கண்ணெல்லாம் பூத்திடுச்சு முன்பதிவு செய்த பேருந்திற்காக!
தீபஒளி கண்கவர் வான வேடிக்கை தொடர் இடி சரவெடிக்கு ஓடி ஒலியும்
சிறார்க்கு மத்தாப்பு இருந்தால் பொல்லாப்பு விலகிவிடும்!
காத்திருந்து வந்த பண்டிகையை சேர்த்து வைத்த சந்தோஷத்தை பகிரதானே இனிப்புகள்!
புது உடை வளம் வர நெடுநடை கடையை சுற்றி
எண்ணம் பிடித்த உடை எடுத்து பிம்பம் சரி பார்த்தே தேர்வு செய்து
உலா வரும் நண்பர்களே!
விழாகோலம் கொள்ளும் நேரம் தொலைக்காட்சி பாராமல்
பகிர்ந்திடு இந்த உணர்வை உன் நா சுவையோடு!
தீபஒளி வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment