Monday, January 27, 2014

கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா பருகி இருக்கிறீர்களா?? இதோ திரையில் பசங்க படத்தின்  நாயகர்களின் இன்னொரு பரிமாணம். பசங்க படம் எவ்வளவு தூரம் பள்ளி பருவம் மற்றும் பக்கத்து வீட்டு கதையை பார்ப்பது போல் இருந்ததோ, இதுவும் அப்படிப்பட்ட படம் தான்.



எனக்கு புரிந்தமட்டில் பாண்டியராஜின் மரினா கதைகளம் ஏற்படுத்தாத உணர்வை, இங்கே பாண்டியராஜின் வசன உதவியோடு விஜய் மில்டன் தன் திரைக்கதை ஆளுமையாலும் கேமரா கோணங்களாலும் ஏற்படுத்தி இருக்கிறார்.

கதை அனாதைகளின் வாழ்க்கையில் பயணிக்கிறது ஆனால் மாஸ் படம் அளவிற்கு நம் பசங்க வளர்ந்து விட்டது பார்க்க முடிந்தது. பல இடங்கள் சபாஷ் சொல்லும் அளவுக்கு வார்த்தையாலும் காட்சியமைப்பாலும் கட்டி போடுவது மறுக்க முடியாத உண்மை. 

படத்தில் பிண்ணனி இசையும் பாடல்களும் முழுமையாய் ஒட்டா விட்டாலும் கதைகளத்தை விரட்டி செல்வதில் சீலின் மற்றும் அருணகிரியின் பங்கு மிகவும் உள்ளது. 

அந்தோனியின் எடிட்டிங் எப்பொழுதும் போல் இருந்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இடைவேளைக்கு முன் வரும் அடிதடி காட்சி மிரட்டல் அடி.

இங்கே இன்னும் இரண்டு பேர் பற்றி கூற வில்லை நன்றாக இருக்காது, கதையில் வரும் இரண்டு கதாநாயகி பிள்ளைகள் சின்னபொண்ணுங்க அப்படியும் சொல்லலாம். அவர்களில் ஒருவர் சிறந்த நடிப்பு மற்றொருவர் சிறந்த கதாநாயகி.மற்ற அனைவருக்கும் பங்கிட்ட வேலை அதிலும் வில்லன்கள், ஆச்சி, இமான் அண்ணாச்சி அவர்களின் பங்கு மிகை.

மொத்தத்தில் கோலி சோடா உடைக்கும் போது வரும் சத்தம் தந்த உணர்வோடு உள்ளே பானமும் அருமை.

அன்புடன்,
ரசல்

No comments:

Post a Comment