Monday, February 25, 2013

அமீரின் ஆதி பகவன்

உசுபேத்தல்கள்:
ஆதி பகவன் என்ன கதை? அமீர் என்ன சொல்ல போறார்? அப்படி ஏன் ரெண்டு வருஷமாச்சி? யுவன் இசையில ஒரு ஹிந்தி பாட்டு ஏன் ஆல்பத்துல வந்திச்சி? இதுக்கு நடுவுல சம்பந்தமே இல்லாம ஹிந்து கடவுளோட பேர எதிர்த்து போட்ட சண்டைல ஏன் அமீரின் ஆதி பகவன்ன்னு மாத்தினாரு? A Mafioso Action Love story எப்படி அமீர் கொடுக்க போறார்?

முதல் பாதி:
படம் நன்றி தெரிவிச்ச அடுத்த நிமிஷமே தெலுகுல படம் ஓடுது A Ameer Film ன்னு போட்டப்புறம். ஒரு வேல தெலுகு பதிப்பை பார்க்க வந்துட்டமான்னு நினைக்கும் போது தமிழ் சப்டைட்டில் போட்டாங்க,அப்பாடா! தமிழ் படம் தான். ஒரு பெரிய ஹீரோக்கு கிடைக்க வேண்டிய மாஸ் அறிமுகம் ஜெயம் ரவிக்கு. கொஞ்சம் அவருக்கு அதிகம்ன்னு தோன்றினாலும் அமீர் படம் என்ற ஒற்றை வார்த்தைக்காக என் மனநிலையை மாற்றி பார்க்க ஆரம்பிதேன்.

கொஞ்சமும் நம்ப முடியாத காரணத்திற்காக பட்டயாவில் வந்து தவறான பாதையில் சென்ற மகனை பிரிந்து வாழும் தாய் மற்றும் தங்கை. இதில் நம்ப முடியாத காரணம் பிழைக்க பட்டையாவிற்க்கு வந்தது தான். ஆனால் அங்கு என்ன பிழைக்க முடியுமோ அதில் ஆதியாய் கோவமும் மிடுக்குமாய் ஜெயம் ரவி. இந்த கதாபாத்திரம் கொஞ்சம் தமிழில் நமக்கு பழக்க பட்டதே. அநியாயம் தட்டி கேட்க போய் கரம் பிடிக்கிறார் நீத்து சந்திரா. இப்படி காட்சிகள் அங்கும் இங்குமாய் சரிவர ஓட்ட படாத நிலையில்,தங்கை காதலன் ஒழுக்கமில்லாதவன் என்று தங்கையை வற்புறுத்தி முடியாத பட்சத்தில் தான் அமீரின் திரைக்கதை சூடுபிடிக்கிறது. சபாஷ் என்று நிமிரவைத்து அடுத்த நொடி. இடையில் நீத்து சந்திராவின் மூலம் காப்பாற்ற பட்டு திருமணம் செய்ய மும்பை வருகிறார்.

இதுவரை அமீரின் படங்கள் முன் பாதி சுமார் என்று சொல்ல பட்டதில்லை. இந்த படம் சுமார்க்கும் ஒரு படி கீழே இறங்கியதற்கு காரணம் காட்சிகளின் அங்கும் இங்கும் அலைகழிப்புகள். இதனால் அமீர்க்கு action படம் ஒத்து வராது என்று தோன்ற பெற்ற நிலையில் தான் கதையின் முக்கிய திருப்பம், மும்பையில் பகவான் ஆம் இன்னுமொரு ஜெயம் ரவி. அதுவும் திருநங்கையாய், கதையில் இப்படி வந்த பின் யோசித்ததில் சரி இதுக்கு முன்னாடி பம்பாயில் அப்படி ஏதோ பண்ணிதான் பட்டயாவிர்க்கு வந்தான் என்ற என் யுகங்கள் சரமாரியாய் வரத்தொடங்கின.ஆனாலும் ஏதோ இருக்கு என்று தோன்றியதும் இடைவேளை.

இரண்டாம் பாதி:
சபாஷ்..... இப்போ தான் படமே. உண்மையில் அமீரின் உழைப்பு தெரிந்தது. கதையை நகர்த்திய விதம் இரண்டாம் பாதியில் கெளப்பிடான்யா என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஜெயம் ரவிக்கு இது போல் படம் அமைந்ததில் உண்மையில் வெற்றி தான். திருநங்கை கதாபாத்திரத்துக்கு தேவையான அணைத்து நெளிவு சுளிவுகள் அடடே "ஹான்". பரபர கிளைமாக்ஸ் முன்னாடி வரும் அகடம் பகடம் ஹிந்தி பாடல் நன்றாய் இருந்தாலும் தேவையே இல்ல அந்த நேரத்துல. அமீரால் action படம் கண்டிப்பா கொடுக்க முடியும் இதை நான் கண்டிப்பாய் சொல்கிறேன். ஆனா பழக்க பட்ட கதை அவ்ளோ தான். கொடுத்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறது. சில லாஜிக் அத்துமீறல்கள் மசாலா படத்திற்கு உரியன, அதை தவிர்த்து வெளியே வரும் போது படம் நன்றாய் இருந்தது இரண்டாம் பாதியினால் இல்லையேல் படமே இல்லை.

சில பதியப்பட வேண்டியவைகள்:
நீத்து சந்திரா - இரண்டாம் பாதியில் ஜெயம் ரவிக்கு அடுத்து உழைப்பை கொட்டியவர். தீயவர் கூட்டணியில் இருக்கும் அனைத்து பெண்களை போல் குடிக்கிறார், ஊதுகிறார் மற்றும் சண்டை போடுகிறார். சண்டை காட்சிக்கு தனி பாராட்டுக்கள் ஏனென்றால் நாமெல்லாம் சாக்கி சான் படத்துல வர கதாநாயகி சண்டை போட்டு தான பாத்திருக்கிறோம் இல்லையேல் முடியை பிடித்து இரண்டு பெண்கள் சண்டை போடுவர்.அப்படியேதும் இல்லாமல் ஆம்பளைக்கு நிகரா சண்டை போடும் இவர் வரவேற்க படவேண்டியவர்.

யுவன் இசை - ஐய்சலம் ஐய்சலம் பாடல் அருமை அதற்க்கு நடனம் ஆடிய ஷாக்ஷி அதனினும் அருமை.நல்லதொரு நடன இயக்கம். மற்ற பாடல்கள் சுமார் இருந்தாலும் பகவான் ராப் நலம். பின்னணி இசை சத்தமாய் இருந்தது ஆனால் மற்ற படங்களை போல் இல்லை.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் அந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகமாய் இருந்ததால். மற்றபடி அமீரின் முந்தைய படங்கள் முடிந்து வரும் போது வரும் அழுத்தம் மட்டுமே வரவில்லை. ஆனால் தன் முந்தைய படைப்புகளுக்கும்(கவனிக்க- படைப்பு) இந்த படத்திற்கும் மாறுபட்ட களத்தை தன்னால் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதால் இதுவும் அவருக்கு வெற்றி தான்.

என்றும் அன்புடன்,
ரசல் 

No comments:

Post a Comment