இயற்கை அன்னை என்னை அழைக்கிறாள் தன்னுடனே இருந்து விடவே!
என்ன ஒரு சுயநலம் அவளுக்கு!
என்னை யாரும் அழைக்கவும் கூடாது என்று!!
என் கைபேசி அலைவரிசையை துண்டித்து விட்டால்!!
ஆனால் என்னக்காக என் உறவுகள் காத்திருக்கின்றனர்!
உன்னோடு ஒரு நாள் இருந்த நினைவுகள் புகைப்படங்களாய் என்னிடத்தில்!
அதை என் உறவுகளும் ரசித்திடுவர் நீயோ சுயநலவாதி!
நான் நினைத்து பார்க்க முடியாத அழகை எனகளித்து!!
வீடு திரும்பும் போது அவர்கள் அழைத்தாள் உன்னை மறந்திடுவேன்
என் கைபேசி அலைவரிசை கிடைத்த உடன்!!