Monday, May 18, 2009

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!!!

நாட்களை எண்ணி பயன் என்ன உன் நலமரியா வினாடிகள் எத்தனை?

முள்வேலிக்குள் அமர்ந்து சுற்றி வரும் செய்தி அறியாமல் உன் கால் படும் நாள் எண்ணி நிலமும் அழதொடுங்கும்!

உள்ளுணர்வு உனக்காக தான் வாடுகிறது உன் ஆர்வமான பேச்சை கேட்க!

என் செய் சந்தர்ப்ப சூழல்களே இறையாண்மை வெற்றி பெரும் ஜனநாயகம் தோல்வி யுறும்!

தமிழுணர்வு பணத்திற்கு வாக்களிக்க அங்கே ஒரு தமிழன் அழிகிறான்!

சுதந்திரமே எழுந்து வா முள்வேலிக்குள் இருந்து!

உணர்வுள்ள கடைசி தமிழன் இருக்கும் வரை பொறுத்திருந்தால்!

பண நாயக இந்தியாவில் நீ வகுப்பு பாடமாய் அதிலும் தேர்வுக்கு கேட்கப்படாத கேள்வியாய் உனக்கான போராட்டங்கள்!!