Monday, February 11, 2013

A Book of பொக்கிஷம்

என் மனதினை பிரட்டி போட,நான் எழுதி வந்த நாட்குறிப்புகள் நினைவிற்கு வந்தன. எழுதும் பழக்கம் தற்போது அடிகடி வருவது,முன்னாளில் அது என்றாவது வருவது. யாருடைய பள்ளி பருவமும் அது பாடம் படிப்பதற்கு மட்டும் அல்ல மாறாக வாழ்க்கை பாடம் படிபதற்கும் தான். என்னில் அடங்கா வாழ்கை நெறிகளை கடைந்தெடுத்து கற்றவை! அவைகளுள் சுவாரசியம் குறையாமல் இன்றும் பல நினைவு நாடாக்களை நாம் என்றாவது நினைத்து பார்ப்பதுண்டு. என் முதல் நாட்குறிப்பு ஏடு என் கால பொக்கிஷம்,இன்று அதன் நினைவோடு உங்கள் முன் "A Book of பொக்கிஷம்".

எட்டாம் வகுப்பு பயிலும் போது என் தந்தையின் டைரியே முதல் தூண்டுதல்! நானும் எழுத வேண்டும் என்று மனதில் பதிய செய்தது. ஆனால் நான் எழுதிய டைரி அதற்க்கு முந்தைய ஆண்டு வீட்டில் வந்து உபயோக படுத்தாமல் இருந்த ஒன்று. ஏழாவது ஆண்டு விடுமுறையில் புத்தங்களை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்க பட்ட அந்த டைரி என்னுடைய நாட்குறிப்பானது. என்ன எழுதலாம் எழுதணும் என்றே புலப்படாத ஒன்றும் அறியா வயது? ஆக நான் எழுதியது தினசரி நடந்த சுவாரசியங்கள் மட்டுமே. இங்கு அவைகளுள் இச்சமயம் சுவாரசியமாக தோன்றியதை பதிவு செய்கிறேன்.

முதல் மூன்று மாதங்கள்:

யோசித்து பார்த்ததில் தெளிவாய் தெரிந்த முதல் எழுத்துப்பதிவு? எட்டாம் வகுப்பு ஆரம்பித்த முதல் வாரம், அதிகம் பிரயோகித்தது இந்த நாட்குறிப்பை தான். அதுவும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசரியர் எத்தனை புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற குறிப்புகளே. அது போக வாரம் ஒருமுறை வரும் "Drawing and Crafts" வகுப்பில் வழக்கம் போல் ஆசிரியர் ஆண்களை எதாவது செய்ய சொல்லிவிட்டு பெண்களுக்கு கோர்க்கவும் தைக்கவும் கற்று கொடுப்பார். நான் என்ன செய்ய போகிறேன் அருகில் இருக்கும் நண்பனுடன் கட்டம் போட்டு விளையாடுவது இல்லை புக் கிரிக்கெட் விளையாடுவது அதற்கும் உதவியது இந்த நாட் குறிப்பு தான்.

இப்படி கிறுக்கல்கள் இல்லா நாட்குறிப்பு, ஒரு முறை அண்ணனுக்கு வந்த வாழ்த்து மடலில் இருந்த ஆங்கில வாழ்த்து, புதிதாய் தோன்றியதால் அதை எழுதி வைத்துகொண்டேன். இப்போ யோசிக்கும் போது சிரிப்பு தான் வரும் அதை நினைத்தால், அதன் பின் ஒவ்வொருவரும் அதையே சில வாழ்த்துமடலில் எழுதிய போது.

someone has goldship
someone has silvership
but i have only oneship
that's your friendship

ஹ்ம்ம் இதுவும் என்னடையது என நம்பிய சிலர், அதுபோகட்டும் ஒரு பாடலில் வந்த ஆங்கில வார்த்தையும் நானாய் மாற்றி எழுதியதும் உண்டு.

sharpner is made of plastic
rope is made of elastic 
life is fantastic
make it romantic

மொத்தத்தில் டிஆர் போன்ற கவிதைகள் தான் நான் ஆரம்பத்தில் எழுதியதும் எழுத நினைத்தும்.

