Saturday, April 2, 2011

எதற்கு?????

விழிகளில் வழிந்தோடும் நீர் எதற்கு
இமைஎனும் தடை வந்தும் பெருக்கெதற்கு!

நெஞ்சம் எனும் புத்தகத்தில் முன்னரை எதற்கு
குருதி எடுத்து எழுதிய போதும் உணர்வெதர்க்கு!

சேருமிடம் சேர்ந்து வலிகள் தீர்ந்து களிபெதர்க்கு
உயிரில்லை உன்னிடம் என்ற விளிபெதர்க்கு!

தன்னிலை மறந்த உயிரெதற்கு
உன்னிலை அறியா இந்த வாழ்வெதற்கு!

எதற்கென்று தெரியாமல் இந்த காதல் எதற்கு!

No comments:

Post a Comment