Monday, December 17, 2012

சாட்டை

சாட்டை 
பிரபு சாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் வசனம் எனும் சாட்டையால் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அடி விளாசி இருக்கும் படைப்பு. 
பராசக்திக்கு பின் மிக நீண்ட வசனமான 
"கடைகோடியில இருக்குற ஆதிவாசி மகன்ல  இருந்து பணக்கார பசங்க வரைக்கும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாதுன்னு schools la uniform கொடுத்திருக்காங்க அவங்கள rank படி ஒக்கராம பிடிச்ச இடத்துல உக்கார சொன்னேன் அது தப்பா...
வீட்டுக்குள் ஒரு பள்ளி வேணும் பள்ளிக்குள் ஒரு வீடு வேனும்னுன்றதுக்காக வாத்தியார் வர வர வரைக்கும் நிக்க வேணாம் ஒக்கார சொன்னேன்...
கடவுள் மனுஷனுக்கு கொடுத்த வாரம் பேச்சு பேசாம இருந்தா கெட்டு போயடுவீங்கன்னு பசங்களும் பொண்ணுகளும் பேசுங்கன்னு சொன்னேன் ஏன் அத விட jail பெருசுன்னு நெனக்க கூடாதுன்னு..."
அது ஒரு ரெண்டு நிமிஷ வசனம் அதுக்கே இயக்குனரை ஆற தழுவி வாழ்த்தனும். இப்படி படம் நெடுக்க கைதட்டல் வசனங்கள் திரை அரங்கில். கடைசியாய் "ஏணியை கூரை மீது போடாதீர்கள் வானத்தை நோக்கி போடுங்கள்" என்று முடியும் போது சமீப காலங்களில் சண்டை காட்சிகளில் வராத மயிர் கூச்செறியும் சம்பவமும் நடந்தது. 
சினிமாத்தனம் இல்லாமல் படத்தை ரெண்டு மணிநேரம் கொண்டு போக முடியாது அதற்க்கு இந்த படமும் விதி விலக்கல்ல. ஆனால் அதையும் மீறி படத்தை ஒரு மாணவனாய் பார்த்தால் ஒரு ரகம் ஆசிரியராய் பார்த்தால் பல ரகம். சமுத்திரகனி தயாளன் ஆசிரியராய் வாழ்ந்து என் பல முன் மாதிரி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். 
அன்பழகன் நீங்க நல்லா வளரனும்....ஆல் தி பெஸ்ட்.....

No comments:

Post a Comment