Saturday, July 20, 2013

மரியான் - சாவே இல்லாதவன்!

பரத் பாலா:

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளை பயன்படுத்த தேவையில்லை எளிமையான கதையை கூட கதாபாத்திரங்கள் வென்று விடுவர் என்று மரியான் படம் மூலம் பரத்பாலா விவரிக்கிறார். அப்படியென்ன விதிகளை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதெல்லாம் படத்திற்கு பெயர் போடுவதற்க்கே முப்போது நொடி கிராபிக் காட்சிகள் தேவை படுகிறது இங்கே ஒரே காட்சியில் தங்க நிறத்தில் மரியான் என்று பெயர் போடப்படுகிறது. படத்திற்கு ஏன் இந்த பெயர் அதை எடுத்த எடுப்பிலே மரியான் குறிப்பிடுகிறார்.

மரியான் - சாவே இல்லாதவன்!

இப்படி கதையின் ஆரம்பம் என்று மட்டும் இல்லாமல் எதற்குமே எதார்த்தத்தை மிஞ்சாத வகையில் படம் நகர்கிறது. கொம்பன் சுறா பாடல் சினிமாதனத்தை காட்டினாலும் மற்ற இடங்களில் இது வெறும் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாக தான் நான் பார்க்கிறேன். உதாரணம் சிறுத்தையை முன்னோட்டத்தில் பார்த்துவிட்டு சண்டை காட்சியை எதிர் பார்த்து வந்தால் அது நம் முந்தைய படங்களினால் பழக்கப்பட்டது தான் காரணம். சிறுத்தை கம்பீரமாய் காட்சியளிக்க இங்கே அது கானல் நீரை போன்று கதாநாயகனுக்கு பயத்தை தருகிறது. தன் விளம்பர படங்கள் மற்றும் ஆல்பங்கள் கொடுத்த தைரியத்தில் நானும் கதை சொல்வேன் என்று நிருபித்திருக்கிறார். அடுத்த முயற்சிகள் அனைவரையும் கவரும் என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

தனுஷ்:

ஹிந்தியில் இப்போது தான் அனைவரும் அனாசிய நடிப்பு என்று பாராட்டுகள் குவிந்தது. நான் சவால் இடுகிறேன் தனுஷின் உண்மையான நடிப்பு திறமை எதுவென்று இந்த படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் பாதியில் சுருக்கிய முகம் கடு கடு வென முரட்டு தோல் போர்த்தி கடலில் வேட்டையாடும் மரியான் பிற்பாதியில் காதலுக்காக உயிருக்காக கடலுக்காக உயிர் போய் உயிர் கொடுத்திருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்ட வாழ்த்துரைகள் தேவையில்லை மெய்சிலிர்க்கும் அக்கணங்களே போதும். 

படத்தின் முதல் பாதியில் நண்பனை இழந்து காதலியை அடித்து விட்டு மீண்டும் காதலியிடம் நான் வேற யார்கிட்ட காட்டுவேன் என்று முரட்டு கோபத்தையும் பொய் கோபத்தையும் காட்டும் தனுஷ் சபாஷ் என்று நினைக்கையில். இரண்டாம் பாதியில் நண்பனுக்கு காற்றில் வெறும் தரையில் தலை வாழை இலை போட்டு, மீன், மிளகு சோறு பரிமாறி, கள் குடித்து, பீடி பிடிக்கும் இடத்தில் வார்த்தைகள் இல்லை சில நொடிகள் திகைத்தே நின்றேன். இவ்வருடம் இவ்வளவு நடிப்பில் இது வரை படம் வரவில்லை இன்னும் வராத பட்சத்தில் தனுஷின் வீட்டில் இன்னும் ஒரு தேசிய விருது நிச்சையம்.

பார்வதி:

பூவில் பார்த்த பார்வதி இவள் இல்லை. இவள் பனிமலர் வாடிய பூக்களை கண்ட போதெல்லாம் வாடினேன் இங்கே இந்த பனிமலரின் காதல் காதலனுக்காக உணர்வாய் உறைந்து கிடக்கும் நடிப்புதான் அடுத்த பலம். வெறும் கண்ணீர் விட்டு கதறல் இல்லை நடிப்பில் உச்சரிப்பில் கண்களில் உள்ளது நடிப்பு.

