Sunday, November 15, 2009

முடிவு என்றுமே சுபமே


எழுத்துக்கள் தோரணம் கட்டின
உன் மனம் தேறும் என்றே!!

சுற்றம் நம்மை இகழ்திடுமோ உன் செயல் என்னை
பாதித்திடுமோ இன்றுன்னை தந்தை இகழ்ந்தாலும்....
சேர்ந்திடுவோம் நாமே பல இன்னல்களை கடந்து.....

பாச போராட்டம் நாளும் உனக்குள்ளே
நேசம் பெருகிடும் நமக்குள்ளே
இந்த இன்னலிலே....

கணம் பெருகிடும் உன் கண்ணீர் துளியும் உரமானது
என் நெஞ்சும் சற்றே ஈரமானது!!

உளம் நிறைய ஆசைகள் பெருக்கி தொண்டை குழியில்
சிக்கி தவிக்கும் வார்த்தைகள் கூட தண்ணீர் மறுக்கும்
நீ என்னை ஏங்கி அழுதாளே!!

கவலை நிறைந்த வாழ்க்கை இல்லை என்றும்
ஆவலை கூட்டிய சூழ்நிலைகள் தான் இன்றும்
உனக்குள்ளே நீ பூட்டிய வார்த்தைகள் சிலிர்படையும்
என்னிடம் பகிர்ந்தாலே!!

தட்டுதடுமாறி முடிவுகள் எடுப்பவர்கள் இல்லை நாம்
விட்டு போகும் என்றும் நாம் ஆரம்பிக்கவில்லை
சேர்ந்து வாழ்வோம் என்ற உணர்வை மட்டும் நம்பி
நம் காதலில் முதற் படி தாண்டினோம்!!

நடந்தவை யாவும் ஆரம்பமே நினைவுகொள் நாளும்
முடிவு என்றுமே சுபமே!!

No comments:

Post a Comment