Thursday, March 12, 2015

ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை


முதல் திரைப்படம் வீட்டில உள்ள dvd வெளியிடு. C2H Cinema 2 Home பெயர் சூட்டப்பட்டதிலே விளக்கம் உள்ளது. அதுவும் போக இது சேரனின் படம். ஐம்பது ரூபாயில் திரைப்படம் உங்கள் வரவேற்பறையில்  டிஜிட்டல் 5.1 ஒலியில். 



விமர்சனங்களால் வர்ணிக்கபட்டவர் சேரன் அவருடைய முந்தைய படங்கள் மற்றும் தேசிய விருதுகள் அதற்க்கு எடுத்துக்காட்டு. சமுதாய சீர்திருத்த நோக்கோடு தான் படங்கள் இருக்கும் ஆட்டோகிராப் படம் தவிர்த்து. வசனங்கள் குறிப்பாய் படத்தின் இறுதியில் ஈர்ப்பாய் இருந்து மக்களை யோசிக்க விடும். இப்படி இருந்த சேரனின் ஆட்டோகிராப் பிந்தைய படங்கள் வணிக ரீதியாக ஓடவில்லை என்றாலும் நல்ல கருத்துகளை தாங்கி நின்றது. ஆனால் அவருடைய கடைசி முயற்சி theatre இல் ரிலீஸ் பண்ண முடியாமல் போனது தமிழ் திரைஉலகம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம். ஏனென்றால் இப்போது distributors கையில் தான் ஒரு படம் வரும் வராது என்ற நிலை உள்ளது. சேரன் நடித்த ஆடும் கூத்து என்ற திரைப்படம் தேசிய விருது வாங்கிய படம் திரையரங்குக்கு வராமலே ஜீ தொலைகாட்சியில் வெளியிட பட்டது என்பதே எனக்கு சமிபத்தில் தான் தெரியும். இப்படி முடக்க பட்ட பல திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தன்னுடைய படத்தில் இருந்தே ஆரம்பித்த சேரனுக்கு முதற் கண் நன்றிகள்  மற்றும் வாழ்த்துக்கள்.

ஜே கே திரைப்படம் சேரனின் மற்ற படங்களில் இருந்து இந்த கால சூழ்நிலையில் உள்ள மக்களை குறிவைத்து உருவாக்க பட்ட படம். சற்று தாமதம் ஆனதாலும் அதை பற்றி அதிகம் வலைதளங்களில் பேச பட்டதாலும் சில நேரம் ஏன் இந்த காட்சியை வைத்தார் என கேள்வி கேட்க தோனுகிறது. உதாரணம் நாம் facebook பற்றி அதிகம் படங்களில் பார்த்தது தான். கதை ஒரு நண்பன் தன்னை சுற்றி உள்ளவர்கள் அதாவது பெற்றோர்,தம்பி,தங்கைகள் மற்றும் நண்பர்களுக்காக பணம் சம்பாதிக்கும் ஒரு நலம் விரும்பி அது ஏன் என்பது மட்டும் தான் படத்தின் சுவாரசியம் அதுவும் படத்தின் போக்கில் யூகிக்க முடிகிறது. ஆங்காங்கே பளிச் வசனங்கள் சில காட்சிகளில் நாம் எதை பார்க்க தவருவோமோ அதை சுட்டி காட்டியும் உள்ளார். discovery தொலைக்காட்சி சொல்லும் பறவைகள் கதை உண்மையில் யோசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இல்லை என்றாலும் அனைத்தும் காட்சி கோர்வைகளாய் தான் இருந்தன. சிறிய திரையில் பார்ப்பதால்  ஒளிப்பதிவு பற்றி விளக்க முடியவில்லை. எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அது போலவே இருந்தது. மொத்தத்தில் முயற்சியை பாராட்டும் அளவிற்கு திரைப்படம் பாராட்டும் அளவு இல்லை. ஆனால் சமுதாய கருத்துக்கள் கூற இதிலும் தவறவில்லை.

நன்றி சேரன் 

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

No comments:

Post a Comment