Thursday, April 16, 2009

நட்பு பாராட்டுவோம்

சக்கரை பாகில் கலம் பிரிக்க ஊற்றப்பெற்ற பாலாய்!
பாலில் நீர் பிரித்த அன்னப்பறவையாய்!
என்னோடு நகையாடியவர்களை தரம் பிரிக்கிறேன்!
வீட்டுப்பாடம் முடிக்க உதவிய நன்பனை!
முட்டிபோட்டும் வலியை கூட எள்ளி நகைத்தவன்!
தேர்வு மதிபென்னை கூட்டி போட்டு வெற்றி பெற செய்தவன்!
மனப்பாட செய்யுளையும் பின்னால் இருந்து எடுத்துக் கொடுத்தவன்!
பள்ளி முடிந்தும் வீடு வரை பேசியே தூரம் அகலவைத்தவன்!
கல்லூரி பேரூந்து நிறுத்தத்தில் என் வருகைக்காகவும் காத்திருந்தவன்!
அமரும் இருக்கையில் தன் பையை போட்டு இடம் பிடித்தவன்!
வகுப்பறையில் காலை வணக்கம் கூறி புத்துணர்வு ஊட்டியவன்!
ஆசிரியர் இருந்தும் என் மதிய உணவை சுவைத்தவன்!
சில சமயம் கல்யாண தரகர் போல்!
பல நேரம் கல்வி கண் திறந்தவரை போல் !
அழ வைத்தாலும் என்னை புரிந்தவர்கள்!
ஏங்கி பிரிந்தாலும் இவர்கள் ஆழ பதிந்தவர்கள்!
இதில் குறிப்பிட்ட அவன் நட்பாம் அவர்கள் இங்கே நண்பர்களாம்
பள்ளியில் கல்லூரியில்!

No comments:

Post a Comment