Friday, February 8, 2013

விஸ்வரூபம்


நான் சினிமா ரசிகன் எதற்காக மூன்று வாரமாய் படமே பார்க்கவில்லை என்று வினவினால்? முதன் முதலில் நான் தோற்றிருக்கிறேன் தனியே படம் பார்க்க சென்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தினால். எதுவாக இருந்தாலும் விஸ்வரூபம் கண்ட உடன் தான் மற்ற படங்களை பார்ப்பேன் என்ற உறுதி. எத்தனை விமர்சனகள் வெளிய வந்திருந்தாலும் ஒரு வரி கூட படிக்க முடியாமல் திணறி இருக்கிறேன். இதற்காக வலைதளத்தையும் புறக்கணித்து இருக்கிறேன். மற்ற படங்களை போல் விமர்சிக்க கமல் படம் ஒன்றும் தமிழ் படம் இல்லை. இது ஆங்கில படம் நமக்காக தமிழில் வெளிவந்திருக்கிறது. ஆதலால் கமலின் உன்னத படைப்பிற்கு தலை வணங்கி நான் ரசித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

விஸ்வரூபம் ஆச்சரியங்களும் புரிதல்களும்:

திரைப்படம் ஆரம்பத்திலயே கதையின் ஆழம் கருதி எம் படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்று செம் தமிழில் அறிக்கை நெகிழ செய்தது. 

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் `உலகின் எங்கோ மூலையில் ஒரு இயற்கை நிகழ்வு ஏற்படலாம்` எனபது "கயோஸ் தியரி" அது தான் தசாவதாரம். பெயர் போடும் போதே புறாக்களின் சிறகடிப்பில் விஸ்வரூபம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே புறாக்களும் அதன் சத்தங்களும் துளியமாய் அரங்கை அதிரடிக்கிறது.

தமிழ் திரைப்படங்கள் பாதியில் இருந்து பார்த்தால் புரிந்து விடும் என்ற கேளிபேச்சு இந்த படத்தோடு முடியட்டும். கண்டிப்பாய் அரங்கிற்கு அரை மணி நேரம் கடந்து வரும் எவருக்கும் படம் புரிய வாய்ப்பே இல்லை. 

அதே போல் அந்த அரை மணி நேரம் விஸ்வநாத் என்கிற கதக் நடிகனை பார்த்தாலே போதும், நடிப்பு என்றால் என்ன என்று. ஓடுகிறான்,நடக்கிறான்,பேசுகிறான் பெண்ணியத்தோடு என்பவர்க்கு ஒரு கொட்டு அது பரதமாய் வாழ்கிறான் என்று பொருள்.

முதல் சண்டை கண்டிப்பாய் பார்பவர்களுக்கு இது தான் மாஸ் என்று புரியும். எங்கே கண் மூடி திறப்பதற்குள் சண்டை முடிந்ததா என்று ஆச்சரிய பாடுபவர்க்கு படத்தில் பதில்களும் உள்ளது.

எழுத்துரைக்கும் உச்சரிப்புகளை எழுதியதும் கமல், அதில் நையாண்டியும் உண்டு நாசுக்கும் உண்டு. நீங்க நல்லவரா கெட்டவரா கேள்விக்கும் விடை கொடுத்திருக்கிறார்.

கலை இயக்குனர் இளையராஜா பெயர்க்கு ஏற்றார் போல் கமலின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு சானு வர்கீஸ் அமெரிக்காவையும் ஆப்கானையும் அழகும் அழுக்குமாய் புழிதியாய் படம் பிடித்து நிறைவை ஏற்படுத்தி இருக்கிறார்.

எடிட்டிங் மகேஷ் நாராயண் இவர் இல்லை என்றால் கமலின் கதை சொல்லிய விடம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இசை அதிலும் "அணு விதைத்த பூமியிலே" பாடல் இனிமையின் உச்சம் காட்சி படுத்தியதில் பளார். இது மக்களை மக்கள் நேசிக்க வேண்டிய இடம் என ஓடும் இடமெல்லாம் குண்டும் துப்பாக்கி சத்தமுமாய் கமலின் குரல். அன்பே சிவம் வரிசையில் இந்த பாடலும்.

அண்ட்ரியா பூஜா மற்றும் பலர் கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒரு கலைஞன் என்று விஸ்வரூபம் எடுக்கிறான் அங்கே அவனின் படைப்பை முடக்கும் போது. இங்கே அடிப்பட்டாலும் தமிழின மக்கள் பெருமை படவே தன் உதிரம் சுண்டும் வரை போராடி வெள்ளித்திரையில் விஸ்வரூபம் அடையும் கமலுக்கு நன்றி.

இங்கே இன்னும் சிலரை இப்படம் எடுத்தமைக்காக வாழ்த்துக்கிறேன். 

Produced by
Andrew Greve .... consulting producer

Original Music by
Shankar Mahadevan
Loy Mendonsa
Ehsaan Noorani

Cinematography by
Sanu Varghese

Film Editing by
Mahesh Narayan

Production Design by
Boontawee 'Tor' Taweepasas

Art Direction by
Ilayaraja

Costume Design by
Gautami Tadimalla

Production Management
Dan Campbell .... production manager

Second Unit Director or Assistant Director
Azad Alam .... assistant director
Ike .... assistant director
C.S. Karthikeyan .... assistant director
Krishna .... assistant director
Praveen Kumar .... assistant director
Rajesh M. Selva .... assistant director
Jude S. Walko .... assistant director
Lee Whittaker .... second unit director

Art Department
Shelly Newman .... property master

Visual Effects by
Vikas Surajbali Nag .... digital compositor

Stunts
Steven Dutton .... stunt driver
Shelly Newman .... stunt driver
Lee Whittaker .... stunt coordinator

Camera and Electrical Department
Dan Irving .... still photographer
Jonathan Sessions .... grip

Costume and Wardrobe Department
Preethi Kanthan .... assistant costume designer

Transportation Department
Steve Dutton .... picture car coordinator

Other crew
Jose Mas Perez .... location intern
Rajesh M. Selva .... script supervisor
Edward A. Sherman IV .... assistant location manager

உங்கள் அன்புடன்,
ரசல்

No comments:

Post a Comment