Monday, May 18, 2015

ஓகே கண்மணி - என் பார்வையில்

ஒரு முறை என்னுடைய whatsapp status "காதலை காதலால் தவிர காதலாய் கூற முடியாது" என்பது தான். அதை எப்படி கூறுவது காதல் இனிமையானது என்பதை தவிர. ஆதாம் ஏவாள் காதலை தொடங்கி வைத்தனர் எனபது மட்டும் தான் உண்மை. அட யாருக்கு தான் இல்லை காதல்... இப்படி அடுக்கி கொண்டே போய் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் காதலை திரையில் கண்டால் பொங்குவது மகிழ்ச்சியா கண்ணீரா. ஆம் இரண்டும் கலந்தது தான் அது. அப்படி பட்ட காதலின் மற்றுமோர் பரிமாணத்தை கண்டேன் ஓ காதல் கண்மணி படத்தில்.



மணிரத்தினம்... இன்றுவரை சொல்லாத காதலை.. சொல்லத்தான்.. உருவாக்கத்தின் எல்லையாய் இருந்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு கவிதையோடு கூறி இருக்கிறார். ஓகே கண்மணி என்று கூறும் ஓவ்வொரு நொடியும்.. நமக்கு நாமே கூறி கொள்ளும் ஓகே கண்மணி..ஒன்னும் இல்லை எல்லாம் நலமே என்பது தான். அடடா செதுக்கல்கள் எல்லா இடத்திலும் எல்லா காட்சியின் ஓட்டத்திலும். காதல் கரை உடைந்து ஓடுகிறது. இன்றைய கால கட்டத்தில் மேலை நாடுகளின் தழுவலை கொண்டு இந்தியாவில் எதிரொலிக்கும் கலாசார மாறுபாடு தான் இந்த ஓகே கண்மணி.

அதை கூட எந்த ஒரு சமரசம் இல்லாமல் வார்த்தைப் பேழையோடு ஜாலம் செய்திருக்கிறார் மணிரத்தினம். குடும்பத்தோடு பார்க்கும் படம் அன்று என்று கூறும் அனைவருக்கும் கூறி கொள்ளும் ஒரே பதில் முதலில் திரை அரங்கிருக்கு வாரும் பின் பேசி கொள்வோம். இன்றைய சமுதாயம் மௌனராகம்,இதயத்தை திருடாதே,அலைபாயுதே அன்று, அது ஓகே கண்மணி என்று புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

ஏ ஆர் ரஹ்மான் இசை கவர்ந்தது முதலில். ஆனால் படத்தை கண்டபின் அது பீ சீ ஸ்ரீராம்,ஏ ஆர் ரஹ்மான்,மணிரத்தினம் கூட்டணியின் எல்லை இல்லா உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் என்பதை உணர்ந்தேன். 

நடிகர் நடிகையர் என்று வரை பிரிக்க முடியாமல் ஒவ்வொருவரும்  தங்கள் நடிப்பு திறமையால் உயிர் ஊட்டி உள்ளனர் இந்த படத்திருக்கு.

ஓகே கண்மணி திரைப்படம் ஒரு காலப்பெட்டகம் எப்போது காதலை பூரித்து கொள்ள நினைக்கிறீர்களோ அன்று மீண்டும் உங்கள் கானொளியில்.

என்றும் காதலுடன்,
ப.இரசல் 

No comments:

Post a Comment