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த விடைபெறும் காட்சி இங்கே ஒரு தொலைபேசி அழைப்பில் இன்னும் பலவருடங்கள் நினைவில் இருக்கும். பனி... மணி.. எல்லாம் முடிஞ்சு போச்சு... தனுஷின் கலங்கடிக்கும் நடிப்புக்கு நிகராய் பார்வதியின் நடிப்பு. சற்று கலங்கிய கண்களில் தான் அதன் பின் வந்த காட்சிகளை பார்த்தேன். இதில் லாஜிக் அத்துமீறல்கள் தென்பட்டாலும் உயிர் போகும் முன் காதலியிடம் பேச நினைக்கும் ஆண்கள் எத்தனை அதில் ஆபத்தில் இருக்கும் காதலன் கண்டிப்பாய் அழைப்பான் என காதலிகள் எத்தனை? இந்த கோணத்தில் பார்க்கும் போது அந்த காட்சி என்னை மிகவும் ஈர்த்தது.


இசைப்புயல் மற்றும் ஒளிபதிவாளர் மார்க் கோநிக்ஸ்:

பாடல்களில் "இன்னும் கொஞ்ச நேரம்" "நேற்று அவள் இருந்தால்" "எங்க போன ராசா" இரவில் காதருகே மெல்லிய இசையில் கேட்டு பழகிய எனக்கு ஒளிபதிவாளர் எடுத்திருக்கும் பல காட்சிகள் அசைபோட்டதாய் தெரிந்தாலும், காரணம் அவரில்லையே அவருக்கு பாடல் காட்சிகள் எடுப்பது புதிது என்பதால். வெள்ளைகாரனை பாடல் காட்சி எடுக்க வைத்தது நம் தவறு. ஆனால் ஒளிபதிவாளர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சியை படம் முழுக்க காட்சி படுத்திய விதம்தான் தனுஷ் பார்வதி நடிப்பை பாராட்ட தூண்டியது. அதற்கும் முக்கிய காரணம் இசைப்புயலின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. 

படம் முழுக்க லைவ் ஆடியோ ரெகார்டிங் செய்ததால் சுற்றி அடிக்கும் கடலின் அலையும் கேட்கிறது சூறாவளி காற்றின் வீரியமும் தெரிகிறது. மொத்தத்தில் இசையும் ஒளிப்பதிவும் ஒருகிணைந்த படமென்றே நினைக்கிறேன்.


சில நெருடல்கள்:
முன் கூறியது போல் இயக்குனருக்கு முதல் முயற்சியாய் இருந்தாலும் சூடான் தீவிரவாதிகள் பணத்திற்காக மட்டும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று ஒரே காட்சியில் கூறும் போதே உங்கள் கம்பெனி எங்கள் ஊர் எண்ணையை தான் எடுக்கிறது என்பது போன்ற வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். ரெண்டு பாதியிலும் கதாபத்திர புரிதலுக்கு நேரம் ஒதுக்கியதால் இரண்டரை மணி நேர படம் மிகவும் நீளமாய் தெரிகிறது.

வாழ்த்துக்கள்:
பண்பட்ட நடிகராய் மாறி இருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவின் "நாளைய மரியான்"

என்றும் அன்புடன்,
ரசல்

Thursday, July 18, 2013

கவிஞர் வாலிக்கு அஞ்சலி


கவிஞனின் காதல் வரிகளில்
காதல் வளர்க்கும் இளைய சமூகம்?
உன் எழுத்தினால் காதலிக்கவும்!
வெற்றிபெற்றால் கொண்டாடவும்!
இழந்தால் வலிக்கவும்!

இன்று!
இசையோடு வந்த உன் வரிகள் இல்லாமல்
திக்கு திசையின்றி மௌனமாய்
உன் காலடியில்!
கண்ணீர் அஞ்சலியில்!

என்றும் உன் வரிகளை அசைபோடும்
ரசல்