Monday, December 17, 2012

பில்லா

பில்லா முதல் பாகத்தில் ராஜ்கண்ணன் எழுதிய வரிகளில் ஆரம்பிக்கிறது பில்லா இரண்டாம் பாகம். 
"டேய் என் வாழ்க்கையல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கனுதுடா..."
முதல் பாகத்திருக்கு எந்தவகையிலும் பங்கம் விளைவிக்காத இரண்டாம் பாகம் என்றே சொல்லலாம். இயக்குனர் சக்ரி மற்றும் உதவி கதை ஆசிரியர் எரிக் எழுதிய முழுக்க முழுக்க தமிழில் எடுக்க பட்ட ஆங்கில திரைக்கதை. படத்தில் லாஜிக் பார்த்தால் நான் தல ரசிகன் இல்லை. ஆனால் ஒரு ஆங்கில படமென்று பார்க்கும் போது முக்கால் வாசி இப்படி நடந்திருக்கும் என்று நினைப்போம் ,அதே பக்கத்தில் அமரும் நண்பர்கள் "டேய் அவனுக்கு என்ன டா ஆச்சி" என கேட்க்கும் போது "அவன காலி பண்ணிட்டான் டா" அப்படி நமக்கு புரிந்ததை சொல்லுவோம். இங்கும் அதே தான் நிகழ்வு தான். நீண்ட நாட்கள் பிறகு ஒரு முறையாவது படத்தின் வசனகர்த்தா ஈரா முருகன் மற்றும் ஜாபர் முருகன் வசனத்திற்காக பார்க்க வேண்டிய படம்.
"அகதிங்க தான அனாதைகள் இல்லையே"
"மத்தவங்க பயம் நமக்கு பலம்"
"கீழ ஒக்கந்திருபவனுக்கு தெரியாது எறங்கி வேல செய்றவனுக்கு தான் தெரியும்"
மற்ற வசனங்கள் முன்னோட்டதிலயே பார்த்துட்டு இருக்கோம். வில்லன் அறிமுக சடுன்ட் மிரள வைக்குது.  இப்போ வர படத்தில எதுல கதை இருக்கு ஒரு வரி கதையை எப்படி படமா எடுக்கிறாங்க என்பதை தான் தலை படத்தில் தலையை முன்னிறுத்தி 129 நிமிட படம். பாட்டெல்லாம் மூணு நிமிஷத்தில முடிஞ்சிருது. முக்கியமா பெயர் போடும் போது கூட வெறும் நிழற்படத்திலயே பில்லா ஏன் முரண் பாடனவன் என்று கூறியதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தது ஆனால் அடுத்த காட்சிக்கு ஒட்டவில்லை என்ற குறை தான் மற்றவர்களுக்கு ஏனோ மொக்கை என்று தோனுகிறது என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை தலை ரசிகனை தலைக்கு தலை வணங்குகிறேன் ஏன் என்றால் மிகவும் அழுத்தமான வசனங்களை அதற்கேற்ற உணர்ச்சியோடும் உச்சரிபோடும் பேசியதற்க்கு. மற்ற ரசிகர்கள் என்ன கூறினாலும் இந்த படமும் தலைக்கு மகுடம் தான்.

ரசிகனாய்
--
Yours,
Rasal

No comments:

Post a Comment