இரண்டாம் மூன்று மாதங்கள்:

கிறுக்கிய பக்கங்கள்,வகுப்பு பாடம் எழுதியது மற்றும் imposition எழுதியதை தவிர்த்து இன்னும் சில வரைபடங்களும் இந்த நாட்குறிப்பை அலங்கரித்து கொண்டிருந்தன. அலங்கரிப்பு இல்லை அலங்கோலம் என்றும் கூறலாம். பள்ளி பருவத்திற்கும் ரசனைக்கும் எப்பொழுதும் தொடர்புகள் உண்டு. ரசனை எதை பற்றியது? அது ஒவ்வொருத்தரை பொருத்தது. எனக்கு தமிழ் மேல், எப்படி என்று என்னால் கூற முடியாது நான்காம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறேன். அது தான் என்னோவோ சில நேரங்கள் என்னை தமிழுக்கு ரசிகனாக்கியது. அந்த சமயம் தமிழுலும் நான் சில கவிதைகள் கிறுக்கி இருக்கிறேன். எல்லாம் இப்படி தான் முடிந்திருக்கும் ,அதாவது எதுகை மோனை காதலால்.கவிதை வரிகள் ஞாபகம் இல்லை ஆனால் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி எழுதி இருக்கிறேன். 

நினைத்தேனே 
இணைந்தேனே
இழுத்தாயே 
விழுந்தாயே 

இதனிடயே எங்கள் வகுப்பிற்கு Training Teacher ஆக ஒருவர் வந்தார்,அவர் பெயர் மாலதி. முதலில் அவர் அந்த பாடத்தை எடுக்க வந்ததும் நாங்கள் சந்தோஷப்பட காரணம்,இருக்கற வாத்தியார் தான் நமக்கு என்னக்குமே பிடிக்காதே அது போல தான். இப்படி அவரை பற்றி தான் ஒருமுறை என் நாட்குறிப்பில் எழுதி இருக்கிறேன்.
பாடம் எடுப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளது மற்றவர்கள் புத்தகத்தை பார்த்து எடுப்பார்கள் இவர் ஒரு பேப்பரில் அன்றைய பாடத்தை எழுதி படித்து எங்களுக்கும் புரிவதைபோல் எடுப்பார்.சில வகுப்புகள் எங்களுக்கு படிபதற்கும் பேசுவதற்கும் மட்டும் விட்டு விடுவார். அது போல் ஒருசில சமயம்  எங்களின் திறமைகளை எடுத்து காட்டவும் வைப்பார். இப்படி ஒருமுறை ஒரு நண்பன் நான் கவிதை எழுதியதை போட்டு கொடுத்தான். அதனால் அன்று நான் முன்னமே எழுதிய அல்ல சுட்ட ஆங்கில கவிதையை கூறி கைதட்டல்கள் வாங்கி இருக்கிறேன். இப்படி மாலதி மேடம் பற்றி எழுதிய சிறிய குறிப்புகள் ஆங்கங்கே காணலாம் என் குறிப்பேட்டில்.

மூன்றாம் மூன்று மாதங்கள்:

முழுமையாய் ஆறு மாதம், மாலதி மேடத்தின் Training முடிந்து எங்களை விட்டு பிரியும் தருணம். எங்களுக்கு எடுப்பது போலவே மற்றொரு வகுப்பிலும் அவர் கிளாஸ் எடுக்கிறார் எனபது தெரியும், அவர்களுக்கு எங்கள் வகுப்பிற்கு முன்னதாகவே விடை கொடுத்துவிட்டார். ஆனால் விடைபெறுமுன் அவர்களுக்கு அவர் கூறிய வார்த்தைகள் சிலமணித்துளிகள் நெஞ்சை கணக்கவைக்காமல் விடவில்லை. அதை எங்களிடம் கூறும் முந்தய வகுப்பில் என்னிடம் அவருக்காக கவிதை எழுத சொன்னார். எழுதினேன் பத்து வரிகளில்.....

..............................
..............................
..............................
..............................
..............................
நீங்கள் எங்களை விட்டு பிரிவதாய் சொன்னீர் 
அதற்காக நாங்கள் விடுகிறோம் கண்ணீர்!

மற்றவரிகள் ஞாபகம் இல்லை என்றாலும் கடைசி இரண்டு வரிகள் இன்றும் நினைவில் உள்ளன. படித்து முடித்துடன் வகுப்பில் எல்லோரும் கை தட்டினர்,மாலதி மேடமும் மிகுவும் ரசித்தார். அந்த கவிதை முதல் பிரதி அடித்து திருத்தி எழுதியது நாட்குறிப்பில் தான். அவருக்காக கொஞ்சம் மெனக்கெட்டு அழகாய் எழுதி ஒரு காகிதத்தில் கொடுதேன் என்னுடைய பரிசாய்.

அதன் பின் அவரை பற்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டார். மாலதி மேடம் கல்யாணம் ஆனவர் என்று தெரியும் ஆனால் அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கேட்கும் போது எங்கள் மனம் கலங்கி விட்டது. அதோடு முடியவில்லை அவரின் சோகம்! கணவர் விபத்தில் மூளை சாவு அடைந்தவர் அதனால் அவரின் உறுப்புகளை தானம் செய்துள்ளார்!! என்று கேட்டபோது அவர்மேல் கருணையும்! மரியாதையும்! அதிகரித்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அவர் கூறியதை அடித்து திருத்தி பல முறை எழுதி பார்த்தேன், எதுவுமே கோர்வையாய் வரவில்லை.

கடைசி மூன்று மாதங்கள்:

ஆண்டு விழாவில் என்னையும் இன்னும் சிலரை ஒரு பட்டிமன்றம் நடத்த வைத்தார் எங்கள் ஆசிரயர் ஒருவர். ஒரு பக்க கட்டுரை அதை நாட்குறிப்பில் பதிவு செய்தேன். ஒரு ஐந்து நிமிட பேச்சு தான் அது பல முறை ஏற்ற இறக்கத்துடன் பேசி முடிக்க வேண்டும். இன்றும் அந்த நினைவை மறக்க முடியாது, நான் முஸ்லிம் மதத்திற்கு ஆதரவாக பேசினேன் மற்றவர்கள் இந்து கிறிஸ்டியன் பற்றி பேசினர். முடிவில் தீர்ப்பு மத நல்லிணக்கமே என்று முடியும். மேடை ஏறும் போது தான் ஒருவர் எனக்கு தாடி ஓட்டினார். பார்த்ததில் நிறைய பேருக்கு அடையாளம் தெரியவில்லை.கடைசியில் சில வார்த்தைகளை மறந்து நானாய் சில வார்த்தைகளை கோர்வையாய் கூறி சமாளித்தேன். 

முழு தேர்வுக்கு முழு நேரமும் படிப்பில் செலவிட்டாலும் அவ்வபொழுது கிரிக்கியவற்றை படித்து பார்ப்பேன். ஆண்டு தேர்வு முடிந்தது உடம்பெல்லாம் இன்க் தெளித்து ஓடி ஓடி கடைசியாய் மாலதி மேடம் வீட்டிற்க்கு சென்று தேநீர் சாப்பிட்டு விட்டு வந்தோம்.அதன் பின் முழு ஆண்டு விடுமுறை சந்தோஷமாய் செலவிட்டு கழித்ததில் இந்த பொக்கிஷத்தை முழுதாய் மறந்துவிட்டேன். ஆனால் என் கைகளில் இன்னுமொரு டைரி வந்து சேர்ந்தது அதை தான் ஒன்பதாம் வகுப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினேன்.


முற்றும்:

பொக்கிஷத்தை மறந்தேன் என கருத எனக்கு பல வருடங்கள் ஆகி உள்ளது. அப்பொழுதே அந்த பொக்கிஷம் கடையில் எடைக்கு போட்டாயிற்று. கொஞ்சநாள் சிலர் கையில் பொட்டலமாய் இருந்திருக்கலாம் இல்லை வெறும் குப்பையாய் மாறி இருக்கலாம். 

கையில் இருந்தால்தான் பொக்கிஷமா 
மனதில் நிறைந்தாலும் பொக்கிஷம்தான் 
பக்கம் புரட்டும் போது வரும் ஞாபகம் 
சிறியதாய் புன்சிரிப்பை வெளிக்காட்டும் 
காலம் கடந்த நினைவுகள் 
உயிர் எக்கோடி சென்றாலும் மரவதில்லை 
அதை இத்தருணம் எழுதுவேன் என்றும் நினைக்கவில்லை.

இது என் பள்ளிபருவத்தின் ஒரு பகுதி தான்.. மற்றவை நினைவில் பொக்கிஷமாய்...

என்றும் அன்புடன்,
ரசல் 

2 comments:

  1. அருமையான வரிகள். ஏனோ வாழ்க்கையை சிறிது நேரம் பன்னோக்கி எடுத்து சென்று விட்டது…

    ReplyDelete
  2. நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் அவர்கள் ஒரு வேளை இதை படிக்க நேர்ந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள்.

    ReplyDelete