Saturday, February 23, 2013

ஹரிதாஸ் - சிறப்பு ஆற்றல் பெற்ற குழந்தை


குமாரவேல் இதற்க்கு முன் எடுத்திருந்த இரண்டு படங்கள் "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "யுவன் யுவதி". தோல்வி ஒருவனை எந்த அளவு பாதித்து இருந்தால் அவன் வெற்றி அடைய இந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தை கொடுக்க முடியும் என்ற உதாரணம் "ஹரிதாஸ்". ஆச்சரியமூட்டும் தகவல்கள் சேகரித்து சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்க பட்ட கற்பனை கதை என்று முன் மொழிந்திருந்தாலும் இரண்டரை மணி நேரம் தொய்வுறவில்லை திரைகதையில்.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஆட்டிசம் என்பது மூளை குறைபாடு இல்லை அது ஒரு அவர்கள் வாழும் உலகம் என்பது? சிலர் பைத்தியகாரர்கள் என்கிறார்கள், ஆம் நாம் அவர்களை புரிந்து கொள்ளமுடியாமல் பைத்தியகாரனாய் மாறுகிறோம் என்பதை ஆணித்தரமாய் உணர்த்தியது இந்த படம். நம் இந்தியாவில் ஆட்டிசம் படைக்க பெற்ற குழந்தைகளை "special child" என்பதும் அவர்களை பள்ளியில் சேர்த்தே ஆகவேண்டும் என்ற விதிமுறையும் எனக்கு தெரியவந்ததும் இந்த படம் தான்.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்,பள்ளி குரூப் போட்டோவில் சிநேகா அந்த சிறுவனை காமெராவை பார்க்க வைக்க கஷ்டப்பட்டு கடைசியில் அவன் காமெராவை பார்க்க மற்றவர் எல்லாம் அந்த சிறுவனை பார்ப்பதாய் அமைந்த காட்சி போதும் குமாரவேலின் திறமைக்கு.

நம் தமிழ்ப்படத்தில் வெகு சிலரே இந்த திரைபடதிருக்கு பொருந்துவார் என்ற என் கருத்தும் மாறுபட்டு போனது கிஷோரின் நடிப்பில். ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரியாய் ஆகட்டும் தன் பிள்ளையின் மேல் உள்ள அன்பினால் தன் வேளையில் விடுப்பெடுத்து பள்ளியில் மகனுடன் அமர்ந்து நெகிழ செய்கிறார். அவனின் உலகம் என்ன என்று புரிந்து கொள்ளும் இடத்தில் உண்மையான தந்தை பாசம்.

சிநேகாவை பல காட்சிகள் அழவைத்து திரைகதை நகர்திருந்தலும் முதல் காட்சியில் அவரின் படபடப்பும் நடிப்பும் அட போட வைத்தது. சிறவனை காணாமல் ஏங்கும் காட்சியும், அவனை திருடனாய் பார்த்த மக்களிடம் பேசும் வார்த்தைகளும் மனதில் நிறைவாய் பதிந்தது. 

பரோட்டோ சூரி இந்த படத்திலும் அவர் எந்த கேரக்டர் நடிந்திருந்தாரோ அந்த கேரக்டர் ஆகவே தெரிகிறார். அவரின் கொச்சைஇல்லா நகைச்சுவை பாராட்டப்பட வேண்டியது. 

கதையின் மூலகரு ஆட்டிசம்,எந்த வகையிலும் முன் வந்த "தாரே சமீன் பர்" ஹிந்தி படத்தை ஞாபக படுத்த கூடாது என்ற மெனக்கெடல் தான் கிஷோரின் போலீஸ் கதையும். ஒரு குத்து பாடல் போலீஸ் குடி இருப்பில் வந்தாலும் அதில் போலீஸ் பற்றியே வரும் சின்னஞ்சிறு அலுப்புகளை பகிர்ந்ததில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றியது.

விஜய் ஆண்டனி அடடா இளையராஜா கிட்ட கொடுத்திருந்தா பின்னி இருப்பாரே நினைபதர்க்குள் அருமையான பின்னணி இசையில் ஈர்த்து விட்டார். ராஜா முகம்மது எடிட்டர், ரத்தினவேலு கேமரா, லால்குடி ந இளையராஜா கலை இப்படி நட்சத்திர கூட்டணிக்கு கிடைத்த வெற்றி இந்த ஹரிதாஸ்.

திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது திரையை மீண்டும் திரும்பி பார்த்து விடைபெற முடியாமல் விடைகொடுத்து சென்றேன் நான் திரையில் பார்த்த ஹரிதாஸ்க்கு.

என்றும் அன்புடன்,
ரசல்

No comments:

Post a Comment