Wednesday, November 24, 2010

சில்லுனு இருக்குதுப்பா

விடியல் வரும் முன்னே எழுந்த நான்...
சுற்றும் முற்றும் கண்களை விரல் விட்டு ஆட்டி விழிக்க முற்படுகிறேன்...
சோம்பல் என்னை முரிக்கவே நான் மீண்டும் உறக்கம் வந்து உறங்கிவிட்டேன்..

சற்று நேரம் கழித்து என்னை எழ சொல்லி காதருகே ஒரு குயில் கூவியது....
குயிலை முறைத்து கொண்டேன் அமைதியானது ஒன்பது நிமிடம் கழித்து..
குயில் மீண்டும் கூவியது.. என் மணிகூண்டு குயில்...
இந்த முறை ஓங்கி அறைதேன் அவ்ளோ தான் சுற்றும் அமைதி..

களைந்து விட்ட தூக்கம் அறிந்து குறுந்தகவல் புரட்டினால் இன்னும் ஐம்பது நிமிடம் தான் அதற்குள் பணிக்கு கிளம்ப வேண்டும்....
குனி நிமிரு குதி இவைதான் நான் அறிந்த உடற்பயிற்சி முன்னும் பின்னும் முரண் செய்து...

ஒருவேளையாக குழாய் திருகி தண்ணீரை தொட்டால் சில்லுனு இருக்குதுப்பா..
தண்ணிய சுட வச்சி பல் வெலக்கி குளிச்சு வெளிய வந்தா இருபது நிமிஷம் போச்சா...

தரையில் அமர்ந்து இஸ்திரி செஞ்சா தரையும் சில்லுனு இருக்குதுப்பா..
ஒரு வழியா டிரைவர் போன் பண்ணி அடுத்த பிக்குப் நீங்க தான் சொன்ன உடனே வெளிய போனா...

முடியல ரொம்ப சில்லுனு இருக்குதுப்பா....
ஆனா அந்த நேரம் காலை நேரம் வந்தாங்களே பாருங்க எங்க மக்கள் ... ejipura military parade பாக்கவே ரொம்ப சிலிர்க்க வச்சிடுச்சு..

அவங்க சுட தண்ணீர்ல குளிக்கல alarm வச்சி எழுந்திரிக்கல நாம IT மக்கள் என்ன பண்ணிட்டோம்.. பெருமையா சொல்லிக்க?????

தூக்கம் வந்துச்சி ஆபீஸ் டைம்ல் எழுதி புட்டேன்... எனக்கே என்ன நெனச்சா இப்போ சில்லுனு இருக்குதுப்பா...

No comments:

Post a Comment