மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் நினைவோடு
கவியின் முரசு பாடலும் நானும்!
நான்:
உனக்கென்ன பாரதி நீ எழுதி விட்டாய்..
நீ பிறந்த தமிழகத்திலே
சாதி வன்கொடுமைகள்?
பார்ப்பனாய் பிறந்து
சாதி ஒழிப்பு பாடல்கள்
உன் சினங்கெழ தோலுரித்தாய்! தொகுபுரைத்தாய்!
சாதி வளர்க்க இங்கே தமிழன்
கட்சி வளர்க்கிறான்
சாதி இல்லை என்று சொல்லி
ஒருவன் சாதி வளர்பவனுக்கு
தண்ணீர் ஊற்றுகிறான்!
இது புரியா ஒரு கும்பல்
குடிசைகளை தீக்கு இறையாக்கிறான்
குடும்பங்களை நாசமாக்கிறான்!
கேள்வி கேட்டால் கட்டி உதைக்கிறான்
எட்டி மிதிக்கிறான்!
பாரதி தமிழ் பற்றி படிப்பவர்கள் கூட
பாரதத்தில் வாழும் தமிழனை கண்டுகொள்ளவில்லை
ஏளனம் செய்தான்!
மீன் பிடித்து வாழும் தமிழனை கொன்றாலென்ன
சிறை பிடித்து சென்றாலென்ன?
வாய் வார்த்தை போராட்டம் மட்டும் தான்
மறத்தமிழனின் உடன் பிறப்பா?
நீயோ அன்று கொட்டு முரசே என்று பாடி விட்டாய்!!
நீ இன்றிருந்தால் உன் கொட்டு முரசை
"மீன் பிடி மீனவனும்
விவசாயம் செய்யும் உழவனும்
பணம் தேடி அலையும் எந்த ஒரு உயிரும்
ஒன்றென இப்பூவுலகில் காணீர்"
என்றிருப்பாயோ?
என்றும் அன்புடன்,
ரசல்
No comments:
Post a Comment