய கணிணீயில் ஏதோ எழுதி print out போட்டு வந்து தன்னுடைய இடத்தில ஒட்டி வைத்தாள்.

நுழைவு வாயிலில் "Welcome to my Chirst Maa"
சுற்றி முழுவதும் "Chirst Maa u are great", "U are so nice Chirst Maa" ,"U r not Chist maa u r Choclate Maa", "Merry Christmas for my new Friend(Chirst Maa)" இப்படி பல எழுத பட்ட காகிதங்கள். முருகன் கூடவே உதவி புரிந்தான். அங்கே சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கண்ணு வச்சிட்டாங்க.

ராஜேஷ் கொஞ்ச நேரம் பேசாம இன்னைக்கே சொல்லிடம்னு நினைத்தான். சாயிடம் அதை பற்றி கேட்டான்.

சாய்: டேய் வேணாம் டா... இதுவரைக்கும் ஒரு த்ரில் இருக்கு இல்ல.. அத அப்படியே maintain பண்ணு.. பொண்ணுங்கள எப்பவுமே சுத்த விட சான்ஸ் கிடைக்காது டா...
ராஜேஷ்: இல்ல சும்மா decoration items வாங்கி கொடுத்து அலங்காரம் பண்ண சொன்னேன், அதுக்கு கூட அவ தனியா போஸ்டர் போட்டு வச்சிருக்கா.. கொஞ்சம் பீலிங்கா இருந்துச்சு..
சாய்: இது தாண்டா பசங்க பிரச்சனையே.. பொண்ணு உன்ன பத்தி நினைக்கிறா ன்னு தெரிஞ்சா போதுமே! உடனே அலுப்புவீங்கலே..
ராஜேஷ்: அப்படி இல்லடா! எனக்கு தோனுச்சு உன்கிட்ட கேட்டேன்.. சரி இன்னைக்கு என்ன ஒன்னும் பண்ணலையா?
சாய்: அந்த கடன்காரன் தான!  இன்னைக்கு எதாவது ஒரு தமிழ் பாட்டை மாத்தி பாட சொல்லி இருக்கான்.
ராஜேஷ்: உன்னோட christ maa  அநேகமா ஒரு சினிமா பைத்தியமா இருக்கணும், அதுனால டெய்லி இப்படி சினிமா பத்தியே செய்ய சொல்றாங்க. சரி என்ன பாட்டு அப்போ.
சாய்: தெரியலைங்க இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். மைக் செட்ட யார்கிட்டயும் கொடுக்க வேணாம்னு HR Order போல. Security வரும் போதே சொன்னாரு.
ராஜேஷ்: என்ன சொல்றது!! நம்ம HR உன் மேல அவ்ளோ பாசமா இருக்காங்க!

சாய் சென்டர்ல போய் நின்னு கத்தி பாடினான். அவன் வந்த உடனே எல்லாரும் அவுங்க வேலைய விட்டுட்டு பார்த்தாங்க, அவ்ளோ பிரபலம் ஆயிட்டான் அவன்!!!

சாய்: இப்போ நான் மங்காத்தா படத்தில இருந்து open the bottle பாடலை மாத்தி எழுதி இருக்கேன்.
Disclaimer : இது முழுவதும் கற்பனையே யாரையும் பழிவாங்கும் நோக்கோடு செய்ய வில்லை.
மச்சி  open the dooruuuuu.....
இது  அதட்டல்  பரம்பர  
அஞ்சாறு  manager வேற  
அன்றாடம்  ஒப்பாரி  தான்  
நாம  கொட்டு  நு  ஒருமுர 
சொன்னாக்க  பலமுற 
கொட்டு  கொட்டுன்னு  கொட்டுவாங்கதான்..  
நாம  முறிக்கினு  போயடாக்க
எங்க  போவாங்க  இவுங்க  வீட்டுக்கா ...


இப்போ  ஒம்போது  offler  letter ஒன்னாக  இருக்கு 
ஓஹ ஹோ ன்னு  நம்  ஜாதகம் ..


ஆடி ஆடியே சோந்தோமடா  
நம்மேனி  வாடியே செத்தோமடா
ஓடி  ஓடி  ஏ  அலுதோம்டா  
சும்மாவே  ஒக்கண்ட்தே பல இழந்தோமடா..

மொத்த பேரும் கைதட்டி மீண்டும் ஒருமுறை பாட சொல்லி கேட்டனர். மேனேஜர் அவன்கிட்ட வந்து பாராட்டிட்டு போனாரு. இருந்தாலும் அவர பத்தி பாடும் போது சொல்லி இருக்கலாம்ல என்று கேட்டு சென்றார்.

ராஜேஷ் சாயிடம் HI 5 தட்டினான். அப்போ ஒரு பொண்ணு பேய் முகமுடி போட்டு கிட்டு ஓடிவந்து ராஜேஷ் கிட்ட
"ஓதல வா ஓதல வா நேனு சந்தரமுகி... ன்னு சொல்லிச்சி"
அதுக்கு சாய் "அழகு பொம்மாயி" என்று சொன்னான்.அந்த பொண்ணு முகமுடி கலட்டன அப்புறம் தான் தெரிஞ்சிச்சி அது நம்ம கழுத பொண்ணு...

முகம் தேடி அவள் காத்திருக்க 
நகம் கடித்து காத்திருந்தான் 
நாளை வருகைக்கு....

No comments:

Post a Comment